Posted in

நிலவின் வருத்தம்

This entry is part 35 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

இரவைத் துளைத்து
வானத்தைத் தொட்டுக்
கொண்டிருந்த
அடுக்குமாடிக் கட்டிடத்தின்
மொட்டை மாடியில்
தேங்கிக் கிடந்த
தண்ணீரில்
இரவுக் குளியல்
நடத்தியது ஒரு காகம்.

அதில் அருகே
குளித்துக் கொண்டிருந்தது
பௌர்ணமி நிலா…

நிலா கேட்டது
காகத்திடம்
இந்த நேரத்தில்
இங்கே எப்படி என்று.

கால நேரம் பார்த்தால்
என் தாகமும் தீராது
தேகமும் தகிப்பிலிருந்து
தணியாது என்றது
காகம் தன்
சிறகுகள் அடித்து.

நிலா சொன்னது..
அப்போதெல்லாம்
இந்த இடத்தில்
ஒரு பெரிய
குளம் இருந்தது.
மீன்கள் இருந்தன.
மரங்கள் இருந்தன.
கொக்கும் நாரையும்
குதூகலமாய இருந்தன.
தினமும் குளித்துக்
கொண்டிருந்தேன்..
இப்போது
எப்போதாவது பெய்யும்
தூறலில் மட்டும்
இந்த மொட்டை மாடியில்
தரை பூசிய நீரில்
என் உடலைத் தேய்த்துக்
கொள்கிறேன்…
என்றது மிகுந்த
வருத்தத்துடன்.

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationகூடியிருந்து குளிர்ந்தேலோ …பொன்மாலைப்போழுதிலான

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *