அசையும் புழுவுடன்,
அசைவற்ற மீன்தூண்டில் நரம்பு
அனங்குவதற்கென
மழிக்கப்பட்டிருந்த தலையுடனும்,
பழைய தாமிர உலோக
நிறத் தோலுடனும்.
காத்திருந்தான் ஒரு கற்சிலை போல்
நீருக்குள்ளிருந்த மீன்
அவனைத்தனது
வாலை மட்டும்
அசைத்துக்கொண்டே
பார்த்துக்கொண்டிருந்தது.
வாலசைவால் சலனப்பட்ட நீர்
புழுவையும் சிறிது
அலைபாயச்செய்தது
ஏதுமறியாத புழு ,மீனின் கண்களை
உற்று நோக்கியவாறு வளைந்து
நெளிந்து கொண்டிருந்தது.
கலங்கிய நீர்த்திரைகளினூடே
அவனால் அக்காட்சியைக்காண
இயலவில்லை.
பின்னர் அதிவேகமாக
மீன் தனது வாலைச்சுழற்றி
தூண்டில் நரம்புடன்
மீனவனை உள்ளுக்கிழுத்து
இரையாக்கிக்கொண்டது
மாட்டிக்கொண்டிருந்த
புழு விடுபட்டு
பின்நீந்திச்சென்றது.
– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
- தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு
- இதற்கும் அப்பால்
- இரண்டு கூட்டங்கள்
- சமனில்லாத வாழ்க்கை
- கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்
- நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்
- பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்
- ஜென் ஒரு புரிதல் 11
- அகஒட்டு( நாவல்)விமர்சனம்
- அடைமழை!
- தேடல்
- ஒரு கடலோடியின் வாழ்வு
- காலம் கடந்தவை
- எனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)
- தோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.
- பிரபஞ்ச ரகசியம்
- இதுவும் ஒரு சாபம்
- வாசிக்கஇயலாதவர்களுக்கு
- தெய்வத்திருமகள்
- பேசித்தீர்த்தல்
- நகரத்து மாங்காய்..
- அதுவும் அவையும்!
- காரணமில்லா கடிவாளங்கள்
- நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.
- கனவுகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு !(கட்டுரை : 74)
- சங்கமம்
- நிலா விசாரணை
- இரை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)
- தமிழ் வளர்த்த செம்மலர்
- உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி
- பேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….
- பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்
- முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8
//கலங்கிய நீர்த்திரைகளினூடே
அவனால் அக்காட்சியைக்காண
இயலவில்லை.//
//தூண்டில் நரம்புடன்
மீனவனை உள்ளுக்கிழுத்து
இரையாக்கிக்கொண்டது
மாட்டிக்கொண்டிருந்த
புழு விடுபட்டு
பின்நீந்திச்சென்றது.//
உயிர்களின் அன்பின் மிகுதி .
very nice :) lets a person to think abt this poem in many directions..