என்னோடு வாழ வந்த வனிதை மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 10 of 20 in the series 17 டிசம்பர் 2017

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

என் கதையைக் கேட்பார் எங்காவது

எவரேனும் உள்ளாரா,

என்னோடு வாழ வந்த அந்தப்

பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள ?

பெருங் கதை யுள்ள

பெண்ணைப் பற்றி அறிந்தால் நீ

வருத்தம் அடைவாய் !

ஆயினும்

ஒருநாள் கூட வேதனைப் படாய் !

அவளொரு பெண்ணே !

ஆம் பெண்ணே !

கடந்த போன கால மெல்லாம்

நினைத்த போது,

விலகிச் செல்ல முனைந்தி ருக்கிறேன்

கடினமாக !

அப்போது என்னை நோக்கி

அழத் துவங்குவாள் !

உறுதி செய்வாள் வெகுமதி அளிப்பதாய்;

நானும் அதை நம்புவேன் !

ஏனென அறியேன்!

அவளொரு பெண்ணே !

ஆம் பெண்ணே !

ஒரு மாதிரிப் பெண்ணவள்,

உனைத் தாழ்த்திட முனைபவள் !

உன் சகத் தோழர் முன்பு

உன்னை மூடனாய் ஆக்குபவள் !

நல்லவள் என்று

நான் அவளைப் பாராட்டும் சமயம்

முகக் குளிர்ச்சி தெரியும் !

அவளொரு பெண்ணே !

ஆம் பெண்ணே !

எவரேனும் சொல்லிக் கொடுத்தாரா

இளமையில் உள்ள போது,

துன்பம் அளித்தால்

இன்பம் விளையு மென்று ?

புரியுதா அவளுக்கு,

அனுதினமும்

ஒருவன் களியாட்டம் ஒதுக்கி

முதுகை முறித்துப் பணம்

சம்பாதிக்க வேண்டு மென்று ?

நம்புவாளா

அந்தப் பெண் அதை

அவன் செத்த பின்னும் ?

அவளொரு பெண்ணே !

ஆம் பெண்ணே !

Series Navigationஊழ்எதிர்பாராதது
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *