ஊருக்குப் போகவேண்டும்

This entry is part 4 of 5 in the series 29 அக்டோபர் 2023

பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், ‘இந்த  மரத்தில்தான் நான் சிறகுகள் பெற்றேன்’ என்று தேடி வருவதில்லை. ஆனால்   மனிதன்? பிறந்த உடனேயே புலம்பெயர்ந்தாலும்கூட பிறந்தமண்ணைத் தேடிவந்து பார்த்துவிட்டுப்போக ஆசைப்படுகிறான். நான் 70ஐக் கடந்துவிட்டேன். என்னோடு பட்டம் விட்டவர்கள், பம்பரம் குத்தியவர்கள், கிட்டிப்புல்லு ஆடியவர்கள், கோலிக்குண்டு அடித்தவர்கள், குட்டையில் மீன் பிடித்தவர்கள், உதைத்தவர்கள், உதைபட்டவர்கள் […]

 நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்தாறு   பொ.யு 5000

This entry is part 2 of 2 in the series 22 அக்டோபர் 2023

   நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார்.  கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து  அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு முறை சொன்னார் அதையே. அவை நிறைந்திருந்தது.  நீலன் வைத்தியர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் அவர் காலத்தைக் கடந்து நம் காலம் பொது யுகம் 5000க்கு வந்திருக்கிறார்.   பெருந்தேளார் விருப்பப்படி சகல நோயும் போக்கி […]

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

This entry is part 4 of 4 in the series 15 அக்டோபர் 2023

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000 அதிகாரபூர்வமாக   ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடைக் காரர் நீலன் மூலிகை மருந்து உருவாக்கி  வெற்றி பெற்றது பெருந்தேளரசால் அறிவிக்கப்பட்டது. அது இப்படி இருந்தது – ஒரு வாரம் முன் துயிலரங்கத்தில் விழித்து எழுந்த வினாடி முதல் நீலன் மும்முரமாக ஆயுள் நீடிக்கும் மருந்து சஞ்சீவினி உருவாக்குவதில் இருக்கிறார். (மேலும்) பிரபஞ்சப் பேரரசர் பெருந்தேளர் அனைத்து உதவிகளும் அவருக்கு ஈந்து தன் […]

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 1

This entry is part 5 of 5 in the series 8 அக்டோபர் 2023

( 1 )  நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு.  “சொல்லுங்க அழகேசன்…” “ஐயா, லோன் அட்வான்ஸ் போட்டிருக்கேன்யா…அது பணமாயிடுச்சான்னு….?” “இல்ல அழகேசன்…இன்னும் பில்லு டிரஷரி போகலை…இன்னைக்கி இல்லன்னா நாளைக்குப் போகும்…” “நாளைக்குள்ள கிடைச்சிதுன்னா நல்லாயிருக்கும்…பிறகு சனி, ஞாயிறு வந்திடுது…” “இவனுக்குள் கோபம் கிளர்ந்தது. ஒரு வேலை தன்னை மட்டுமே சார்ந்து இருந்தால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உடனடியாகச் செய்து கொடுக்கலாம். ஆனால் அப்படியில்லையே? சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், அலுவலர், […]

 நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்துநாலு      CE 5000

This entry is part 1 of 2 in the series 1 அக்டோபர் 2023

  நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்துநாலு      CE 5000 வைத்தியர் பிரதி நீலன்  ஆல்ட் க்யூவில் இருந்து வந்திருக்கிறார். ஆல்ட் க்யூ அவர் வசிக்கும் பிரபஞ்சமாகும்.  நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் காஸ்மோஸ் என்ற பெயர் கொண்டது.  ஆல்ட் க்யூ, காஸ்மோஸுக்கு மாற்றுப் பிரபஞ்சமாகும். Alternate Universe. அங்கே மற்றொரு பெருந்தேளரசர், மற்ற குயிலி, மற்றொரு வானம்பாடி, மற்றொரு குழலன் இன்னும் கோடிகோடி உயிர்கள்   ஆல்ட் […]

நாவல்  தினை – அத்தியாயம் 33 – CE 5000

This entry is part 8 of 8 in the series 24 செப்டம்பர் 2023

இரா முருகன் நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும். விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின்  மின்னஞ்சல் வந்தது. ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது நடப்பில் உள்ளது. அவ்வகையில் இன்றைக்கு விடிகாலையில் பெருந்தேளரசர் ஆணைப்படி குயிலி ஏமப் […]

சுனிதா…

This entry is part 4 of 8 in the series 24 செப்டம்பர் 2023

ச.சிவபிரகாஷ் வருடம் : 2023நூ காவாலயா….காவாலயா…என மகள்கள் பாடிக்கொண்டும்,அம்மாவிடம்(என்மனைவி) தமன்னாவை போல் ஆடிக்காட்டியும்.குதுகலித்துக்கொண்டிருந்தனர்.விஜய் ரசிகைகளான இவர்கள் கொஞ்சம் நாட்களுக்குமுன்பு வரை “நான்…ரெடி தான் வரவா.,அண்ணன் நா இறங்கி வரவா”.எனபாடி, ஆடி கொண்டிருந்தவர்களை,இதுவரை பார்த்திடாத, புது மாதிரியான(?)உடை உடுத்தியும்,ஆடியும்,பெரியவர் முதல் சிறியவர் வரை தன் பக்கம்ஈர்த்து கொண்டிருந்த தமன்னா.என் மகள்களை தாண்டி,உலகெங்கும் பலயுவன்,யுவதிகளையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறார்.என்பதை பல ரீல்ஸ்கள் மூலம் தெரிந்துக்கொள்ள முடிந்தது. நான் தீவிரகமல் வெறியன் என்பதால், அது ரஜினி படத்தின் பாடல் என்பதாலும்,அந்த பாட்டின் மீது பெரிதாக […]

  நாவல்  தினை       அத்தியாயம் முப்பத்திரண்டு  பொ.யு 5000

This entry is part 1 of 2 in the series 17 செப்டம்பர் 2023

இரா முருகன் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தியா, தெருவில் திரிந்து கொண்டிருந்தியா? பத்து பனிரெண்டு வயதுள்ள ஆண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துச் சத்தம் போட்டார்கள்.  காரணம் இல்லாமல் இல்லை.  காலையில் ஸ்கூல் போனபோது உடுத்தி விட்ட சுத்தமான யூனிபார்ம் முழுக்க திட்டுத் திட்டாக சாக்கடை வண்டலோடு சாயந்திரம் வந்து நின்றால் சத்தம் போடாமல் என்ன செய்வார்கள்.  ஓடைக் குழாயில் அடைப்பு நீக்குவது எப்படி என்று சிறப்பு வகுப்பு இருந்தது.   ஆசிரியர் எப்படி ஓடைக் […]

நாவல்    தினை              அத்தியாயம் முப்பத்தொன்று  CE 5000

This entry is part 1 of 3 in the series 10 செப்டம்பர் 2023

   நீலன் வைத்தியர் எழுந்து விட்டார்.  பெருந்தேளர்தம் பேரரசு நடாத்தும் நிலந்தரை எங்கணும் இதுதான் பேச்சு. கரடி குட்டிக்கரணம் அடித்தபடி பறந்ததைக் கூட யாரும் லட்சியம் செய்யவில்லை.  போன வாரம் வரை இப்படி ஆகியிருந்தால், எப்படி, கரடி கரணம் அடித்தபடி பறந்திருந்தால் வீடுகளில் கலவி செய்திருக்கும் மானுடரும் வளையில் புணர்ந்தபடி இருக்கும் தேள்களும் ரதி விளையாட்டு நிறுத்தி கரடியின் இடுப்பை ஆர்வமாக நோக்கி, அதற்கு வாய்க்கப்பட்ட பிரம்மாண்டத்தைப் பார்த்து ரசிக்க அங்கங்கே தலையுயர்த்தி நின்றிருக்கும்.  நீலன் வைத்தியர் […]

நாவல்  தினை – அத்தியாயம்  30- பொது யுகம் 5000

This entry is part 6 of 6 in the series 3 செப்டம்பர் 2023

  இரா முருகன் பெருந்தேளர் மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. விடியற்காலையில் பெருந்தேளர் சஞ்சீவனி எதிர்கொள்ளுதலைத் தலையாய கடமையாகப் பிரகடனப்படுத்த இருக்கிறார். ஒவ்வொரு குடும்பமும் பெருமகிழ்ச்சியோடு சாவா மருந்து பருகி நீள உயிர்க்கப் போகிறார்கள்.    குடும்பம் இல்லாத ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் சஞ்சீவனி பெருமருந்தை உடலில் ஏற்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழத் தயாராக இருக்கப் போகிறார்கள். அதிகம் யாரும் செலவழிக்கக் கையைக் கட்டிக்கொண்டு தேளரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. வெறும் ஒன்றரை பைனரி காசு செலுத்தி என்ன என்ன […]