பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?

This entry is part 45 of 45 in the series 9 அக்டோபர் 2011

கோவிந்த் கோச்சா ::: இந்த படம் நியூடெல்லி விமான –புது- நிலையத்தில் எடுத்தது. விமானம் ஏறும் இடம் அருகே, -செக்யூரிட்டி செக் முடிந்த பின் – இருக்கும் உணவு வகைகள் நடுவே… ஒரு திறந்த மதுக் கடை… BAR … ஸ்டீவ் ஜாப்பிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்த இந்திய கலாச்சாரத்தின் யுவன், யுவதிகள் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் காட்சி…. இது எதைக் காட்டுகிறது…? இதே சரக்குக் கடை ரயில் நிலையத்திலோ, இல்லை பேருந்து நிலையத்திலோ திறக்கப்பட்டு ,, வண்டி […]

முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்

This entry is part 44 of 45 in the series 9 அக்டோபர் 2011

தமிழில் எஸ். சங்கரநாராயணன்   பளபள மஞ்சள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நாங்கள் போனோம். பிளாக்ஸ்டேபிளில் இருந்து ஃபெர்ன் கோர்ட் மூணு மைல் தொலைவு. சாந்துக்கலவை பூச்சு வீடு. ஒரு 1840 வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம். அலட்டல் இல்லாத அறையறையாய்ப் பிரித்த எளிய வீடு. நல்ல விஸ்திரணம். காம்பவுண்டில் ரெட்டைக் கதவு. அரைச்சந்திர வில்வளைத்த வாசல் நிலை. இதேபோல முதல்மாடியிலும் இதே வில்நிலைப்படி. தணிந்த கூரையை வெளிச்சுவர் மறைத்தது. ஒரு ஏக்ரா அளவு தோட்ட நடுவில் வீடு. நெரிசலாய் […]

பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்

This entry is part 43 of 45 in the series 9 அக்டோபர் 2011

நன்றி கெட்ட மனிதன்   ஒரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனது குடும்பத்தைத் தரித்திரம் பிடுங்கித் தின்றது. ஒவ்வொரு  நாளும் அவன் மனைவி அவனைப் பார்த்து, ”ஓய், பிராமணா! சோம்பேறி! கல்நெஞ்சனே! குழந்தைகள் பசியால் துடிக்கிறது. உன் கண்ணில் படவில்லையா? எப்படி நிம்மதியோடு இருக்க முடிகிறது உனக்கு? காடு மேடு எங்காவது போய்ச் சாத்தியமானதைச் செய்து சோறு கிடைக்க வழி பார்க்கிறதுதானே!” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.   தினசரி இதே பல்லவியைக் கேட்டுகேட்டுச் சலித்துப்போன அந்தப் […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48

This entry is part 42 of 45 in the series 9 அக்டோபர் 2011

   சமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 48 பிடிஎஃப் கோப்பு   இந்த வாரமும் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் படிப்போம். எழுவாய் (Subject) ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களைச் செய்யும்போது முதலில் செய்யும் செயலுடன் क्त्वा प्रत्ययः சேர்க்கவேண்டும். கீழேயுள்ள உரையாடலை உரத்துப் படிக்கவும்.   रविवासरेकुत्रगमिष्यति ? ravivāsare kutra gamiṣyati ? ஞாயிற்றுக்கிழமைஎங்குசெல்வீர்?   प्रमोदः –  अशोक। अद्य रविवासरः। भवान् कुत्र कुत्र गमिष्यति ? pramodaḥ –  aśoka | […]

கையாளுமை

This entry is part 41 of 45 in the series 9 அக்டோபர் 2011

காட்சி ஒன்று .. மறுத்து பேசும் பிள்ளைகளிடம் மன்றாடி மனு போட்டு, மாறுவேடம் தரித்து பயமுறுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு காட்சி இரண்டு .. உம்மென்றால் உம்மனாமூஞ்சிகளாகி, ஏனென்றால் எரிமலையாய் எழும் வயதான வீட்டு பெரியவர்கள் மனம் கோணாமலிருக்க கோணாங்கியாகி .. காட்சி மூன்று ..நான்கிலும் ஏதோவொரு உத்தியை கையாண்டதில் மான,ரோஷம்,வெட்கம் சூடு, சொரனை யாவும் இப்போது அஞ்சறை பெட்டியில்.. தாளிதத்திற்கு மட்டும் – சித்ரா (k_chithra@yahoo.com)

கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008

This entry is part 40 of 45 in the series 9 அக்டோபர் 2011

  தமிழகத்தில் பல ஆண்டுகளாக   சென்னை போன்ற பெருநகரங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள  நெல்வயல்கள்  குடியிருப்பு மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன..  குளம் ஏரி போன்ற பகுதிகளின கரைகள் நீர்பிடிப்பு பகுதிகள்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடிசைகள் போடபட்டு அதனால்  அவைகள் குட்டைகளாகிவிட்டன. . காயல்களும் சதுப்பு நிலங்களும் மண்அடிக்கப்பட்டு பெரும் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு உள்ளன. நீர் பிடிப்பு பகுதிகள் நீர்வரத்து பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு   வயல்களுக்கு பாசனம் தடைபட்டு விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள வேளாண் விளைநிலங்களின் மொத்தபரப்பு  வெகுவாக […]

இரு கவிதைகள்

This entry is part 39 of 45 in the series 9 அக்டோபர் 2011

  அகதிக்  காகம்                                           – பத்மநாபபுரம் அரவிந்தன் –   நீண்டதோர் கடற்  பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் ..   சில நூறு மைல்கள் கரையே இல்லாப் பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ, கண்டம் கடக்கும் பறவைகள் பலவும் ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்.. காகங்கள் பொதுவாக  இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை.. இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில் அடித்துவரப் பட்டிருக்கலாம்..    தொலை பயணக் கப்பல்கள்  ஓவ்வொன்றாய்  அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்.. எம்பிப் பறக்க எத்தனித்து பெருங் காற்றின் வேக வீச்சில் தடுமாறித் தத்தளித்து மீண்டுமது கப்பல் தளத்தினில் வந்தமரும்   தட்டில் அரிசி, கடலை, மாமிசத் துண்டுகள்  கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்..   ‘ காகமே ஆனாலும் அது நம் நாட்டுக் காகமன்றோ? ‘   இன்னமும் இருக்கிறது நான்கு நாட்கள்    தொடர் கடற்  பயணம்.. காற்றில்லா நேரத்தில்    சிறிது தூரம் பறந்து விட்டு   வந்தமர்ந்து ஓய்வெடுக்கும்..    சென்னை – ஆஸ்திரேலியா விசாவின்றி வந்தடைந்து    கரைகண்டக் களிப்பினில்   வேகமாய் எம்பி சுய குரலில்க்   கத்திவிட்டு கரை நோக்கிப்    பறந்ததது, மறுநாள்….    உடலெங்கும் கொத்துக் காயங்களுடன்    கப்பல்த் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி […]

யார் குதிரை?

This entry is part 38 of 45 in the series 9 அக்டோபர் 2011

அது அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லும் இராஜபாட்டை. நாலு கால் பாய்ச்சலில் ஒரு குதிரை வாயு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ‘டக்டக்’ என்று அதன் குளம்படிச் சத்தம் ஏதோ ஒரு வேக கதியில் இன்னிசை எழுப்பிக்கொண்டிருந்தது. திடீரென்று குதிரையின் வேகம் தடைபட்டது. ஓடிய வேகத்தில் கொஞ்ச தூரம் மெதுவாகச் சென்ற குதிரையை அதன்மேல் அமர்ந்திருந்த வீரன், கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, வந்த வழியில் திரும்பி, குதிரையைக் சிறிது தூரம் நடத்தினான். அதோ! அங்கே கிடப்பது யார்? அவனுக்கு என்ன […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)

This entry is part 37 of 45 in the series 9 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா யாரிந்த மாறுதல் செய்பவர் ? எவரிந்த மாறுதலைப் புரிபவர் ? இடது பக்கம் எய்த அம்பு வலது பக்கம் விழுந்தது ! மானை விரட்டிச் செல்லும் போது காட்டுப் பன்றி என்னைத் துரத்திக் கொண்டு வரும் ! சுயத் தேவைக்கு நான் சூழ்ச்சி செய்தேன் ! சிறையில் தள்ளப் பட்டேன் இறுதியில் ! பிறருக்குத் தோண்டிய குழியில் நான் தவறி விழுந்தேன் ! […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)

This entry is part 36 of 45 in the series 9 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “சகோதரர்களே ! ஒருவருக் கொருவர் போதனை கூறிக் கொள்வீர். அதுவே உமக்கு பிழைகளைத் திருத்தவும், வீணான மன நோவைத் தவிர்க்கவும் வழி வகுக்கும். பலரின் அனுபவ ஞானமே சித்திரவதைக்கு எதிரான ஒரு கவசம் உமக்கு ! அம்முறைப்பாடு நமது எதிரிகளைக் குறைக்கும்” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ காதல் என்பது என்ன ? காதல் என்பது கவிஞனுக்குப் பெருமித உணர்ச்சி ! […]