ஆர் வத்ஸலாஒரு சாண் துணை தான்அமையும்உனது நங்கூரமாகஎனபூர்வ ஜென்மங்களில்சலவை செய்யப்பட்ட மூளையுடனேயே பிறந்தேன்பணி, அண்ணனுக்குப் பிறகுகவனித்தார் சற்றுஎன்னைதந்தைஅளவாய்பாசம் செலுத்தினர்சகோதரர்கள்தங்களுக்கு மணமாகும் வரைகொண்டவனும்கூரையும்தூற்றினர் கைகோர்த்துஆண் பெண் நட்பிலக்கணமறியாமடையரைபுறந்தள்ளிதோழியர் உதவியுடன்உற்பத்தி செய்து நானேபாய்ச்சிக் கொண்டேன்எனது நங்கூரத்தை
ஆர் வத்ஸலா கவிதை எழுதுதல் எனது நங்கூரம் என நம்பி இருந்தேன் திடீரென புரிந்தது இன்று அது அப்படி இல்லை என்று கடலில் ஆடிக் கொண்டிருக்கும் ஓட்டைப் படகு மூழ்காமலிருக்க அதில் நிரம்பும் நீரை வெளியே கொட்டுவதைப் போல் நான் செய்து கொண்டிருக்கும் சுய பாதுகாப்பு பணி அது என்று தேட வேண்டும் எனக்கான நங்கூரத்தை இனிமேல் தான்
வாகன இரைச்சலில் சாலைகள் காலடி ஓசையில் பாதைகள் இடைப்பட்ட புல்வெளியில் ஒரு மைனாவாய் மேய ஆசை ———- அவள் தைரியமாகவே உலா வருகிறாள் உரக்கப் பேசுகிறாள் எவர்தான் என்ன செய்யமுடியும்? அவளுக்கென்று ஒருவன் அவனோடு இருக்கும்வரை அமீதாம்மாள்
கோ.வைதேகி பூ பூத்து காய் காய்த்து நிழல் தரும் போதெல்லாம் இல்லாத அழகு பறவை வந்து கூடு கட்டும் போது வந்து விடுகிறது மரத்திற்கு….
ஆர் வத்ஸலா ‘சடசட’ வென்று பெய்து நிற்கிறது கோடை மழைபால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்வெளிச் சுவற்றில் பட்டுகைமேல் தெறிக்கும்தண்துளி சுடுகிறதுசிறு வயதில்பின் கட்டில் இருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல்முற்ற மழையில் தலை நனைத்துஅம்மா வருவதற்குள்அண்ணனும் நானும்ஒருவர் தலையை மற்றவர் துவட்டி விட்டுசாதுவாகஅம்மா தரும் சுக்கு கஷாயத்தைகுடித்த ஞாபகத்தில்எரிகிறதுதொண்டைஎரிகிறதுமனம்கைபேசியில் கூடபிறந்த நாள் வாழ்த்து கூறாத அண்ணனை எண்ணிஅறிவுஜீவி அண்ணனுக்குஇதிலெல்லாம் நம்பிக்கையில்லையெனகணவனிடம் சாக்குச் சொன்னாலும்
ஆர் வத்ஸலா மழைக்கென்ன!வருகிறதுஅதன் இஷ்டம் போல்நிலத்தின் தேவையைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல்காணாமல் போவதும்அதே இலக்கணப்படி தான் அவனைப் போலவே – பொங்கி வழிகிறதுஎன் கோபம்தன்மானம் தொலைத்தநிலத்தின் மீது
வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
வளவ. துரையன் எனக்குத் தெரியும்நீ எப்பொழுதும்உண்மையை நேசிப்பவன்.மண்ணால் சுவர் வைத்துபுறஞ்சுவருக்கு அழகாகவண்ணம் தீட்ட எண்ணமில்லை.வார்த்தை அம்புகளைத்தடுக்க உன்னிடம்வலுவான மனக் கேடயம்வாழ்ந்து கொண்டிருக்கிறது.பொய் மழை பெய்கையில்முழுதும் நனைந்தாலும்புறந்தள்ளிப் போகிறாய்.எதிரி நாகங்களைஎதிர்கொள்ளக் கைவசம்ஆடும் மகுடி உண்டு.ஆனால்துளைத்திடும் முள்கள் கொண்டதோள்களால் தழுவுகையில்என்ன செய்வது?
ஆர் வத்ஸலாநிலவைத் தொட்ட மணித்துளியைசிறைப்படுத்தி காட்டியதுதொலைக்காட்சிசிறு வயதில் நிலாச்சோறு தின்றதைஅசை போட்டார்அப்பாசோஃபாவில் சாய்ந்தபடிகைகொட்டி கொண்டாடினான்மகன்‘பாப்கார்ன்’ தின்று‘கோக்’ குடித்தபடி“அம்மா, பசிக்குது” என்றான்நடைபாதையில் உறங்கி எழுந்தசிறுவன்நீரற்ற கண்களுடன்நிலவை வெறித்தாள்பாப்பம்மா
வளவ. துரையன் என் நட்புக் கோட்டைக்குள்சில துரோகிகள்ஊடுருவி விட்டார்கள்.பசுத்தோல் போர்த்திய புலிகள்எல்லாம் அந்தக் காலம்.இப்பொழுதுபுலித்தோலைப் போர்த்தியபசுக்கள் உலவுகின்றன.ஆனால்பசுக்களின் பார்வையும்பண்பும் கொண்டதாகப்பச்சைப்பொய் பேசுகின்றன.பார்வையில் பாசிபோல்தெரிந்தாலும் விலக்கினால்பாதாளத்தில் சுறாக்கள்.குளக்கரையில் கசிவுஏற்படாமல் காப்பதிலும்கோட்டைச் சுவர்களில்விரிசல் விழாமல்பார்த்துக் கொள்வதிலும்தான்வாழ்க்கையின்சாமர்த்தியம்இருக்கிறதாம்.