கண்ணீர் அஞ்சலிச்
சுவரொட்டியில்
விஜயலட்சுமி புன்னகையுடன் …
முதலில் அவர்
யாரோவென நினைத்தார்
இடது புருவ மத்தியில்
இருந்த தழும்பு
ஐம்பது வருட நினைவுகளை
வரிசைப்படுத்த ஆரம்பித்தது
அவரும் அவளும்
மனமொத்த காதலில்
ஒவ்வொரு கல்லையும்
பார்த்துப் பார்த்துக்
கற்பனைக் கோட்டையை
உருவாக்கினார்கள்
அவள் கண்களில்
அவரைப் பற்றிய
ஆசைகள் மிதந்துகொண்டிருக்கும்
அவர் சொற்களில் அவர்களது
எதிர்காலச் சம்பவங்கள்
வரிசைப்பட்டுக் கொண்டே இருக்கும்
சங்கீதத்தின்
மகிழ்ச்சியான எல்லா ராகங்களும்
அவர்கள் உரையாடலில்
வந்து போகும்
மலர்களின் மென்மையை
அவள்
மொத்தமாகத் தனதாக்கி இருந்தாள்
சுவாரஸ்யமான
காதல் பாதையில்
அவர்கள்
மௌனகீதம் பாடினர்
ரகசிய உறவு
மெல்ல மெல்லப்
புகைய ஆரம்பித்தது
அவளுக்கு அப்பாவின்
அடி உதை
தோசைத்திருப்பிச் சூடு …
பெருந்தீயின் ஜுவாலை
அவள் மனத்திலும்
உடலிலும்
குபீரெனப் பாய்ந்தது
இருநூறு கிலோ மீட்டர் தாண்டி
அவளுக்கு மணம் முடித்தார்கள்
தாய் வீடு வரும்போது
ஒரு முறையேனும்
அவள் முகம் பார்க்க
அவர் விரும்பியது
நடக்கவேயில்லை
கண்ணீர் அஞ்சலிச்
சுவரொட்டியின் முன்
இப்போது கண்ணீர்த்துளிகள்
அவர் சட்டையை நனைக்க
முகாரி ராகம்
மனத்தில் இழைய ஆரம்பித்தது !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
- 2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.
- ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.
- என்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்
- அன்பின் ’காந்த’ ஈர்ப்பு
- வாடிக்கை
- கண்ணீர் அஞ்சலி !
- “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு
- மௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்
- ஈரமுடன் வாழ்வோம்
- வளையாபதியில் பெண்ணியம்.
- 2017 ஒரு பார்வை
- ஆஸ்துமா
- தொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை
- காத்திரு ! வருகிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை
- இலங்கைப் பயணம் சில குறிப்புகள்
- மாயச் சங்கிலி!
- தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா
- ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு