கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்

This entry is part 5 of 13 in the series 11 செப்டம்பர் 2022

 

 
கல்யாணம் 1
 
ஒரு கல்யாணத்திற்குப்
 போனேன்
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்
நானும் பேசிக் கொண்டிருந்தேன்
எல்லோரும்
கேட்டுக் கொண்டிருந்தார்கள்
 
 
கல்யாணம் 2
 
ஒரு திருமணத்தில்
கலந்து கொண்டேன்
 
வாசலில் வா வா என்றார்கள்
உள்ளேயும் 
வா வா என்றார்கள்
டிபன் சாப்பிடும் 
கூடத்தில்
சிலர் புன்னகைத்தார்கள்
யாரும் பேசவில்லை
 
கல்யாணம் 3
 
 
டிபன் சாப்பிட்டேன்
சரி சரி சரி சரி சரி
டிபன் சாப்பிட்டேன்
சரி சரி சரி சரி சரி
சாப்பாடு சாப்பிட்டேன்
சரி சரி சரி சரி சரி
சாப்பாடு சாப்பிட்டேன்
சரி சரி சரி சரி சரி
 
 
கல்யாணம் 4
 
இன்று மாலை சூட்டிக் கொண்டார்கள்
நினைத்த மாதிரி
நினைத்த நேரத்தில் 
நடந்து விட்டது எல்லாம்
நண்பர்கள், உறவினர்கள்
வந்திருந்து 
கைக்குலுக்கிக் கொண்டார்கள்
இனிமேல் அவர்கள்தான்
அவர்களுக்குள்
பேச ஆரம்பிக்க வேண்டும்
 
கல்யாணம் 5
 
எல்லாம் முடிந்து விட்டது
எல்லோரும் கிளம்பிப் போய்விட்டார்கள்
காலியாக இருந்தது கல்யாண மண்டபம்
நாற்காலிகள் தாறுமாறாக கிடந்தன
காப்பிக் கோப்பைகள் 
சிதறிக் கிடந்தன
இன்னும் துப்புறவாளர்கள் 
வரவில்லை
 
 
 
Series Navigationவீடுஅதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூரும் மாணவர்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *