author

வெளி

This entry is part 8 of 26 in the series 9 டிசம்பர் 2012

  அது ஒரு தொடக்கப்பள்ளி.வாரத்தில் மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன் தான் காரணம்.   பிரேயர் முடிந்தவுடன் கனஜோராக குதூகலத்துடன் கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஓடும் குழந்தைகளளை தலைமை ஆசிரியை கண்டித்தும் கேட்பதில்லை.குட் மார்னிங் என்று ஆசிரியர் இளங்கோவனை வரவேற்பதில் சிறிது கெஞ்சலும் இருக்கும்,இன்று வகுப்புக்கு எங்களை அழையுங்கள் என்ற வேண்டுகோளும் அதில் அடங்கி இருக்கும்.   அந்தப் பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சொந்தமானது.பெண் துறவிகள் […]

என்னைப் போல் ஒருவன்

This entry is part 27 of 31 in the series 2 டிசம்பர் 2012

என்னை யாரோ பின்தொடருகிறார்கள் எனக்கு  பகைவரென்று யாருமில்லை கடன் வாங்கி கொடுக்காமல் இருந்ததில்லை எடுத்தெறிந்து யாரையும் பேசுவதில்லை அடுத்தவர் மனைவியை நிமிர்ந்து  பார்ப்பது கூட இல்லை தீவிரவாதியோ என சந்தேகப்படுவார்கள்  என்று தாடி கூட  வைப்பதில்லை சர்ச்சைக்குரிய  நாவல் எதையும் நான் எழுதவில்லை வெளிநாட்டுக்கு உளவறிந்து சொன்னதில்லை என் குழந்தையைத்  தவிர வேறெந்த குழந்தையையும் தூக்கி  கொஞ்சுவதில்லை அருகாமையில் எந்த குண்டுவெடிப்பும்  நடக்கவில்லை எந்த ஒரு  சித்தாந்தமும் என்னை ஈர்த்ததில்லை என்னைப் போல் ஒருவன் இருப்பானோ என்று […]

கவிதைகள்

This entry is part 21 of 29 in the series 18 நவம்பர் 2012

பலி மாக்கல் நந்தி வளருகிறதாம் பிள்ளையார் பால் குடிக்கிறதாம் மண்ணடி இயேசு மறுபடி வருவாராம் புத்த பிக்குகள் அஹிம்சையை தொலைத்துவிட்டார்கள் பாம்பு சீண்டினால் தான் சீறும் கங்கையில் தொலைப்பதற்காகத்தான் பாபங்களை சுமக்கின்றீர்களா பணமுதலைகளா வாருங்கள் உங்களுக்கு தங்கத்திலான சிலுவை தயாராக இருக்கிறது பரலோகத்திலும் பாகுபாடு காட்டினால் இகலோத்தில் வாழ்வு இம்சையாக ஏன் இருக்காது ஒருமனதாகச் சொல்லுவோம் எல்லாவற்றுக்கும் காரணம் மதம் தான் என்று போருக்கு பலி கொடுக்க அரவானைத் தேடும் உலகமிது. ————————————– கொலை தெய்வம் சும்மா […]

வதம்

This entry is part 20 of 29 in the series 18 நவம்பர் 2012

கனவிலாவது பெருங்கனவானாக இருக்கக் கூடாதா சுற்றம் இவனிடம் பவிசாக நடந்து கொள்ளக் கூடாதா நடப்பவை தெரியவந்தால் அசுவாரஸ்யம் ஏற்படாதா மாரிக்காலத்தில் ஒளிந்து கொள்ளத் தெரியாதவன் பகலவனா தேவதாசிகளின் அழகு அத்தனையும் முருகனுக்கா காடு,மலை,கடல் நவகிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்வதில்லையா அன்னாபிஷேகத்துக்கு பசியோடு வரலாமா வரம் கொடுப்பவன் சிவனென்றால் வதம் செய்வது விஷ்ணுவா பாழடைந்த கோவிலில் இருப்பது அம்பாளுக்கு விருப்பமென்றால் நான் என்ன செய்வது தேர் நிலையை அடைய வடம் பிடித்தால் மட்டும் போதுமா மூலவர் பேச ஆரம்பித்ததால் […]

அகாலம்

This entry is part 22 of 33 in the series 11 நவம்பர் 2012

  வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிகிறதா குடை எடுத்துச் சென்றாலும் பாதி நனைந்து தான் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது சாலையில் யாரையும் காணோம் ஆங்காங்கே சில கடைகள் தான் திறந்திருக்கிறது விடாமல் தூறிக் கொண்டிருப்பதால் சுவரெல்லாம் ஓதம் காத்து இருக்கிறது கதகதப்புக்காக பெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கிறார்கள் குடிமகன்கள் பளிச்சென்ற மின்னலைப் பார்த்து காதை பொத்திக் கொண்டன குழந்தைகள் கண்ணெதிரே வாகனத்தின் மீது விழுந்த மரம் கையாலாகாததனத்தை எண்ணி கண்ணீரை வரவழைத்தது கொள்கை முழக்கமிட்ட சுவரொட்டிகளுக்கெல்லாம் […]

குடை

This entry is part 5 of 31 in the series 4 நவம்பர் 2012

  மரணம் ஒன்றே விடுதலை கைதிகளில் ஏது ஏற்றத்தாழ்வு ஓவியனுக்குத் தெரியாத சூட்சும உருவங்கள் பார்வையாளனுக்குப் புலப்படும் கரையை முத்தமிட்டு முத்தமிட்டுச் செல்லும் கடலுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை மேனி கறுப்பாகாமல் மேகமாய் வந்து மறைக்கிறேனென தேவதைக்கு தெரிய வருமா மூக்குத்தியின் ஜ்வலிப்பைக் கண்டு நட்சத்திரங்கள் வயிறெரியும் அவள் உள் வரை செல்லும் காற்று அவளின் முடிவை விசாரித்துச் சொல்லுமா பெருமழையின் சாரலில் அவள் நனைந்துவிடக்கூடாதென நான் குடை பிடிப்பேன் நான் நனைவதைப் பார்த்து குடை […]

கவிதைகள்

This entry is part 18 of 34 in the series 28அக்டோபர் 2012

இப்படியே… இதோ மற்றொரு விடியல் அலுப்பில்லாமல் காலையில் எழ முடிகிறதா பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்குத் தான் தேவை சுப்ரபாதம் அமிர்தம் உண்டவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் அணை வற்றியதற்காக சபிக்கப்பட்ட மன்மதன் தான் சகலத்தையும் ஆள்கிறான் காவி அணிந்து விட்டாலே மோட்சம் கிடைத்துவிடுமா எவர் போடும் கையெழுத்தோ மக்களின் தலையெழுத்தாவது தான் ஜனநாயகமா போராட்டங்களுக்கு பதிலடி தோட்டாக்களாய் இருந்தால் அஹிம்சையை கைவிட்டு அவர்கள் ஆயுதத்தை கையில் எடுத்தால் கல்லடிபட்ட கண்ணாடியாய் இந்தியா விரிசலடைந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. […]

கடிதம்

This entry is part 9 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

வர்ஷினி என்ற இந்தப் பெண்ணை மையமாக வைத்து தான் சுந்தரின் மனப்பிரபஞ்சமே சுற்றிக் கொண்டிருந்தது.அழகு,கடவுள் அவளுக்கு அளித்த வரமென்றால், அவர்கள் குடும்பப் பின்னணி அவளுக்கு கம்பீரத்தைக் கொடுத்தது;அவளது நிமிர்ந்த நன்னடையில் தன்னம்பிக்கை தெரிந்தது.கல்லூரி வாழ்க்கையில் படிப்புச் சம்மந்தமான அன்றாடக் கடமைகளை சுந்தர் நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது,உள்ளம் அவ்வப்போது கழுகாய் சிறகு விரித்து அவளின் மனவெளியில் பறந்து கொண்டிருக்கும்.அத்திப்பூத்தாற் போல் ஏதாவதொரு சமயத்தில் அவளருகில் நெருங்கி நிற்கும் போது,அவளது முகம் பிரகாசிக்கும் ஒளியில் அவனுடைய மனம் தொட்டாற்சிணுங்கியாய் கூனிக் குறுகி […]

பிராணன்

This entry is part 7 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

தொழிற்சங்கவாதியான பரமானந்தம் மேடையில் ஏறி மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார் “எனதருமைத் தொழிலாளர் தோழர்களே கதிரவனைப் போன்றவன் தொழிலாளி அவன் தன் இயக்கத்தை ஒரு நாள் நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்துப் போகும்.காலம் காலமாக உழைக்கும் வர்க்கத்தை தொழிலாளர் தினத்தன்று மட்டும் புகழ்ந்து பேசிவி்ட்டு மற்ற தினங்களில் அலட்சியப்படுத்தினால்,உழைக்கும் கரங்களெல்லாம் ஒரு நாள் ஒன்று சேரும்,இந்தப் பூமிப்பந்தைக் கூட இரும்புத்தடி கொண்டு நெம்பி எங்களால் புரட்டிப் போட முடியும்.நமது வியர்வைக் கடலிலிருந்து தான் நீ்ர் ஆவியாகிச் சென்று மண்ணை […]

அரவான்

This entry is part 18 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

தன்னுடைய நடையை விரைவாக்கினான் நந்தகுமார்.அவன் பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றும் வெகுதொலைவில் இல்லை;வகுப்புகள் துவங்கவும் இன்னும் இருபது நிமிடமிருந்தது.   அவனது நடைவேகத்துக்குக் காரணம் விடலைப் பருவ பையன்களின் கேலி.தனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதைப் சில மாதங்களாய் உணர்ந்து கொண்டு வந்தான்.தன்னை ஒத்த பிராயமுடையவர்களின் உடலில் ஏற்பட்ட மாற்றம் தன்னிலிருந்து வேறுபடுவதை எண்ணி அச்சம் கொண்டான்.   அரும்பு மீசை உதட்டின் மேல் வளர்ந்து, குரல் உடைந்து சற்றே கரகரப்பாக மாறிக் கொண்டிருந்த டீன் ஏஜ் […]