இதிலிருந்துதான் தைராக்சின் ( Thyroxin ) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நமது செல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தன்மைமிக்கது. அதை Metabolism அல்லது வளர்சிதை மாற்றம் என்று கூறுகிறோம். ஆகவே உடலின் செல்கள் சக்தியை பயன்படுத்தும் விதத்தை கட்டுப்படுத்துவது இந்த தைராக்சின்.
இந்த தைராக்சின் ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரந்தால், அதையே ஹைப்பர்தைராய்டிசம் ( Hyperthyroidism ) என்கிறோம். இதை மிகைக்கேடயச் சுரப்பி நோய் என்று அழைக்கிறோம்.
ஹைப்பர்தைராய்டிசம் என் ஏற்படுகிறது?
* உணவில் அதிகமான ஐயோடின் ( Iodine )
* தையாய்டு சுரப்பி அழற்சி
* புற்று நோய் இல்லாத வளர்ச்சி
* கிரேவ்ஸ் வியாதி ( Graves Disease )
* களைப்பு
* கவனக் குறைவு
* அடிக்கடி மலம் கழித்தல்
* தைராய்டு சுரப்பி வீக்கம்
* வெப்பம் தாங்க முடியாத நிலை
* அதிகமான பசி
* அதிகமான வியர்வை
* பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறு
* ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி
* அமைதியின்மை
* பரபரப்பு
* எடை குறைதல்
* ஈரமான தோல்
* தலை முடி உதிர்தல்
* கைகள் நடுக்கம்
* அதிகமான அரிப்பு
* நெஞ்சு படபடப்பு
* வேகமான நாடித்துடிப்பு
* பிதுங்கிய கண்கள்
* தூக்கமின்மை
* உயர் இரத்த அழுத்தம்
சில இரத்தப் பரிசோதனைகள் கட்டாயம் செய்தாகவேண்டும். அவை TSH , T4, T3, Serum Cholestrol , blood, Sugar , Radio- Active Iodine Uptake போன்றவற்றின் அளவை நிர்ணயம் செய்து நோய் உள்ளதை நிச்சயப்படுத்துகின்றன.
* தைராய்டு எதிர்ப்பு மருந்துகள்- Anti – Thyroid Medication
* கதிர்வீச்சு மருத்துவம் – Radiation Therapy
* அறுவை சிகிச்சை – Surgery
உங்களைப் பரிசோதனை செய்யும் மருத்துவர் உங்களுக்கு எத்தகைய சிகிச்சை முறை தேவை என்பதைக் கூறுவார்.
தைராய்டு வீக்கம் ஒரு வேளை புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் Fine Needle Aspiration Biopsy எனும் பரிசோதனை செய்து பார்க்கலாம். வீக்கத்தில் சிறு ஊசி மூலம் திசு எடுத்து புற்று நோய் செல் உள்ளதா என்று பார்க்கும் பரிசோதனை இதுவாகும்.
தைராய்டு வீக்கத்தில் இது போன்ற கோளாறு இருந்து சரிவர கவனிக்கப்படாவிட்டால் Thyroid Crisis என்ற ஆபத்தான தைராய்டு நெருக்கடி உண்டாகலாம். நோய்த்தொற்று, காய்ச்சல் , மன உளைச்சல் போன்றவை இதை உண்டாக்கலாம். இது உண்டானால் துரித இதயத் துடிப்பு, இருதய செயலிழப்பு, மரணம் நேரலாம்.
தைராய்டு வீக்கம் உள்ளவர்கள் இதுபோன்று ஆபத்து வராமலிருக்க, மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதே நல்லது!
( முடிந்தது )
- அதிர வைக்கும் காணொளி
- விறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது
- அகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.
- அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்
- ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1
- மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3
- முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்
- அதிகாரத்தின் துர்வாசனை.
- திண்ணையின் எழுத்துருக்கள்
- வசுந்தரா..
- திண்ணையின் இலக்கியத் தடம் -16
- அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்
- நீங்காத நினைவுகள் – 28
- விடியலை நோக்கி…….
- என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’
- பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…
- டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு
- கவிதை
- பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்
- இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?
- ஒன்றுகூடல்
- புகழ் பெற்ற ஏழைகள் – 40
- தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !
- கேட்ட மற்ற கேள்விகள்
- மருமகளின் மர்மம் -10
- சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14