படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்

This entry is part 11 of 21 in the series 16 அக்டோபர் 2016

முருகபூபதி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா – கன்பரா தமிழ் மூத்த பிரஜைகளின் காவோலை எனக்கு அப்பொழுது ஐந்துவயதிருக்கும். எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரியும். மாலைவேளையில் தாத்தாவும் நானும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவோம். வீட்டுக்கு முன்னால் இருக்கும் மின்கம்பத்தினைத் தொட்டுவிட்டு கடலை நோக்கி ஓடுவோம். கடற்கரையோரத்திலும் ஒரு மின்கம்பம் இருக்கிறது. அதனைத்தொட்டுவிட்டு திரும்பி ஓடிவந்து வீட்டருகில் நிற்கும் மின்கம்பத்தை தொடவேண்டும். நான் வென்றால் தாத்தா அருகிலிருக்கும் மம்மது கடையில் சீனிபோலை ( இனிப்பு) வாங்கித்தருவார். அதன் விலை ஒரு […]

கள்வன் பத்து

This entry is part 12 of 21 in the series 16 அக்டோபர் 2016

எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒன்றாக நூறு பாடல்கள் கொண்ட நூல் இது. அந்த நூறு பாக்களும் பத்துப் பத்தாகப் பகுத்து பல்வேறு தலைப்புகளில் அடக்கப்பட்டுள்ளன. அவற்றில் மருதத்திணை மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டு நூலின் முதலில் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் ஓரம்போகியார். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. இவர் […]

உன் முகம்

This entry is part 13 of 21 in the series 16 அக்டோபர் 2016

உன் முகம் குகையோவியத்தின் மறைக்கப்பட்ட அர்த்தம் போல தெரிகிறது எனக்கு. நான் அந்த ஓவியத்தை வருடுகிறேன் குரங்கு மனதால் முதலில் இரண்டாவது கண்களால் மூன்றாவது கைகளால் ஓவியம் தேய்கிறது வருடி வருடி சுருங்கி விரிகிறது உன் முகம் உன் பற்கள் பனியென குளிரும் காட்சி கொடுக்கிறது அந்த கதவுகள் மாசுபட்ட காற்றுடன் சண்டையிடும்போது வெறுமை விரவுகிறது என் உடலில்லாமல் நான் கடைக்கு எலுமிச்சை வாங்கப்போகும் உணர்வு தொங்குகிறது தூக்கில் தொங்கிய சைக்கோ கொலைகாரனை போல

குட்டி (லிட்டில்) இந்தியா

This entry is part 14 of 21 in the series 16 அக்டோபர் 2016

பண்பாட்டுக் கருவூலம் பயன்பாட்டுப் பொருளகம் நாளும் செல்கின்ற திருத்தலம்-நம் நாவிற்கும் கண்ணுக்கும் விருந்தகம் உணவென்றால் அறுஞ்சுவை உடையென்றால் வகைவகை அங்கேதான் மனம்போல கிடைக்கும்-போய் வந்தாதான் மனம்கூட நடக்கும் தரமான நகைக்கூட்டம் வரமான கலைக்கோட்டம் வருவோரை ஈர்ப்பதுவே நாட்டம்-சென்று வருவோரின் முகத்திலில்லை வாட்டம் நாடுவிட்டு நாடுவந்து ஓடாகிப் போனாலும் வாரத்தில் ஒருநாளே போதும்-மனத்தின் தீராத சோகங்கள் போகும் ஊரோடு இருப்பதுபோல் உறவோடு வாழ்வதுபோல் பேருணர்வு ஊற்றாகப் பொங்கும்-புதுப் பேரின்பம் தானாகத் தங்கும் பயணமெனில் முகவர்களும் பணியமர்த்தும் முகவர்களும் ஒருசேர […]

மாயாண்டியும் முனியாண்டியும்

This entry is part 15 of 21 in the series 16 அக்டோபர் 2016

மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும்  தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர். “காளி…இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்…. நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் மாயாண்டி கேட்கிறார். “புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? பல வருசமா தீபாவளி விருந்து நிகழ்ச்சிய நடத்தி வரோம். இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை […]

வதந்திகளை பரப்புபவர்கள்!!

This entry is part 16 of 21 in the series 16 அக்டோபர் 2016

அருணா சுப்ரமணியன்  நடுச்சாமத்துல கூவுற கோழி .. உச்சிவெயிலில் ஆடுற மயில் .. என் பிள்ளை சொக்க தங்கம்  கால்கட்டு போட்டா சரியாயிடும்  பிள்ளை பிறந்தா பொறுப்புவரும்  ஆவணி பொறந்தா டாப்புல வருவான்  இதுவும் கடந்து போகும்  காலம் மருந்து போடும்  என்போர்களே நிறுத்தி கொள்ளுங்கள்… வதந்திகளை பரப்புபவர்கள்  கைது செய்யப்படுகிறார்கள்!!! – அருணா சுப்ரமணியன்

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?

This entry is part 17 of 21 in the series 16 அக்டோபர் 2016

அருணா சுப்ரமணியன்  தாழப் பறக்கும் ஊர்குருவிகள்  உயரப் பறக்க தொடங்கின… வல்லூறுகளோடு ஊர்குருவிகளையும்  வரவேற்று கொண்டது வானம்….. ஆனால் , ஊர்குருவியின் உயரம் சில  வல்லூறுகளுக்கு உறுத்துவதேன் ? உயரப் பறக்கும் ஊர்குருவிகளால்  வல்லூறின் வலிமை குறைந்ததா என்ன ? வல்லூறின் உயரம் நிர்ணயிக்கப் படுவது  வல்லூறின் சிறகுகளின் வலிமையிலா ? தாழப் பறக்கும் ஊர்குருவிகளாலா ? உயர்ந்தே இருக்க வேண்டுமெனில்  வல்லூறுகள் இன்னும் உயரம் பழகலாமே? ஊர்குருவிகளை தாழத்  தள்ளி  தான்  தன் இருப்பை உணர்த்த வேண்டுமா? ஊர்குருவிகளை உயர்த்திய  உன்னதமானவர்களே! கொஞ்சம் […]

றெக்க – விமர்சனம்

This entry is part 18 of 21 in the series 16 அக்டோபர் 2016

ஸ்ரீராம் “அழகாக தன் போக்கில் இயல்பான கதைகளாக தேடிப்பிடித்து பண்ணிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை ஹீரோயிசம் பண்ண வைத்து காலி பண்ண பார்க்கிறார்கள்” றெக்க படம் பார்த்ததும் இப்படித்தான் தோன்றியது.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரெளடி தான், ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் இது போன்ற கதைகளில் விளிம்பு நிலையில் சிக்குண்ட மனிதனின் கதாபாத்திரங்களில் இயல்புத்தன்மைக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது. ‘றெக்க’ பக்கா ஹீரோயிசம். நூறு அடியாட்களை பறக்க விடுவது, ஐம்பது ஜிம்பாய்களை […]

மீண்டும் நீ பிறந்து வா…!

This entry is part 19 of 21 in the series 16 அக்டோபர் 2016

ப.கண்ணன்சேகர் மலைமகள் அருளே  மாகவி திரளே ! மறையாப் புகழே மணக்கும் தமிழே ! கலையாக் கதிரே கவிதைச் சுடரே ! கனியின் சுவையே கற்றோர் அவையே ! குலையாக் குன்றே குறையாக் குதிரே! கூர்மைக் கவியே நேர்மை வழியே ! தலைமைக் தகையே தனித்துவ வகையே! தத்துவ விளக்கே  திசையில் கிழக்கே ! வனவாச படைப்பே வாழ்வியல் படிப்பே! வற்றா வெள்ளமே வளமிகு உள்ளமே! மனதின் மகிழ்வே மறையா முகிழ்வே! மயக்கும் அமுதே வியக்கும் தமிழே […]

கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)

This entry is part 20 of 21 in the series 16 அக்டோபர் 2016

– பியர் ரொபெர் லெக்கிளெர்க்   கதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு  இவருடைய துபாம்பூலுக்கே  வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர். முதியவர் விமானத்தில் காலைவைத்த பின்னரே அவரும் புறப்பட்டுச் சென்றார். விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு குழந்தையைப் போல அவர் ஒப்படைத்துவிட்டு ச் சென்றார், அதை நபிசாட்டு உணர்ந்திருக்கவில்லை. பாரீஸ் நகரில் ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொன்றிர்க்கு  அவரை […]