முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Malar.sethu@gmail.com தமிழில் தோன்றிய காப்பியர்களில் குறிப்பிடத்தக்க காப்பியம் சூளாமணியாகும், சிலம்பு, மேகலை, சிந்தாமணி என்பதைத் தொடர்ந்து இக்காப்பியமும் பெண்களின் தலையில் அணிந்து கொள்ளும் அணிகலனின் பெயரில் அமைந்திருப்பது சிறப்பிற்குரியதாக உள்ளது. சமண சமயக் கருத்துக்களைக் கூறும் இக்காப்பியம் சுவைபட அமைந்து கற்பாற்கு இன்பமளிக்கின்றது. சூளாமணி -பெயர்க்காரணம் சூளாமணிக் காப்பியம் தோலாமொழித் தேவர் இயற்றியதாகும். இதன் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டாகும் (கி.பி. 925-950). காப்பியத் தலைமாந்தர்களில் ஒருவராம் பயாபதி […]
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. `கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத […]
போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 11 சத்யானந்தன் மகாராணி பஜாபதி கோதமி அனுப்பிய பணிப்பெண் யசோதராவின் மாளிகையில் அவளது சயன அறை வாசலில் நின்றாள். அங்கே தயாராக நிற்கும் இரு பணிப்பெண்களைக் காணவில்லை. மெதுவாக அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே யசோதாரா ராகுலன் இருவருமே இல்லை. பூஜையறையின் வாசலில் நின்ற பணிப்பெண்ணிடம் விசாரித்தாள். இளவரசி ராகுலனுடன் நந்தவனத்துக்குச் சென்றார் என்று பதில் வந்தது. பிரதான நுழை வாயிலுக்கு வந்து படிகளில் இறங்கி […]
வெள்ளி வீதி – (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை) கலாநிதி அப்துல் எய்த் தாவூது தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை. அவன் வரும்வரைக்கும் கதவைத் திறந்து வைக்க மறந்து போனது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் மனதுக்குள் ஒரு முறை திட்டித் தீர்த்தாள். அவளது அன்றாட வேலைகளுக்கு முடிவேதுமற்றதாயிருந்தது. விறகு சேகரித்து […]
தாகூரின் கீதப் பாமாலை – 55 சொல்லிடும் மௌனமாய் ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கவர்ச்சி ஆற்றல் உள்ள உன்னிரு கண்களின் புது மலர்ச்சி திடீரென எனக்கு விடுவிப்பு அளிக்கும் எல்லாப் பிணைப்பி லிருந்தும் ! ஊஞ்சல் ஆடுகிறது வான் நோக்கி இதயம் தன் கதவைத் திறந்து ! வெகு தொலைவுக்கு அப்பாலிருக்கும் காட்டு மரங்களின் நறுமணம் நழுவி வந்து அருகில் தழுவிடும் […]
வாலிகையும் நுரையும் (14) பவள சங்கரி பனித்திரை பூண்ட மலையொரு குன்றுமில்லை; நனைந்த மழையில் துளிக்கும் ஓக் மரம், விசும்பும் வில்லோ (அலரி) அல்ல. பாருங்கள் இங்கேயொரு முரண்பாடான மெய்யுரையை: ஆழ்ந்ததும், உயர்ந்ததுமான அவைகள் இரண்டிற்கும் இடைப்பட்டதைக் காட்டிலும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவே உள்ளது. உம் முன்னால் தெளிவானதொரு கண்ணாடியாக யாம் நிற்கும் தருணம், நீவிர் எம்மை உறுத்துப் பார்த்து உம் உருவத்தையேக் கண்டீர் ஆங்கே… பின் நீவிர், “யான் உம்மை விரும்புகிறேன்” […]
நாள்: 09-03-2013 இடம்: The Book Point, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணாசாலை… நேரம்: மாலை 5 மணிக்கு.. நண்பர்களே இந்த நிகழ்வை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.. விழா சிறப்பாக நடக்க அனைவரும் நிகழ்விற்கு அவசியம் வர வேண்டும். இப்போதே 9 ஆம் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சுப்ரபாரதிமணியன் திருப்பூருக்கு வரும் பல இலக்கிய நண்பர்கள் நொய்யல் நதியைப் பார்க்க ஆசைப்படுவதுண்டு. எனது படைப்புகளில் நொய்யலின் சீரழிவை முன் வைத்து எழுதப்பட்டிருப்பதை காட்சி ரூபமாகப் பார்க்க விரும்புவர். சிறுத்துப்போய் சாயக் கழிவுகளும், வீட்டுக் கழிவுகளும் ஓடும் ஜம்மனை பாலம், முனிசிபல் வீதி என்று பிரதான சாலைகளைக் காட்டுவேன். மறைந்து போன நதி பற்றி இரங்கலாய் சில வார்த்தைகள் சொல்வார்கள். மலேசியாவில் லங்காட் நதியைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்ற ஆசை மலேசிய எழுத்தாளர் ரங்கசாமியின் லங்காட் […]
‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 19. அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’. வே.சபாநாயகம். கீத் மில்லர் சொல்கிறார், “உண்மையான கதைகளை எழுத வேண்டாம். யாரும் நம்பமாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்”. அப்படித்தான் இந்தக் கதைகளும். எல்லாமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் கணிசமான அளவு கற்பனை வாசகம் கலக்கப்பட்டவைதான். கீத்மில்லர் சொன்னதுபோல் உண்மைச் சம்பவங்களை எழுதினால் யார் நம்பப்போகிறார்கள்? நாலு வருடங்களாக எழுதிச் சேர்த்தவை இவை. ஆப்பிரிக்கா, கனடா, பொஸ்னியா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், […]
சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர் ,சிதம்பரம் ஆறாவது ஃப்ளோரிலிருந்து கீழே இறங்க லிஃப்டு மேலே வர பட்டனை அழுத்தி விட்டுக் காத்திருந்த ஆர்த்திக்கு பொறுமை உதிர ஆரம்பித்தது. ச்சே….இன்னும் எத்தனை நேரம் இப்படியே..இங்கேயே நிற்பது..பேசாமல் காலை நம்பி படியில் இறங்க ஆரம்பித்திருந்தால் இந்நேரம் மூன்று மாடிகள் இறங்கியிருக்கலாம்..நினைத்த மாத்திரத்தில் லிஃப்ட் வந்து அவளெதிரே நின்று கதவைத் திறந்து ‘சீக்கிரம் ஏறு’ என்றது..உள்ளே நுழைந்ததும் சத்தமில்லாமல் வழுக்கிக் கொண்டு . சிகப்பு நிறப் புள்ளிகள் மின்னியப்படியே அம்புக் குறியை தலை […]