Posted in

இந்த இதழ்கள் இடம்பெயராதா…..

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஜெ.பாண்டியன்
வாரம் தவறாது
வாசல் கொண்டுவரும் வார இதழின்
முகப்பிலும்
இன்னபிற பக்கங்களிலும்
முழுக் காலும்
இடையு முரித்த பெண்கள்
இடை குறுக்கி
கிறக்கும் கண்களும்
முறுவல் புன்னகையுமாய்
பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்..

வாசிக்கும் வாசகனின்
கண்களிலும் மனத்திலும்
இச்சைகளை
கிளர்ந்தெளச் செய்கிறார்கள்….

பின்னொருநாள் அதே இதழின்
வேறு பதிப்பின்
பக்கங்களை புரட்டி
பாதி கடந்திருந்த போது..

சாகசபட்சிகளால் எழுதப்பட்ட
பெண்ணியக் கவிதையும்
கட்டுரையும்
ஏகத்துக்கும் எடுத்துரைக்கும்
இதோபதேசம்
அதே வாசகனின் மனத்தில்
என்ன சிந்தையை
வித்திட முடியும்….

ஒன்றிலிருந்து மற்றொன்றை
புறக்கணித்து தான்
வாசிக்கவோ நேர்படவோ
வேண்டும் என்றால்
இந்த கவிதையை
நீங்கள் நிராகரித்துவிடுங்கள்…
ஆம் !
அதே நேரம்
இந்த வார இதழ்கள்
என் போன்றோர் களால்
நிராகரிக்கப் பட்டிருக்கும்….

Series Navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *