இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்

This entry is part 8 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

Posted on July 28, 2019

சந்திரயான் -2  விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++

Related image

Chandrayaan -2 Launching July 22, 2019++++++++1.  https://youtu.be/OKagPLd3evQ2. https://youtu.be/OKagPLd3evQ3. https://youtu.be/ENQ-AvPx6U84. https://youtu.be/fv3nO9KTcLc5. https://youtu.be/o31oLzjDMjQ6. https://youtu.be/YoJJNT-cwaU7. https://youtu.be/s9t4ZTGnhx88. https://youtu.be/PGDKE3SX8AU++++++++++++++++++++++++

நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
உளவிச் சென்று நாசா
துணைக்கோளுடன் வடதுருவத்தில்
ஒளிமறைவுக் குழியில்
பனிப் படிவைக் கண்டது !
நீரா அல்லது வாயுவா என்று
பாரதமும் நாசாவும் ஆராயும்  !
சந்திரனில் சின்னத்தை வைத்தது
இந்திய மூவர்ணக் கொடி !
யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
பந்தய மில்லை !
விந்தை புரிந்தது இந்தியா !
இரண்டாம் சந்திராயன்
2019  செப்டம்பரில் விண்ணுளவி
இறக்கும்  தளவுளவி ! தளவூர்தி
பாரத விண்வெளித் தீரர் இயக்கும்
சீரான விண்கப்பல் 2022 இல்
தாரணி சுற்றி வரும் !
செவ்வாய்க் கோள் செல்ல
சந்திரனில் சாவடி அமைக்கும்
திட்ட முள்ளது !
அடுத்து இரண்டாம் சந்தரயான்
நிலவைச் சுற்றி வந்து
தளவுளவி நிலவில் அமர
தளவூர்தி
தவழ்ந்து சென்று தளம் 
ஆராயப் போகுது
ஈரேழ் நாட்கள். 

+++++++++++

Related image

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

Related image

சந்திரயான் -2  தளவுளவி,  தளவூர்தி

++++++++++++++++++++++++

  1. https://youtu.be/eRIOHJ9gJS0
  2. https://youtu.be/NJOWi4tEVy8
  3. https://youtu.be/kFVjb1RpPK0
  4. https://www.britannica.com/science/Apollo-space-program
  5. https://www.news18.com/news/tech/gearing-for-july-launch-chandrayaan-2-will-carry-nasa-payload-too-says-isro-2142881.html
  6. https://youtu.be/xMDdaNLc8DU
  7. https://youtu.be/xTki6w1Ohnw

+++++++++++++++

சந்திரயான் -2  தளவுளவி,  தளவூர்தி

++++++++++++++++++++++++

இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் புரியும் சவாலான சந்திரயான் -2 நிலவு ஆராய்வுத் திட்டம்

2019 ஜூலை 22 ஆம் தேதி இந்தியா நிலவு நோக்கி ஏவிய புதிய இரண்டாம் சந்திரயான் திட்ட விண்சிமிழ் இப்போது முதலிரண்டு புவியரங்கு நீள்வட்டப் பாதைச் சுற்றுக்களை [Earth Bound Elliptical Orbits] வெற்றிகர மாய் இயக்கி, அடுத்து சில சுற்றுகளை செய்து முடிக்க முற்படுகிறது.  இந்த வேகத்தில் சந்தியான் -2 விண்சிமிழ் ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கி, நிலவு அரங்கத்தை நீள் வட்டப் பாதையில் சுற்ற [Moon Bound Orbits] ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவ்விதம் நிலவைச் சிலமுறைச் சுற்றி, செப்டம்பர் 7 ஆம் தேதி தளவுளவி இறங்கும் என்றும், பிறகு அதிலிருந்து தளவூர்தி நகர்ந்து 14 நாட்கள் ஆய்வுகள் நடத்தும் என்றும் திட்டமிடப் பட்டுள்ளது.

இம்மாதிரி நிலவில் இதுவரை நடத்திக் காட்டிய மூன்று நாடுகள்: ரஷ்யா, அமெரிக்கா, சைனா.  இந்தியா திட்டமிட்ட இந்த நிலவுச் சாதனைகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினால், விண் வெளித் தேடல் வரலாற்றில் நான்காவது இடத்தைப் பெறும்.  நிலவைக் கருவிகளோடு சுற்றும் விண்சிமிழின் எடை : 2.4 டன் [5300 பவுண்டு]. அது நிலவை ஓராண்டு சுற்றிவது, தளவுளவி, தளவூர்தி அனுப்பும், ஆராய்ச்சித் தகவலைப் பூமிக்கு அனுப்பி வரும்.  சந்தியான் -2 தளவுளவியின் பெயர் : விக்ரம்.  விண்வெளிப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவுப் பெயர்.  தளவூர்தியின் பெயர் : பிரக்யான் [ஞானம்].   தளவுளவி தென்துருவப் பகுதியில் இறங்கி நீர்ப்பனி உள்ளதா என்று சோதனை செய்யும்.  தளவூர்தி தவழ்ந்து சென்று நிலவுப் பாறைகளையும், மண்ணையும் 14 நாட்கள் அய்வு செய்யும்.  தளவூர்தி அனுப்பும் தகவல் ஒன்றை மட்டுமே தளவுளதி, நிலவைச் சுற்றும் விண்சிமிழுக்குத் தொடர்ந்து அனுப்பி வரும்.  விண்சிமிழ் அத்தகவலைப் புவிக்குப் பரிமாறும்.

Related image

சந்திரயான் -2  தளவுளவி நிலவில் செப்டம்பர் 7  இறங்கப் போகிறது.

சந்திரயான் -2 எளிய நிதிச் செலவில் [140 மில்லியன் டாலர்] முடிக்கத் திட்டமிடப் பட்டது.  மற்ற எல்லா நாடுகளும் இதை விட அதிகமாகவே நிதிச்செலவு செய்துள்ளன.  பிரதமர் நரேந்திர மோடி இந்தியா 2022 ஆண்டுக்குள் மனிதர் இயக்கும் விண்சிமிழ் புவியைச் சுற்றும் தகுதி பெற்றுவிடும் என்று உறுதி கூறினார்.

Image result for chandrayaan 2 update

நகரும் தளவூர்தி 14 நாட்கள் சோதனை செய்யும்

இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்தின் பேரார்வத் திட்டம் : சந்திரயான் -2 நிலவுப் பயணம்.

இஸ்ரோவின் [(ISRO)  INDIAN SPACE RESEARCH ORGANISATION] சிக்கனச் செலவு பேரார்வ நிலவுத் திட்டம் “சந்திரயான் -2”  வருகிற  ஜூலை மாதம்  9 – 16 தேதிகளுக்கு இடையே, 2019 ஆண்டில் விண்சிமிழ் ஏவப் போகிறது என்றும், செப்டம்பர் 6 இல் தளவுளவி நிலவில் இறங்கப் போகிறது என்றும் இஸ்ரோவின் தலைமை ஆளுநர் டாக்டர் கே. சிவன் மே மாதம் 20 ஆம் தேதியன்று அறிவித்தார்.  சிக்கலான சந்திரயான் -2  திட்ட நிகழ்வு பன்முறை தள்ளி வைக்கப் பட்டு தாமதமானது.  சந்திரயான் -1 நிலவுப் பயணத் திட்டம் 2009 இல் வெற்றிகரமாய் முடிந்து, விண்சிமிழ் பாரத தேசச் சின்னமோடு நிலவில் விழும்படிச் செய்யப்பட்டது.  அந்தப் பயணத்தில் சந்திராயன் -1 நிலவில் நீர் இருப்பதைக் கண்டு பிடித்தது.  இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சைனா ஆகிய மூன்று நாடுகள்தான் 239,000 மைல் [384,000 கி.மீ] தூர நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து,  தமது தளவுளவியை இறக்கி,  அதன் மூலம் தளவூர்தியைச் சுமந்து நகர்த்தி,  இயக்கி வந்துள்ளன.  சந்திரயான் -2  இல் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி [Orbiter, Lander & Rover] ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்களைத் [Modules]  தூக்கிச் செல்லும்.  தளவுளவியும், தளவூர்தியும் ஒன்றாய்ச் சேர்க்கப் பட்டு, விண்சுற்றியுடன் விண்சிமிழைப் பூத ராக்கெட் GSLV MK III சுமந்து செல்லும்.

இந்திய நிபுணரின் சிக்கலான, சவாலான இரண்டாம் நிலவுப் பயணம்

  1. இதுவரை நிலவில் எந்த உலக நாட்டுத் தளவுளவியும் இறங்காத தென் துருவப்  பகுதியில் சந்திரான் -2 தளவுளவி முதன்முதல் இறங்கப் போகிறது.
  2. விண்சுற்றி  நிலவைச் சுற்றத் துவங்கி,  60 மைல் [100 கி.மீ] உயரத்தை அடையும் போது, தளவுளவி நிலவில் மெதுவாய் இறங்கி, அதிலிருந்து நகரும் தளவூர்தி,  விண்சுற்றி நிலவைச் சுற்றி வருவது நீடிக்கும்.   தளவூர்தி பயணம் செய்து, மண் மாதிரிகளைச் சேர்க்கும்.   வாகனம் அவற்றை ஆய்வு செய்ய தளவுளவிக்குத்  தூக்கிச் செல்லும்.  மூன்றின் பளுவைச் சுமக்கும் விண்சிமிழின் நிறை 3 டன்.
  3. சந்திராயன் -2 நிலவுத் திட்டத்தின் விண்சிமிழ் சுமக்கும் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி ஆகிய மூன்றும் இஸ்ரோ தயாரித்தவை.  தளவூர்தி நிலவுத் தளத்தில் 14 நாட்கள் இயங்கி வரும்.
Image result for Chandrayaan 2 Rover

சிக்கனச் செலவில் இந்தியா செய்யும் இரண்டு சந்திரயான் & மங்கல்யான் திட்டங்கள்

1.  செவ்வாய்க் கோளுக்கு  2013 இல் அனுப்பிய மங்கல்யான்  திட்டத்துக்கு 470 கோடி ரூபாய் செலவானது.  ஒப்பு நோக்க அமெரிக்கா ஹாலிவுட் தயாரித்த  ” கிராவிட்டி ” [Gravity]  திரைப் படத்துக்குச் செலவு : 644 கோடி ரூபாய். [100 மில்லியன் டாலர்]

2.  சந்திரயான் -2 நிலவுப் பயண நிதி ஒதுக்கு : 800 கோடி ரூபாய்.  ஒப்பு நோக்க 2014 இல் ஹாலிவுட் தயாரித்த “இண்டர்ஸ்டெல்லர்”  [Intersteller]  திரைப்படம் தயாரிக்கச் செலவு 1062 கோடி ரூபாய் [165 மில்லியன் டாலர்]

Image result for Chandrayaan 2 Rover

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

Image result for Chandrayaan 2 Rover

இரண்டாம் நிலவுப் பயணத்துக்கு சந்திரயான் -2 விண்ணூர்தி தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அப்பயணம்  2018 முதல் காலாண்த் திட்டமிடப் பட்டுள்ளது.  சந்திரனை நோக்கிப் போகும் சந்தரயான் -2 விண்ணூர்தி, [Mother Ship] கட்டுப்பாடுடன் மெதுவாய் நிலவில் தளவுளவியை இறக்க ஓர் எஞ்சின் இப்போது விருத்தியாகி வருகிறது. அதற்காகச் செயற்கை முறையில் நிலவுக்குழிகள் [Moon Craters] உள்ள சந்திரச் சூழ்வெளிப் போலி அமைப்பை விஞ்ஞானிகள்  ஏற்படுத்தி, அந்த அரங்கில் தளவுளவி இறக்கம், மீள் ஏற்றம் [Lander Descent & Ascent ] சோதிக்கப்படும். மேலும் தளவூர்தி [Rover] பிரிந்து நிலவில் இயங்குவதும் சோதிக்கப்படும்.

கிரண் குமார் [இந்திய விண்வெளி ஆய்வு ஆணையக அதிபர்]

Image result for Chandrayaan 2 Rover

ரஷ்யாவின் கதிரியக்க ஏகமூலம் தயாரிக்கும் அணுவியல் கூடம் [JSC Isotope Sources] சந்திரயான் -2 விண்ணூர்தியில் இயங்கப் போகும், முக்கிய கியூரியம் -244 [Curium -244 (Cm-244)]  கதிர்வீச்சு உலோகத்தை அனுப்பியுள்ளது.  அது தளவூர்தி நிலவின் மண், பாறை ஆகியவற்றின் இரசாயனக் கலவைகளை அறிவிக்க உதவும் கருவிக்கு [Alpha Proton X-Ray Spectrometer] உடனிருக்கும்.

ரோஸாட்டம் [ Rosatom State Atomic Energy Corporation]

தளவுளவியில் உள்ள புதிய அமைப்புச் சோதிப்புகள் திட்டமிடப் பட்டன. தளவுளவி உணர்வுக் கருவிகள் இயக்கச் சோதனைகள் முடிந்தன. நிலவுத் தளப் போலிக்குழிகள் [Lunar Artificial Craters] கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டுப் பயிற்சிகள் முடிந்தன.

Image result for Chandrayaan 2 Rover

[Click to Enlarge]

தளவுளவியை மெதுவாய் இறக்கப் பயிலும் நிலவுத் தளப்பரப்புச் சோதனைச் சாதனம் [Lunar Terrain Test Facility for Lander Drop] தயாராக உள்ளது. மற்றும் தளவூர்தி நகர்ச்சிச் சோதிப்புகளும் [Rover Mobility Tests] தயாராக உள்ளன.

ஜித்தேந்திர சிங், விண்வெளி ஆய்வு உதவி மந்திரி

சிக்கலான GSLV  இந்திய ராக்கெட் ஏவல்களில் வெற்றி எதிர்பார்ப்பு 50% மட்டுமே.   இந்தியா இந்த முற்போக்கு தொழில் நுணுக்கத்தை அறிந்து பளுவான விண்வெளிச் சாதனங்களைச் சுய முயற்சியில் சுமந்து செல்ல விரும்பியது.  அந்த முயற்சியில் தற்போதுதான் வெற்றி ஏற்பட்டுள்ளது.

அஜய் லேலி (Space Expert, Institute of  Defense & Security Analysis, New Delhi)

Image result for Chandrayaan 2 Rover

[Click to Enlarge]

2019 ஆண்டில் மீண்டும் நிலவை நோக்கிப் போகும் சந்திரயான் -2 விண்ணூர்தி

2008 ஆம் ஆண்டு நவம்பர் 12 இல் சந்திரான் -1 விண்ணூர்தி நிலவை நெருங்கி வெற்றிகரமாகச் சுற்றி முதன்முதல் பனித்தள வடிவில் நீர் இருப்பதை எடுத்துக் காட்டியது.  அது செய்ய முடியாத பணிகளைச் செய்து முடிக்க இப்போது சந்திரயான் -2 தயாராகி வருகிறது.  சந்திரயான் -2 நிலவுத் தேடல் பயிற்சிகளில் தன்னுடன் நிலவில் மெதுவாய் இறங்கும் ஓர் தளவுளவியும் [Lunar Lander], அதிலிருந்து நிலவுத் தளப்பரப்பில் தவழ்ந்து சோதிக்கச் செல்லும் ஒரு தளவூர்தியும் [Lunar Rover] இணைக்கப் படும்.   ஆகவே சந்திரயான் -2 முதல் சந்திரயான் -1 விடப் பெரும் பளுவைத் தூக்கிச் செல்லும், பூத ராக்கெட் தயாரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் முதன்முதல் இந்திய விண்வெளி ஆய்வகம் நிலவில் மெதுவாய் இறங்கும் தளவுளவிப் பொறிநுணுக்கப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டும்.

மேலும் இறங்கிய தளவூர்தியிலிருந்து, நகர்ந்து செல்லும் தளவுளவி சோதிக்கப்பட வேண்டும்.  மேலும் சிறப்பாக, தளவுளவி நிலவின் தளத்தை ஆழ்ந்து சோதிக்க மண் மாதிரிகள் அனுப்புவதை, சந்திரயான் -2 மீளூர்தி [Return Trip]  எடுத்துக் கொண்டு மீளவேண்டும். சவாலான இப்பணிகள் வெற்றி பெறப் பல்வேறு பயிற்சிகள் செய்து துணிவும், மன அழுத்தமும் வேண்டும்.  2013 ஆம் ஆண்டில் ஏவப்பட வேண்டிய சந்திரயான் -2, ஐந்து வருடங்கள் தாமதமாகி 2018 ஆண்டு துவக்க மாதங்களில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வகம் அறிவித்துள்ளது. சந்திரயான் -2 திட்டத்துக்குத் தேவைப்படும் கனப்பளு தூக்கும் ஏவுகணை தயாரிப்பில் தாமதமானது முதல் காரணம்.  அடுத்துச் செவ்வாய்க்கோள் சுற்றும் மங்கல்யான் திட்டம் முதன்மை இடம் பெற்றது இரண்டாம் காரணம்.

Image result for Chandrayaan 2 Rover
Image result for Chandrayaan 2 Rover

2017 பிப்ரவரி 15 இல் கனப்பளு தூக்கும் ஒரே ஏவுகணையில் 104 துணைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி அனுபவம் பெற்றுள்ளது. சந்திரயான் -2 விண்வெளித் திட்டத்தில் நிலவுக்குச் செல்லும் ஒரு சுற்று விண்ணூர்தி, ஒரு தளவுளவி, ஒரு தளவூர்தி [One Orbiter, One Lander, One Rover]  ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்கள் கொண்டிருக்கும். சந்திரயான் -2 விண்ணூர்தி நிலவுக்கு 60 மைல் [100 கி.மீ] உயரத்தில் பறக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்ணூர்தியிலிருந்து பிரித்து தளவுளவி மெதுவாய் இறக்கும் சிறிய எதிர்ப்பு ஏவுகணைகள் [Retro Rockets] நிலவுப் போலிக்குழிகள் [Lunar Craters] அமைக்கப்பட்டுச் சோதிக்கப் படுகின்றன.  தளவூர்தியைச் சுமந்து கொண்டு தளவுளவி மெதுவாய் இறங்கி நிலவின் தளத்தில் நிலையாக அமரும்.  பிறகு தளவூர்தி தானாகப் பிரிந்து தவழ்ந்து சென்று தளப்பரப்பு மண், பாறைகளைச் சோதிக்கும். இந்தியப் பெரும் சாதனையாகக் கருதப்படும் சந்திரயான் -2 நிலவுத் திட்டத்துக்கு ஆகப் போகும் நிதிச் செலவு : சுமார் 91 மில்லியன் அமெரிக்க டாலர் [450 கோடி ரூபாய்] 2017 நாணய மதிப்பு.  2018 இல் சந்திரனில் தவழ்ந்து செல்லும் இந்தியத் தளவுளவி உலக நாடுகளில் பெரும் பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை..

“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லா மல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

“நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

“சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

Fig 1G Indian Rockets

“இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டு கிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

“சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு சந்திரனைச் சுற்று வீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும்.

Image result for Chandrayaan 2 Rover
Image result for Chandrayaan 2 Rover

சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.  தாய்க்கப்பல் ஆணைச்சிமிழ்  தளவுளவி இறக்கியையும், தளவூர்தி வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இப்போது முழுமையாய்க் கிடைத்துள்ளது.  அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

Image result for Chandrayaan 2 Rover

பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.   இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

Image result for Chandrayaan 2 Rover
Image result for Chandrayaan 2 Rover

2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.  தாமதமாகும்.

++++++++++++++++++++++++++

தகவல்

  1. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-first-orbit-raising-manoeuvre-earth-1573017-2019-07-24
  2. https://in.mashable.com/science/5188/its-getting-there-chandrayaan-2-completes-second-orbit-successfully
  3. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-mission-launch-live-news-updates-1571958-2019-07-21
  4. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-mission-launch-live-news-updates-1571958-2019-07-21
  5. https://www.isro.gov.in/chandrayaan2-latest-updates

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 28, 2019

Series Navigationதேவதை துயிலும் கல்லறைநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *