அம்மாவிற்கு
மிகவும் பிடிக்கும்
மாம்பழங்கள்.
இமாம்பசந்த், பங்கனப்பள்ளி
மல்கோவா, ருமேனி
என ஒவ்வொன்றின் சுவையும்
எப்படி வேறென
மாம்பழம் சாப்பிடும்
அம்மாவின் முகமே சொல்லும்.
மாயவரம் பக்கம்
அம்மாவின் அண்ணன் இருந்ததால்
பாதிரியை
கிறிஸ்தவப் பழம் என
அதிகம் கொண்டாடுவாள்.
மடியை விட்டகலாத கன்றென
நார்ப்பழங்களின்
சப்பின கொட்டையை
தூக்கி எறிய மனதற்றிருக்கும்
எங்களை
” எச்சில் கையோடு
எவ்வளவு நேரம் ” ?
என ஒருபோதும்
வைததில்லை அம்மா.
ஜூன் ஜூலையில்
பெருகிக் கொட்டும்
தோல் தடித்த நீலம்
அம்மாவைப் போலவே
இனிமையை
வாசனையால் கூட
வெளிக்காட்டாது
ஒளித்து வைத்திருக்கும்.
சுதந்திர தினத்திற்கு
சாக்லெட்டிற்குப் பதிலாக
நீலம் பழங்களையே
குழந்தைகளுக்குக் கொடுக்கும்
அம்மா
ஆகஸ்ட்டின் இறுதியில்
மாம்பழ சீஸனோடு
தன்னை முடித்துக்கொண்டபின்
நடக்கும்
ஒவ்வொரு நினைவுப் படையலிலும்
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்
நீலம் பழத்தின் நடுவிலிருந்து
தவறாது
மெல்ல அசைந்து வெளிவரும்
வண்டு எனக்கு
அம்மாவையே காட்டும்.
—-ரமணி
- உன் காலடி வானம்
- பரிணாமம் (சிறுகதை)
- ஒரு புதையலைத் தேடி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23
- நினைவுகளின் சுவட்டில் (95)
- மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்
- காற்றின்மரணம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5
- கசந்த….லட்டு….!
- சிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.
- இசை என்ற இன்ப வெள்ளம்
- தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- கவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36
- அருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-
- ஜிக்கி
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17 ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
- கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)
- முள்வெளி அத்தியாயம் -19
- நித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)
- தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது
- பஞ்சதந்திரம் தொடர் 54
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு
- பொறுப்பு – சிறுகதை
- நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு
- தரிசனம்
- கனலில் பூத்த கவிதை!
- தசரதன் இறக்கவில்லை!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி
- சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?
- கொடுக்கப்பட பலி
- வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்
- அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி
ramanien kavidhai avaradhu ammaven paasathai maampazham moolam sollappatirukiradhu…maampazham pola suvaiyaana kavidhai!
ramani in kavidhai avaradhu ammaven paasathai maampazham moolam sollappatirukiradhu…maampazham pola suvaiyaana kavidhai!
மரணம் முடிவல்ல..நினைவுகளாக தொடரும்
மாம்பழத்து வண்டு நினைவுகளின் குறியீடாக வந்துள்ளது அருமை.
இப்படித்தான் ஏதாவது ஒரு நினைவோ ஏகப்பட்ட நினைவுகளொவென அம்மா நம்மோடு வாழ்ந்துகொண்டே இருப்பார்.
யாரின் அம்மாவாவாது அவர்தம் மனத்தளவில் இறந்துபோய்விட்டதுண்டா?
ரமணி, அழகாயிருக்கிறது கவிதை. நன்றி.
இப்படித்தான் ஏதாவது ஒரு நினைவோ ஏகப்பட்ட நினைவுகளோவென அம்மா நம்மோடு வாழ்ந்துகொண்டே இருப்பார்.
யாரின் அம்மாவாவாது அவர்தம் மனத்தளவில் இறந்துபோய்விட்டதுண்டா?
ரமணி, அழகாயிருக்கிறது கவிதை. நன்றி.
வானமெனினும் வண்டெனினும், நாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் நமக்கு தாலாட்டும் தொட்டில் – அம்மாவின் நினைவு – இருந்தாலும் அவள் மறைந்தாலும்.
மாம்பழத்து வண்டாய், பூமரத்துக் குயிலாய் அம்மாக்கள் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள், மகவுகள் மரிக்கும் வரை..