ரவி அல்லது முளைத்துக்கிடந்த அறிவுச் செடிகள் வறண்ட நிலமென கொள்ள வைத்தது கொஞ்சம் காகிதக் குப்பைகளை கையில் திணித்து. பிரபஞ்சம் யாவருக்கும் பொதுவென பொருள் கொண்ட பொழுதும் பெரு மதிப்புக் கருணையைக் காணவே இல்லை உதிர்ந்த சொற்களைத்தவிர. மரபணுவில் பொதிந்த மாறிடாத அன்பை இழந்த தருணமொன்றில் சிலையெனத்தான் வாய்த்தது மலர்தலின் உதிர்தலென. நகலென நாற்புறமோடிய பிள்ளையின் குறும்பினை பேருவகையாக ரசித்தபொழுது நோவினையொன்றிக்காக வழிந்தோடும் கண்ணீர் கடந்த வாழ்வில் புதிதினும் புதிதுதாம். யாவினும் வியத்தலாக நோவினையை எப்புறம் காண்கிலும் […]
வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம் கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]
ரவி அல்லது எனக்குள் இருக்கும்உன் வார்த்தைகளுக்குசிறகுகள் முளைக்கிறதுதிடீரெனகாத்த மௌன இடைவெளியில். திசைக்கொன்றாகபறப்பதில்கலைப்பு மேலிடுகிறதுஆசுவாசங்கொள்ளஅருகாமையைஎதிர் நோக்கியதாகஅன்றாடங்கள்வெறுமையை மென்று. வாய்த்திருக்கும்தனிமைப் பாடில்இருப்பவைகள்யாவும் நேற்றுசொர்க்கமென சுகம்காண வைத்தவைகள்தான். வாசனையற்றவாழ்க்கைஉழல வைக்கிறது.நோதலின்நரகத்தில்விடியலுக்கானவரவின்வேண்டலாகஎஞ்சியிருக்கும்தெம்பில்இந்தஉயிர்எப்பொழுதும்உன் திசை நோக்கியத் தவத்தில். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
வெங்கடேசன் நாராயணஸ்வாமி பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா யமுனா தீரத்தில், ஆங்கோர் தோப்பிலோர் மரத்தடியில் யமுனைத்துறைவன் தன் காதலியைத் தேடிக் களைத்த முகத்துடன் தன் நெஞ்சமதில் பொங்கியெழும் காதலைத் தன் கண்களில் தேக்கி பேசவொண்ணாது அமர்ந்திருக்க, அதைக் கண்ட ராதையின் தோழி அவனருகில் சென்று பின்வருமாறு கூறலானாள்: (1) “மாறனின் கூர் மலர்க்கணைகள் மருட்டும் மங்கையவளை மாறகோடி ஈஶனாம் நீயே காக்கவல்லாய். உன்னையே உள்கி உருகி உன் நினைவாய் எப்போதும் உணர்ச்சிகளால் உவகையுற்று புறவுலகில் உன்னைக் காண ஏங்கியுன் பிரிவாலுழலும் உன் பிரியை […]
ரவி அல்லது குடிசையில்பூத்திருந்ததுஅழகெனவாசனைப்பூயாவரையும்ஈர்த்து.வேலிகளற்றாலும்முட்களின்நம்பிக்கையில்தான் இருக்கிறதுநிறைவாகஉயிர்த்து.
ரவி அல்லது நனைகிறதுநிழல்நடுக்கமாககுளத்தில்.காற்றிலெனஅறியாமல்.
ரவி அல்லது சகதியின் சேறு வாடையில் அய்யாவின் கால் தடங்களில் மூழ்கிய மனம் உழுவதற்கு விலா கோலியது. முற்புதர்கள் மண்டி முகடுகளாக வானம் பார்த்த தரிசு நிலத்தில் நின்றாடும் தண்ணீரின் நித்தியங்கள் யாவும் அய்யாவின் இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில் நின்ற நீர் ஒப்படியாகவே அமைந்து நெகிழ்வில் நாற்றுகளைப் பற்ற இஞ்சாமல் தயாராக இருந்தது. இயந்திர இத்யாதிகளற்ற நாளில் வாரங்களைக் கடந்து வாழ்க்கையே சகதியாக தோல் இறுக்கி இன்று போலல்லாமல் தாளடி நடவு சாகுபடிகள் தாங்கொணா துயரங்கள் […]
வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.32.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: அரசே! அண்ணலைக் காணும் ஆவலால் அழுதனர் உரத்த குரலில், வஶீகரிக்கும் வகையில் பாடியும் பலவாறு புலம்பியும், மணிவண்ணனைக் காண இவ்வாறே இக்கோபிகைகள் ஏங்கியே தவித்தனரே! [ஶ்ரீம.பா.10.32.2] பட்டுப் பீதாம்பரமுடுத்தி பன்மலர் வனமாலையணிந்து பங்கயத் திருமுகம் தன்னில் மோஹனப் புன்னகை மிளிர மன்மதன் மயங்கும் மாறகோடி ஸுந்தரனாய் மதுஸூதனன் அவர்கள் முன்னே தோன்றினாரே! [ஶ்ரீம.பா.10.32.3] பிரிந்த உயிர் திரும்பி வர மிக உவகையுடன் வரவேற்கும் விறைத்தவுடல் போல் அருளால் ஆருயிர் […]
வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.30.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: மாதவன் திடீரென மறைந்ததும் கோபியர் கண்ணனைக் காணாமல் களிற்றைத் தொலைத்த காதல் மடப்பிடிகள் போல் தவியாய் தவித்து நின்றனரே! [ஶ்ரீம.பா.10.30.2] திருமகள்கேள்வனின் பீடுநடை, காதல் ததும்புமின் முறுவல், சுழன்று வீசும் கடைக்கண்ணாடல், உள்ளங்கவர் உவகைமிகு சொல்லாடல் முதலிய திருவிளையாடல்களால் தங்களையே பறிகொடுத்து, மனதால் அவனையே வரித்து, அவனாகவே மாறி, அவனது லீலைகளை அப்படியே நடித்தும் ஆடியும் பாடியும் ஆனந்தித்தனர் கோபியரே! [ஶ்ரீம.பா.10.30.3] தமதன்பனாம் அச்சுதனின் நடையுடை பாவனை, புன்னகை, […]
ஜெயானந்தன் மரத்தின் மடியில் படுத்துக்கிடந்தேன். முகத்தை மூடிய புத்தகம் கனவால் அலைந்த மனசு. சூரியனோடு இலைகள் கொண்ட ஸ்பரிச ஆலோபனைகளின் சங்கீதம் காது மடல்களில் பட்டு உலக மனிதர்களோடு உறவுக்கொள்ள அழைக்கின்றது. விரைந்தோடும் மனிதக்கூட்டம் வணிகப் பாடல்களில் செத்து முடிகின்றது. நடந்து சென்ற தாகூர்தான் என்னை அணைக்க ஓடிவந்தார். அவர் உடல் முழுக்க கவிதை தோட்டம். உள்ளத்திலோ ரவீந்திர சங்கீதம். “நளந்தா அழிந்து விட்டதா” எனக்கேட்டு அழுதார். சாந்தி நிகேதன் கதி என்னவோ எனக்கு தெரியாது. நான் […]