இந்த உலகம் எதற்காக இருக்கிறது. எதன் பொருட்டு இந்த உலகம் நடத்தப்படுகிறது. உலக இயந்திரத்தில் எத்தனை கோடி உயிர்கள் சிக்கி உழல்கிறது. எதற்காக நிந்திக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட எவருக்கும் தெரியவில்லை. துன்பத்திற்கு பரிசாக கனவுகளைத்தான் மதங்கள் அளிக்கிறது. எதைப் பெற யார் தகுதி படைத்தவர்கள் என்று எந்த சக்தி நிர்ணயிக்கிறது. முயற்சிக்காக கூலி பெற மரணம் வரை காத்திருக்க வேண்டுமா? உலகம் அதர்மத்தின் கைகளுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. சத்தியத்தை பின்பற்றி நடப்பவர்களுக்கு இவ்வுலகம் […]
பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்கும். திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால் அகக்கண்களும் குருடானவன் என்கிறார். நீதியை துரியோதனனுக்கு எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ள திருதராஷ்டிரன் சகுனி காய் உருட்டுகையில் என் மகன் ஜெயித்தானா ஜெயித்தானா என்று பேராவல் கொண்டு கேட்கிறான். பாஞ்சாலி அவையில் துகிலுரியப்பட்டபோது பீஷ்மரின் பேச்சு அறத்தை முன்னிறுத்துவதாக இல்லை. துரியோதனாதியர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். […]
இந்த உலகம் எதற்காக இருக்கிறது. எதன் பொருட்டு இந்த உலகம் நடத்தப்படுகிறது. உலக இயந்திரத்தில் எத்தனை கோடி உயிர்கள் சிக்கி உழல்கிறது. எதற்காக நிந்திக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட எவருக்கும் தெரியவில்லை. துன்பத்திற்கு பரிசாக கனவுகளைத்தான் மதங்கள் அளிக்கிறது. எதைப் பெற யார் தகுதி படைத்தவர்கள் என்று எந்த சக்தி நிர்ணயிக்கிறது. முயற்சிக்காக கூலி பெற மரணம் வரை காத்திருக்க வேண்டுமா? உலகம் அதர்மத்தின் கைகளுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. சத்தியத்தை பின்பற்றி நடப்பவர்களுக்கு இவ்வுலகம் நரகமாகத்தான் […]
வாழ்க்கையில் சிலருக்கு இன்பத்துக்கு மேல் இன்பம் வந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது. கத்திக் கத்தி முட்டி மோதிப் பார்த்தாலும் எந்தக் கதவும் திறப்பதில்லை. ஆயிரம் கடவுளர்களில் ஒரு கடவுள் கூட அவனுக்கு ஆறுதல் தந்து நம்பிக்கை ஊட்டவில்லை. துயர வெள்ளம் அவனை வேரோடு சாய்த்துவிடுகிறது. அவனுக்கு மட்டும் வாழ்வில் கவிந்திருக்கும் காரிருள் அகல்வதே இல்லை. பிரபஞ்சத்தைப் பொருத்தவரை பூமி சிறுதூசுதான். அந்தப் பேரியக்கம் பூமியில் […]
மகாபாரதக்கதை வடிவில் நமக்கு தர்மத்தை போதிக்கிறார் வியாசர். உலகமே தர்மம், அதர்மம் என்று இரு அணியாகப் பிரிந்து நிற்கிறது. அதர்மத்தின் கை மேலோங்கும் போதெல்லாம் நான் அவதாரமெடுப்பேன் என்பது உண்மை வழி நடப்பவர்களுக்கு பரம்பொருள் தந்த வாக்குறுதி. இந்த உலகச்சக்கரம் உண்மை என்ற அச்சாணியை மையமாக வைத்தே சுற்றி வருகிறது. திரைப்படத்தில் எல்லா காட்சிகளிலும் வில்லனே ஜெயிப்பான் கடைசியில் சுபம் போடுவதற்கு முன் மட்டுமே கதாநாயகன் ஜெயிப்பான் என்று பகடி செய்வோரின் பக்கம் நியாயம் இல்லாமல் […]
தர்மமும், அதர்மமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. துன்பம், இன்பம் என்ற இருகரைகளுக்கு மத்தியில் ஓடும் நதி தான் வாழ்வு. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்துவிடும் அற்பமானது இந்த வாழ்வு. பிறப்பை தீர்மானிக்கும் சக்தி எது என்று இங்கு யாருக்கும் தெரியாது. மனிதர்கள் தங்கள் பக்கமே நியாயமிருப்பதாகக் கருதுகிறார்கள். வல்லவர்களிடம் கையேந்தும் நிலையில் தான் நல்லவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை விந்தையாகத்தான் இருக்கிறது. சுவர்க்கமும், நரகமும் இங்கேதான் இருக்கிறது. தர்மகிரந்தங்கள் சீந்துவாரற்றுக் கிடக்கின்றன. பூமியில் […]
வேதங்கள் அகவிடுதலையை மட்டுமே பேசுகின்றன. வாள் முனையில் தான் மதம் பரப்பப்பட்டது என உலக வரலாறு பேசுகிறது. சத்தியம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு என்றில்லாமல் வெற்று உபதேசமாகத்தான் இவ்வுலகில் இருந்து வருகிறது. மதஅடையாளத்தை வெளிப்படுத்துவதின் மூலம் மட்டுமே மதப்பற்றுள்ளவர்களாக ஆகிவிட முடியாது. ஆலயத்தின் வாயிலை மிதிக்காதவன் கூட உண்மையின் வழியில் நடப்பானேயானால் அவன் மதப்பற்றுள்ளவன்தான். இந்தக் கவிதை தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் நேரடியாக கடவுளுடன் பேசுகிறது. கடவுளுடன் பேசுவதற்கு சாத்தானால் மட்டுமே முடியும் என்பதால் தான் இந்நூலுக்கு […]
வாழ்க்கை தருவதற்கும் பிடுங்கிக் கொள்வதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் தான் உயர்ந்தவன் என்றே நினைக்கிறான். ஏழைகளைவிட பணக்காரனே செல்வத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறான். மனிதனுக்கு அரியாசணத்தை தருவதும், கையில் திருவோடு தருவதும் வாழ்க்கை தான். மனிதன் ஆதாயம் கருதியே பொய் பேசுகிறான். வியாபாரத்தில் பிழைக்கத் தெரியாதவன் தான் உண்மை வழியில் நடப்பான் என்கிறான். இந்த உலகில் கொடுக்கின்ற கை மேலே இருக்கும், இரந்து வாங்குகின்ற கை கீழே தான் இருக்கும். தங்கக் […]
இயற்கை வம்சவிருத்திக்காகவே ஆணுக்கு பெண் மேல் மோகத்தை விதைத்தது. அரசன் காம வேட்கையிலிருந்து விடுதலையானவனாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனுக்கு பதினாயிரம் மனைவிமார்கள் இருந்தனர். பெண் இச்சைக்காகத்தான் உலகில் பல பாபகாரியங்கள் நடந்தேறுகிறது. நவநாகரிகம் என்ற பெயரில் சமூகம் சுயஒழுக்கத்தையும் பண்பாட்டையும் அடகு வைத்து விட்டது. ஆணாக பிறப்பதே பெண் போகத்திற்காகத்தான் என்றாகிவிட்டது. நீதி பரிபாலனம் வழங்குபவர்கள் கூட பெண் மாயையில் சிக்கிக் கொள்கிறார்கள். பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மனம், கறந்த இடத்தை […]
ஊழ்வினை அவதாரத்தையே அசைத்துப் பார்க்கிறது. பாரதம் பல பேரரசுகளைக் கண்டது. பாரதத்தின் வரலாற்றில் சூழ்ச்சிக்காரர்களும், துரோகிகளுமே வெற்றி கண்டுள்ளனர். நான்கு பேர்களுக்கு மத்தியில் தர்மம் என்று காலாட்சேபம் பண்ணுபவர்கள், நான்கு சுவர்களுக்கு மத்தியில் பிணந்தின்னிக் கழுகுகளாகத்தான் இருக்கின்றனர். வாழ்க்கை சிலருக்கு வரமாகவும் சிலருக்கு சாபமாகவும் தான் இருக்கின்றது. வேதங்கள், உபநிடதங்கள் அன்பையே போதிக்கின்றன. சத்தியத்தைக் காக்கவே மதம் ஸ்தாபிக்கப்பட்டது. சத்தியம் மனிதர்களை கருவியாக்கி தன்னை இந்த உலகில் நிலைநிறுத்திக் கொள்கிறது. கடவுள் என்பவர் […]
பின்னூட்டங்கள்