——-வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால் ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் வெண்மை பொழியத் தொடங்கிவிட்டன. உறவுகளின் கைவிடுதல்களுக்குப்பின் உள்ளம் எல்லாவற்றையும் குருதி நிறத்திலேயே காண்கிறது. குளுமையான இந்தக் காற்று கூட உடலைச் சிற்றுளிகளால் துளைப்பது போல எரித்துக் கொண்டிருக்கிறது. அறியாச் சிறுவனின் கைநூலை விட்டு அகன்று ஓடிவிட்ட பட்டமொன்று தத்திப் போகிறது. அவன் அருகே வரும்போது அது அவசரமாகப் பறப்பது போலவும் அதன்பின் அமைதியாக ஆழக்கிடப்பது […]
உப்பு, புளி,மிளகாய். (கவிதை) எஞ்சி நின்ற நாலு வார்த்தைகளும் வெளியேறிவிட்டன. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை உப்பு புளி மிளகாய் எதார்த்தத்தை பதார்த்த மொழியில் பேசின. காலாற நடந்து சென்று காட்டைக்காண முடியவில்லை. தொலைந்துப்போன வில்லைத்தேடி அர்ச்சுனர்களும் அழவில்லை. ஆகாயத்தை அண்ணாந்துப்பார்க்க அடுப்பங்கரை விடவில்லை. பெருங்காய டப்பாவில் எந்த கவிதையை தேட. ஒளவைக்கு என்னமோ அதியமான் கிடைத்தான். நெல்லிக்கனி கொடுத்தவள் முருகனிடம் முறையிட்டாள் திரும்பி வா! தமிழுக்கு உயிர் கொடு. கேட்டான் வேலவன் கிடைத்தது அருந்தமிழ் தவம். முருக்கப்ப […]