சீன அரசாங்க ஊடகமான க்ஸின்ஹூவா, இந்த வருடம் சீனாவின் கட்டாய உழைப்புமுகாம் முறையை சீர்திருத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் தலைவராக பொறுப்பேற்கும் க்ஸி ஜின்பிங் Xi Jinping தனது உரையில் சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதி அளித்ததன் முதல் படி என்று கூறுகிறார்கள்.
1957இலிருந்து சீனாவில் இருக்கும் “உழைப்பு மூலம் மறுகல்வி”re-education through labour அமைப்பு, சாதாரண குற்றங்களுக்கு கூட எந்த விதமான நீதிமன்றம், வழக்குறைஞர் இடையீடு இல்லாமல் நான்கு வருடங்களுக்கு சிறை தண்டனை கொடுக்கலாம் என்று போலீஸுக்கு அனுமதி அளிக்கிறது. இந்த முறை பொதுவாக அரசாங்கத்தோடு மாறுபடுகிறவர்களை தண்டிக்கவே பயன்படுகிறது என்றும், இது சட்டத்தின் படி ஆட்சி என்பதற்கு மாறாகவும் இருக்கிறது என்று இந்த அமைப்பை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.
நாட்டுக்குள் பாதுகாப்புக்கான தலைவரான மெங் ஜியஞூMeng Jianzhu இந்த அமைப்பே நீக்கப்படும் என்று முன்னர் சொன்னதற்கு மாறாக க்ஸின்ஹூவா செய்தி இந்த அமைப்பு சீர்திருத்தப்படும் என்று கூறியிறுக்கிறது. முந்தைய செய்திகள் உடனே செய்தித்தளங்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.
இந்த வருடம் சீன அரசாங்கம், தேசிய அரசியல் மற்றும் சட்ட மாநாடு மூலமாக விவாதத்துக்குரிய “உழைப்பு மூலம் மறுகல்வி” திட்டத்தை சீர்திருத்த முனையும்” என்று க்ஸின்ஹூவா தெரிவித்திருக்கிறது.
முன்பு மெங், ”தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையான கமிட்டி ஒப்புதல் மூலம் இந்த முறை நீக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
தேசிய மக்கள் காங்கிரஸ் என்பது ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் நடக்கும் சீனாவின் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றத்தை குறிக்கிறது.
அறிவுஜீவிகள், மனித உரிமை போராளிகள், வழக்குறைஞர்கள், ஊடகங்கள் ஆகியவைகள் இந்த கட்டாய உழைப்பு முகாம்களை கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார்கள்.
இந்த வருடமே இந்த முறை நீக்கப்பட்டால், சட்டம் மூலமாக ஆட்சி என்பதற்கு முதன் படிக்கட்டாக இருக்கும்” என்று ஹே வெய்ஃப்ங் என்ற பீகிங் பல்கலைக்கழக சட்ட பேராசிரியர் தெரிவித்தார்.
க்ஸின்ஹூவா செய்தி ஊடகத்தின்படி, சீனா முழுவதிலும் 350 உழைப்பு முகாம்களில் 160000 பேர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நிக்கோலஸ் பெகுலின் என்ற மனித உரிமை கண்காணிப்பு ஆய்வாளர், இது புதிய தலைமை சில சீர்திருதங்களை நோக்கி செல்லும் படி என்று கூறுகிறார்.
இதனை முழுவதுமாக நீக்குவதே சரி என்றும், இதனை சீர்திருத்துவது என்பது, அரசாங்கம் இதனை தொடர்ந்து நடத்துவதும், சற்று கடுமையை குறைப்பதும் என்றுதான் பொருள் என்கிறார்.
அரசாங்க ஊடகமே இந்த அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை உதாரணமாக காட்டியிருக்கிறது. ரின் ஜியான்யூ என்ற கிராம அதிகாரி, அரசாங்கத்தை விமர்சித்ததும் உடனே இந்த கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டதை குறிப்பிடுகிறது.
டாங் ஹுஇ என்ற பெண் தனது மகளை பாலுறவு பலாத்காரம் செய்த ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காகவும் இந்த உழைப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். சில வருடங்கள் கழித்து இங்கிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
சீனா இந்த முறையை சீர்திருத்துகிறதா என்பது, உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் சக்தியை பொறுத்தது. இந்த அமைப்புகளே உள்நாட்டுகலவரங்களை கட்டுப்படுத்தவும், கட்சியின் அதிகாரத்தை நாட்டின் மீது திணிக்கவும் உதவுகின்றன.
- கட்டாய உழைப்பு முகாம்களை சீர்திருத்த போவதாக சீனா கூறுகிறது.
- கணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்
- ‘எனது பர்மா குறிப்புகள்’ பற்றிய ஒரு வாசகனின் சில குறிப்புகள்
- சென்னை 2013ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னுடைய 4 நூல்கள்
- மெய்ப்பொருள்
- ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு
- தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -42
- இட்லிப்பாட்டி
- செவ்விலக்கியங்களில் பரத்தையர்
- முகம்
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3
- ராம்சரண் ( தெலுங்கு மொழி மாற்றப் படம் )
- மணிராமின் “ தமிழ் இனி .. “
- அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்
- பெண்ணுடலும் பாலியல் வன்முறையும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….12 க.நா.சுப்ரமண்யம் – ‘இலக்கிய விசாரம்’
- பொல்லாதவளாகவே
- வால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)
- சாதி….!
- “சேர்ப்பிறைஸ் விசிட்” – சிறுகதை
- மணலும், (வாலிகையும்) நுரையும் – 7
- தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்
- அம்மாவின் அங்கி!
- அக்னிப்பிரவேசம்-18
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -1 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி]
- இன்னொரு வால்டனைத் தேடி…..
- சாய்ந்து.. சாய்ந்து
- “சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”
- சுரேஷ்குமார இந்திரஜித் ”நானும் ஒருவன்” (புதிய சிறுகதைத் தொகுப்பு) ஒரு வாசிப்பனுபவம்
- ஐன்ஸ்டைனின் பிண்ட சக்தி சமன்பாடு (E=mc^2) வளைந்த பிரபஞ்சக் கால வெளியில் பயன்படுமா ?
- இரு கவரிமான்கள் – 5
full Freedom is as dangerous as no freedom. The world today proves that unlimted freedom to people in country like ours has not proved to be a good system. China, with its vast population and many limitations could bring economic success and complete control over its people and country. Yes, there may be some ‘excesses’ sometime; but only these excesses can be addressed to. In the name of democracy and freedom, we in India prove to the world that democracy is not the best of the forms of governement. This freedom and democracy has resulted in total anarchy of individuals (belonging to all politica parties) in Karnataka; today the whole state is so arrogant and proud of neglecting, disrespecting the verdicts of Supreme Court of India. So, let us leave China to continue to be whatever she is in the name of Communism or Maoism. Because there the public life is not brought to a halt by any tom, dick and harry. Perhaps, if only we could bring some ‘re-education through labour’ approaches, there can be development and peace in this nation.