மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
போகட்டும் என் கண்மணி !
போகட்டும் !
காதல் என்பது புளுகு மூட்டை
இனிக்கும் வேதனை !
வலிக்கும் ஆலிங்கனம் !
புரிய வில்லை அது புகல்வது !
பூக்களின் கோர்ப்பை
ஊக்கிடும் என் விழிகள்
பொழியும் கண்ணீர் துளிகள் !
சுயச் சமர்ப்பணத் துக்கு
முயலும் இதயம்
வேறொன்றை வணங்கிட :
‘ஏற்றுக் கொள் என்னை
ஏற்றுக் கொள் என்னை’
என்று யாசிக்கும் மாற்றான்
முன் மண்டியிட்டு !
ஆண்டாண்டு தோறும் நாம்
துயரம் அடைவது —
எப்போ தாவது நின்று
ஒருகணம்
ஒருவரை ஒருவர்
கண்டு களிப்பது, இருவரும்
கட்டிப் பிடிப்பது —
கண்ணீர்க் கடலில் மிதப்பது
மற்றவருக் காகப் புன்சிரிப்புகள்
இவை எல்லாம் ஏற்புடைத்தா ?
வாழ்க்கை ஆனந்தமே
குறிக்கோளாய்த் தேடுவ தெல்லாம்
ஒருவன் வாழ்வுப் பூரிப்பை
அடியோடு
கெடுத்து விடுவது !
+++++++++++++++++++
பாட்டு : 313 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). கவர்ச்சிக் கானங்கள். காதலிக்கத் தேடிக் கிடைக்காத பெண்கள்
+++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated
from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 27, 2012
*********************
- கம்பனின் சகோதரத்துவம்
- பெண்மனம்
- விக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘
- ‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி
- பழமொழிகளில் ‘வழி’
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19
- பதின்பருவம் உறைந்த இடம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4
- விமோசனம்
- தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு
- ஒரு மலர் உதிர்ந்த கதை
- அக்கரை…. இச்சை….!
- பர்த் டே
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6
- மனனம்
- முகங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு
- அரியாசனங்கள்!
- மெங்பெய்யிலிருந்து வந்த பெண்
- முள்வெளி – அத்தியாயம் -2
- அணையா விளக்கு
- பஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)
- ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ
- காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)
- பாரதி 2.0 +
- ஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘
- ஜெப்ரி ஆர்ச்சரின் ‘ ஸ்டக் ஆன் யூ ‘
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்
- சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்
- நட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)
- பாசாவின் கர்ண பாரம்
- இறக்கும்போதும் சிரி
- நீலம்
- நெய்தல் பாடல்
- முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .
- ”பின் புத்தி”
- ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்
- பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்
அன்பின் திரு ஜெயபாரதன்,
மிக அழகான மொழிபெயர்ப்பு. தொடரச்சுவையான களம். நன்றி.
அன்புடன்
பவள சங்கரி.
மதிப்புக்குரிய திருமதி பவள சங்கரி,
உங்கள் படைப்புகளால் திண்ணையின் இலக்கியத் தரம் உயர்ந்து விட்டது. சீதாம்மா, பவள சங்கரி, ஜெயஸ்ரீ ஆகியோர் ஆக்கங்கள் திண்ணையின் அணிகலன்கள். இது திண்ணையின் பொற்காலம்.
பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
அன்பின் திரு ஜெயபாரதன்,
தங்களுடைய வார்த்தைகள் ஊக்கமளிக்கும் மாமருந்தாக உள்ளது. நனி நன்றி ஐயா. தங்கள் வாக்கை காக்கும் சக்தியும் ஆண்டவர் எமக்கு அருள வேண்டும்.
அன்புடன்
பவள சங்கரி.
பெருமதிப்புக்குரிய திரு.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு,
தங்களின் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
தாங்கள் குறிப்பிட்ட இயக்கிய தரத்தில் உயர்ந்த படைப்புகள் அளிக்கும் சீதாம்மா அவர்களும்,, மற்றும் பவள சங்கரி அவர்களும்..
திண்ணையின் அணிகலன்கள். ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தான்…அவர்களது ஆக்கங்களால்… திண்ணைக்கு பொற்காலம் என்று நீங்கள்
சொல்வதும் சரியே…என்னை பொற்கால வரிசையில் நிறுத்திப் பார்க்கிறீர்களே….உண்மையில் எனக்குத் தான் இப்போது பொற்காலம்…தங்களைப் போன்ற
பெரியவர்களின் ஆசியும்….பாராட்டுகளும்…… பெறுவதற்கு இறைவனுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்.
தங்களது கவிதை தமிழாக்கம்….மிகவும் அருமை.
மிக்க நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.