ஆதி

This entry is part 15 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

எதேச்சையாக எதிர்ப்பட்டவரை
எங்கேயோ பார்த்திருக்கிறேன்
எங்கெனத் தெரியவில்லை
அவரும்
கடந்து சென்றுவிட்டார்
இனி ஞாபகம் வந்தும்
பயனில்லை
காற்று அதன் போக்கில்
போகிறது
மனதை அதைப் போல்
கட்டவிழ்த்து விடமுடியுமா
இந்த மழை வேறு
நேரங்கெட்ட நேரத்திற்கு
வந்து தொலைக்கிறது
குடையை எங்கே
வைத்தேனென்று தெரியவில்லை
புத்தகங்களைப் படித்து
கண்களை களைப்படையச்
செய்தாலும்
தூக்கம் வந்தபாடில்லை
தினமும் சூரிய நமஸ்காரம்
செய்கிறேன்
என் உடலை எரிக்கப்போகும்
நெருப்பு
அவனிடமிருந்து தானே
தோன்றியது என்பதாலா.

Series Navigationசிறு கவிதைகள்பாசாவின் உறுபங்கம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *