முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..

This entry is part 13 of 42 in the series 22 மே 2011

முள்ளால் தைத்த

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன்

கடந்தோடிவிட்ட இரண்டு வருடங்கள்

கனவாகவே இது இருந்திருக்கக் கூடாதா

என்றவொரு ஏக்கம்

இன்றும் என் மனதில்

தவியாய் தவிக்கிறது

எம் உறவுகளின்

சாம்பல் மேடுகளில்

பட்டு வரும் காற்றை

சுவாசிக்கும் கொடுமை

அழுகுரல்கள் நிறைந்த

அந்த அவல ஓசையின்

எதிரொலிகளை

கேட்கின்ற சுமைகள்

அரச பயங்கரவாதம்

எம்மவர் சதை தின்று

நரபலி எடுத்த நினைவுகள்

பசியால் துடிதுடித்தே

இறந்து போன சொந்தங்கள்

உடல் உபாதையினால்

உயிர்விட்ட எம் உறவுகள்

நோயின் உச்சத்தில்

ஆஸ்பத்திரியில் அடைக்கலம்

புகுந்தோரையும்

குண்டிவீசிக் கொன்ற கொடுமை

எல்லாமே வெறும் கனவாக

இருந்துவிடக் கூடாதா???

ஒவ்வோர் விடியலிலும்

என்னை நானே கேட்கும்

கேள்வி இது!!

குரும்பையூர் பொன் சிவராசா

ponnsivraj@hotmail.ccom

 

Series Navigationசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’ –இது மருமக்கள் சாம்ராஜ்யம்
author

குரும்பையூர் பொன் சிவராசா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *