Posted in

வாழ்க்கை எதார்த்தம்

This entry is part 5 of 45 in the series 9 அக்டோபர் 2011

ஒரு முறை தோல்வியின்
வலி உயிரின் வேரை
பிடுங்கிவிட்டு திரும்பும்
போது தோல்வியோடு
வலியும் மனப்பாடமாகி
போவதில் ஆச்சரியமில்லை

இரவை தோற்று பகல்
அழிவதில்

மழை தோற்று வெயில்
அழிவதில்

இரைச்சல் தோற்று மௌனம்
அழிவதில்

கனவுகள் தோற்று வாழ்க்கை
அழிவதில்

பிணி தோற்று உடல்
அழிவதில்

முதுமை தோற்று அழகு
அழிவதில்

துன்பம் தோற்று இன்பம்
அழிவதில்

உலகமயமாக்கல் தோற்று விவசாயம்
அழிவதில்

அரசியல் தோற்று மக்கள்ஆட்சி
அழிவதில்..

வறுமை தோற்று ஆசை
அழிவதில்

ஆணவம் தோற்று புகழ்
அழிவதில்

வறட்சி தோற்று பசுமை
அழிவதில்

ஏதோ ஒன்று அழிந்து ஆக்கம்
பெறுகிற இயற்கை நியதில்
கிடைக்க வேண்டும் என்பது
தோற்று கிடைப்பதை ஏற்பதில்
வாழ்கை எதார்தமாகிறது.

இப்படிக்கு
ராசை நேத்திரன்

Series Navigationமகிழ்ச்சியைத் தேடி…மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *