சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காறறின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனாலதான் சளி பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது. சளி பிடித்துள்ள ஒருவர் தும்மினால் அல்லது இருமினால் வெளியேறும் நீர்த்துளிகளில் வைரஸ் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எதிரே உள்ளவருக்கு அது எளிதில் தோற்றும். இதனால்தான் நாம் இருமும்போதும் தும்மும்போதும் வாயை கைக்குட்டையால் மூடிக்கொள்ளவேண்டும். இது அடுத்தவருக்கு பரவாமல் இருக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கை.
சில சமயங்களில் இதே சளி நீண்ட நாட்களாகத் தொடரும், மருந்துகள்கூட பயன்தராது. இதையே தொடர் மூக்கு அழற்சி என்கிறோம். இப்படி சளி தொடர்ந்து நீடிக்க சில காரணங்கள் இருக்கலாம். அவை வருமாறு :
* கிருமித் தொற்று – சைனஸ், டான்சில் போன்றவை இருப்பின் தொடர்ந்து மூக்கில் கிருமித் தொற்று இருந்துவரும். இதனால் அழற்சி உண்டாகி சளி அதிகம் சுரக்கும்.
* சுற்றுச் சூழல் மாசு - புகை, தூசு, சிகரட் புகை போன்றவற்றால் மூக்கினுள் நேரடியாக பாதிப்பு உண்டாவது. நகர்ப் புறங்களில் பெருகிவரும் வாகனங்களும், தொழிற்சாலைகளும் புகையை தொடர்ந்து வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பதோடு, பலருக்கு ஒவ்வாமையை உண்டுபண்ணி தொடர் மூக்கு அழற்சியை உண்டுபண்ணுகின்றன.
* மூக்கில் அடைப்பு – மூக்கின் நடுச்சுவர் விலகி ஒரு பக்கம் அடைப்பை உண்டு பண்ணும் அடைபட்ட பகுதியில் அழற்சி உண்டாகி சளி பெருகும்.
* மூக்கினுள் இரத்த ஓட்டத்தில் மாற்றம் – இரத்த ஓட்டம் அதிகரித்தால் சளி சுரப்பிகளும் அதிகம் செயல்படும். சளி சுரப்பதும் அதிகமாகும்.
* தைராய்டு சுரப்பி கோளாறு.- இந்த சுரப்பி சரியாக இயங்கவில்லையெனில் அழற்சி ஏற்படும்.
இவையெல்லாம் மூக்கில் சளி தொடர்ந்து நீடிக்கச் செய்யும் சில காரணங்கள்.
- நிச்சயம்
- தொடர் மூக்கு அழற்சி ( Chronic Simple Rhinitis )
- திரும்பிப்பார்க்கின்றேன். தாமரைக்கு ஒரு செல்வி – வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.
- பிறப்பியலும் புணர்ச்சியும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலவெளி மரண விண்மீன் அண்டக் கோளைச் சிதைக்கிறது
- வெட்டுங்கடா கிடாவை
- திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்
- ஆதாரம்
- அற்புத மலருக்கு ஒரு அஞ்சலி
- இளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ. இரவீந்திரன் கவிதைத் தொகுதி பவுர்ணமி இரவின் பேரலை : சுப்ரபாரதிமணியன்
- கவிதைகள் – நித்ய சைதன்யா
- அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்
- அவன், அவள். அது…! -7
- தொடுவானம் 91. தேவை ஒரு பாவை
- அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்
- அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி
- அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை
- உயிர் குடிக்கும் மதவெறிக்கு ஊழல் எவ்வளவோ பரவாயில்லை!
- நானும் ரவுடிதான்
- வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்
- இரும்புக் கவசம்
- குருட்டு ஆசை
- லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா
- வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும் நாள்: 01.11.2015 ஞாயிறு
You do not say the drugs for this