மாயச் சங்கிலி!
இல.பிரகாசம்
உன் மீதும்
என் மீதும் யாரோ ஒருவர்
விலங்கிடப்பட்ட மாயச் சங்கிலி போல்
உறவுமுறை கொண்டு
கட்டுப்படுத்திக் கொண்டே வருகின்றனர்.
உன் மீது நானும்
என் மீது நீயும் ஏதோ ஒருவேளையில்
ஒரு மாயசங்கிலி போல்
பொய்யான அல்லது பொய்த்துப் போகும்
கானல் நீர்க்கனவு போல்
ஏதேதோ ஒரு பெயர்களைச் சொல்லி
தற்காலிக
உறவுப்; பெயர்களை சூட்டிக் கொள்கிறோம்.
உதரத்திலிருந்து நீயும் நானும் பிறக்கின்ற போது
சக -உதரனாகி சகோதரனாகிறோம்.
உறவுமுறைகள் சதைகளுக்கு இடையில் மட்டுமா?
பெயரிடப்படாத உறவுமுறைகள் ஒரு குழு உண்டல்லவா?
தவறுகளை இயற்கை ஏற்றுக் கொண்ட
காலம் இது!
காலவழு
வழுவமைதியாகி
இலக்கணமாகி விட்டது.
உறவுகள் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு
உடன் வந்து கொண்டேயிருக்கின்றன.
சதைகள் கிழிந்து சீழ்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- 2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.
- ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.
- என்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்
- அன்பின் ’காந்த’ ஈர்ப்பு
- வாடிக்கை
- கண்ணீர் அஞ்சலி !
- “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு
- மௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்
- ஈரமுடன் வாழ்வோம்
- வளையாபதியில் பெண்ணியம்.
- 2017 ஒரு பார்வை
- ஆஸ்துமா
- தொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை
- காத்திரு ! வருகிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை
- இலங்கைப் பயணம் சில குறிப்புகள்
- மாயச் சங்கிலி!
- தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா
- ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு