நச்சுச் சொல்

தர்மத்தில் கொஞ்சம் சுயநலம் குற்றமில்லை வியாபாரத்தில் கொஞ்சம் பொய் குற்றமில்லை சீரான நலத்தில் சில்லரை நோய்கள் குற்றமில்லை வளமான பயிரில் கொஞ்சம் களைகள் குற்றமில்லை களிப்பில் கொஞ்சம் கவலைகள் குற்றமில்லை விசுவாசத்தில் கொஞ்சம் விளம்பரம் குற்றமில்லை நட்பில் சில முட்கள் குற்றமில்லை…

மகன்

மகனின் வாழ்க்கையில் மறக்க முடியாச் சம்பவங்கள் 3 சம்பவம் 1 முப்பது நாட்களுக்குள் முப்பத்தையாயிரம் வெள்ளி வீடு வாங்கக் கெடு வீவக விதித்தது நெருங்கியது நாள் உலையானது தலையணை இடியானது இதயத் துடிப்பு மகன் வென்றானா? அன்றி வீழ்ந்தானா? சம்பவம் 2…

அம்மா

நீ ஊட்டிய அமுதில் என் நகங்களும் பசியாறின உன் தாலாட்டில் இமைகள் சுமையிறக்கின உன் விரல் பிடித்து நடந்தேன் விரல்கள் விழிகளாயின உன் கோழிக் குஞ்சிகளை சாயம் ஏற்றாமல் மேயவிட்டதில்லை மிரண்டன பருந்துகள் பசலையும் அவரையும் சொகுசாய்ப் படர்ந்தன முளைவிடும்போதே நீ…

இறக்கும்போதும் சிரி

உழைத்துச் சேர் உறிஞ்சிச் சேர்க்காதே கன்றுண்ட மிச்சமே கற செயலால் நில் செல்வத்தால் நிற்காதே சுமையாய் இராதே சுமைதாங்கியாய் இரு ஈந்து கொண்டிரு எறிவதை ஈயாமலிரு அந்நியமாக்காதே சொந்தங்களை சொந்தமாக்கு அந்நியங்களை முகமறிய மோதினால் முத்த மிடு துரோகிகளைக் துரத்தி விடு…

ஆணவம்

‘மின்னலுக்கும் கால்கள் பின்னும் என் வேகம் பார்த்து வேகத்தில் என்னை வெல்பவன் எவன்?’ சூளுரைத்தார் முயலார் சிரம் தாழ்த்தின சில்லரை மிருகங்கள் சிரம் உயர்த்திச் சொன்னார் ஆமையார் ‘நான் வெல்வேன்’ ‘கவிழ்த்துப் போட்ட கொட்டாங்கச்சியே போட்டி எறும்போடல்ல என்னோடு.’ ‘தெரியும் நாளையே…

அன்பளிப்பு

அந்தக் கவிஞனின் உறுப் பெல்லாம் யாப்பு நரம்பெல்லாம் மரபு அசையும் சீரும் அடி தொழும் துடிக்கும் அவன் எழுத்தில் அந்த வெல்லக் கவிஞனுக்கு பிள்ளைத் தமிழ் எழுத கொள்ளை ஆசை தமிழையே தண்ணீராய்ப் பருகும் தன் தலைவன் மீதே பிள்ளைத் தமிழ்…

பயணி

வீசி எறிந்தால் விண்மீனாகு மண்ணில் புதைத்தால் மண்புழுவாகு அடித்தால் பொன்னாகு பிளந்தால் விறகாகு கிழித்தால் நாராகு தாக்கும் அம்புகளை உன் தோட்டக் கொடிகளுக்குக் கொம்புகளாக்கு புயலிலும் பூகம்பத்திலும் தான் தன் சுழற்சிக்குச் சுருதி கூட்டுகிறது பூமி சுற்றிச் சுற்றி எரிகிறது பொய்த்…

அமீதாம்மாள்

வெள்ளம் குருவிக் கூட்டோடு சாய்ந்தது மரம் என்ன ஆனதோ? நேற்றுப் பொரித்த குஞ்சுகள்   வெள்ளத்தோடு நகர்கிறது கூரை சில தட்டான் பூச்சிகளுடன்   சங்குச் சக்கரமாய்ப் பாம்பு அந்த ஒற்றைச் சுவரில் சில நொடிகளில் மரணிக்கப் போகிறது அதோ அந்த…

என் பாட்டி

சித்தி சித்தப்பா அத்தை மாமா எல்லாரும் பாட்டியைத் தேடி வருவார்கள் எல்லாரையும் எனக்கு அறிமுகம் செய்வார் சர்க்கரை அளவு கேட்டபின் அவர்களுக்குக் காப்பி சீடை தருவார் பாட்டியின் சகோதரர்கள் வருவார்கள் காலணாவைப் பங்குபோட்ட கதையெல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பார் ஓமவல்லி, துளசி…

விருந்து

ஒரு நன்கொடைத் திரட்டுக்காக அந்த இரவு விருந்தாம் பத்துப் பேர் மேசைக்கு இரண்டாயிரம் வெள்ளி பொரித்த முழு குருவா மீன் எராலுடன் கனவாய் தந்தூரிக் கோழியுடன் முந்திரி வருவல் வறுத்த சேமியா பொரித்த சோறுடன் புரோகோலி சூப் விருந்து நிறைந்தது வீட்டுக்கு…