வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்

This entry is part 30 of 31 in the series 7 ஏப்ரல் 2013

வேதாளத்தின் மாணாக்கன்

(The Devil’s Disciple)

அங்கம் -2 பாகம் -4

மூன்று அங்க நாடகம்

 Cover image

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் இடப் போன  ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது.  அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை  தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார்.  அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.

Fig 1 you have been kind

 

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொது வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளா ராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple)சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

Fig 2 please do not go

 

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம்.   இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது.   இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப் பட்ட போர்க் காலம் அது .  பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது.   அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது.   அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது.   அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில்  எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது.   அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர்.   அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள்  உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக்  [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார்.   தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான்.  இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து  காப்பாற்றுகிறார்.   அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

 

**********************

Fig 3 Shall we go to tea

 

நாடக  உறுப்பினர்

1.  ரிச்செர்டு டச்சியான்   [35 வயது]  (Richard Dudgeon)

2.  கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்சர்டின் சகோதரன்   (Christy  Dudgeon)

3.  கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன்   [வயது 50]

(Rev. Anthony Anderson)

4.  ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி   [30 வயது] (Wife : Julia Anderson)

5.  ஜெனெரல் பர்காயின்  [50 வயது]  (British General Burgoyne)

6.  பிரிட்டீஷ் மேஜர் சுவிண்டன்  [55 வயது] (Major Swindon)

7.  ஸார்ஜன்ட்   (Sergeant)

8.  வழக்கறிஞர் ஹாக்கின்ஸ்   (Lawyer Hawkins)

9.  மிஸிஸ். அன்னி டச்சியான் :  [வயது 60] [Mrs Annie Dudgeon : Mother of Richard Dudgeon and wife of Timothy Dudgeon)

10.  சாப்பிளின் புரூட்நெல்   (Chaplin Mr Brudenell)

11.  சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி  (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா  டைட்டஸ்  டச்சியான் & மனைவி  (Uncle Titus Dudgeon & Wife)

13  இளம் மங்கை : எஸ்தர்  [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

 

************************

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -2 பாகம் -4

மூன்று அங்க நாடகம்

 

இடம்:  அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர்ச் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர்.  [Websterbridge, New Hamshire, U.S.A]  பாதிரியார் இல்லம்.

நடந்த ஆண்டு : 1777  (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது :  ஒரு நாள் இலையுதிர் காலத்து இரவு நேரம்.

 

அரங்க அமைப்பு:   வெஸ்டர்பிரிட்ஜ்  நகர்ப் புறத்தின் முக்கிய வீதியில் உள்ள பாதிரியார் ஆண்டர்ஸனின் இல்லம்.  டச்சியான் வேளாண்மைக் குடில் வீட்டை விட எடுப்பாய் இருக்கும்  நடுத்தரக் குடுப்பத்தினர் இல்லம்.   வீடு சற்று இருட்டாய் உள்ளது.   வெளியே மங்கலான தெரு விளக்குகள் ஜன்னல் திரை வழியே தெரிகின்றன.  மழை பெய்து கொண்டிருக்கிறது வெளியே.  ஜூலியா கையில் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏந்தி வந்து மேஜையில் வைக்கிறாள்.   அவள் முகத்தில் பயம் காணப் படுகிறது.  ஜன்னல் வழியாக எட்டி நோக்கும் போது, அவளது கணவன் வழியில் நனைந்து,  வீடு நோக்கி விரைந்து வருவது தெரிகிறது.  பெரு மூச்செடுத்து கதவைத் திறக்கிறாள்.  மழை நீர் சொட்டச் சொட்டப் பாதிரியார் ஆண்டர்சன் உள்ளே நுழைகிறார்.   அடுத்து அழைப்பின் பேரில் ரிச்செர்டு டச்சியான் வருகிறான்.   ரிச்செர்டு உயிருக்கு ஆபத்து உள்ளதென்று ஆண்டர்சன்  எச்சரிக்கை விடுக்கிறார்.   ரிச்செர்டு தனக்கில்லை யென மறுத்து ஆண்டர்சனுக்குத்தான் ஆபத்து வரப் போகுதென்று எச்சரிக்கை செய்கிறான்.  அப்போது கிரிஸ்டியான் வந்து தன் தாயிக்கு உடல் நலமில்லை, பாதிரியாரைப் பார்க்க விரும்புவதாய்ச் சொல்கிறான்.  பாதிரியார் ரிச்செர்டை வீட்டில் இருக்கும்படிச் சொல்லி விட்டுப் போகிறார்.  அவர்கள் டீ குடித்து உரையாடிக் கொண்டிருந்த போது, இராணுவக் காவலர் வரும் கால்தட அரவம் கேட்கிறது.  ஜூலியா ஜன்னல் வழியாக இராணுவப் படைகள் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.  ரிச்செர்டு முகத்தில் கவலைக் குறி தெரிகிறது.

 

Fig 5 He would think us as couple

 

*******************

 

ரிச்செர்டு:   என் மீது நீ பரிவு காட்டி, எனக்கு டீ ஊற்றி விருந்தோம்புகிறாய். என்னைக்  கவர்ந்து  விட்டது  உன் கருணை.   கணவன் வரும்வரை நானிருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறாய்.   நீ சொல்பவது உண்மையா வென்று  எனக்குத் தெரிய வில்லை.

[உடனே கண்களைக் கசக்கிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து ஜூலியா அழுகிறாள்]

ஜூலியா:   [கனிவுடன்]  நிறுத்து அழுகையை நிறுத்து !  என் வேண்டுகோள் அது.  அழ மட்டும் செய்யாதே !  உன் கணவர் இல்லாத போது நான் உன்னைத் துன்புறுத்தியாய்  அவர் எண்ணுவார் !  நானுனக்குக் தொல்லை தர வில்லை !   உன் மனநோவைக் கண்டு என் ஆண் இதயம் பிழியப் படுகிறது.   பெண்ணாய் இருந்து நீ இப்படி என் நெஞ்சை முறிக்க வேண்டுமா ?    நான் அவரை அவமானம் செய்ததை மறந்து என்னை மன்னித்தார்.  உன்னையும் மன்னிக்க வைத்தார்.   [அழுகையை நிறுத்தி ரிச்செர்டை உற்று நோக்குகிறாள்.]   அதுதான் சரி,  அதைத்தான் நான் வேண்டுகிறேன்.  சரி நாம் இருவரும் நாகரீக மனிதர் போல் அமர்ந்து இப்போது டீ குடிப்போமா ?  உன் கணவர் வரும் வரை  இருக்கிறேன்.

ஜூலியா:    நல்ல ஆலோசனை !   மன்னிக்க வேண்டும் என் மன முறிவுக்கு.  முட்டாள்தனமாக நான் நடந்து கொண்டேன்.

ரிச்செர்டு:  நான் நடந்து கொள்வது இப்படித்தான்.  என்னை நீ புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜூலியா :   உட்கார்ந்து கொண்டு பேசு !  நான் டீ எடுத்து வருகிறேன்.  [ரிச்செர்டு மேஜை முன்பாக நாற்காலியில் அமர்கிறான்]   டீயில் நீ சர்க்கரை போட்டுக் கொள்வாயா ?

ரிச்செர்டு:  இல்லை, ஆனால் பாலை அதிகமாய் ஊற்றிக் கொள்வேன்.

ஜூலியா:   [முதலில் சூடான டீ கெட்டிலை எடுத்து வருகிறாள்.   அடுத்து ஒரு தட்டில் ரொட்டியும் கொண்டு வருகிறாள். ரிச்செர்டுக்கு டீயை ஊற்றிக் கொடுகிறாள். ரொட்டியை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்]

ரிச்செர்டு:   [கையில் வாங்கிக் கொண்டு] மிக்க நன்றி.

ஜூலியா:   நீ ஒன்றும் சாப்பிட வில்லையே !

ரிச்செர்டு:   நீயும் எதுவும் சாப்பிட வில்லையே !

ஜூலியா:   எனக்கு டீ குடிப்பது அவ்வளவாகப் பிடிக்காது.

ரிச்செர்டு:  இந்த வீட்டில் அமைதி நிலவுகிறது.  எனக்கு மிகவும் பிடிக்கிறது.  இதுபோல் ஓர் அமைதியான சூழ்நிலையில் நான் வசித்தது கிடையாது.   ஆனால் எனக்குக் கிட்டாத வாழ்க்கை இது.   எனது இயற்கை இது வல்ல.  நானொரு குடித்தன மானிடன் அல்ல.  ஊர் சுற்றி !   இங்கே அழகும், புனிதமும் நிலவுகிறது.  [புன்னகை புரிகிறான்]

ஜூலியா: ஏன் நீ சிரிக்கிறாய் ?

ரிச்செர்டு:   [சிரித்துக் கொண்டு] இப்போது யாராவது ஓர் அன்னியன் இங்கு வந்து நம்மைக் கண்டால், இளம் தம்பதிகள் என்று நினைத்துக் கொள்வான் !

ஜூலியா:  [ஆத்திரமோடு] நீ என்ன சொல்லுகிறாய் ?   என் கணவரை விட எனக்கேற்ற இளைய வயதினன் நீ என்று நக்கல் அடிக்கிறாயா ?

ரிச்செர்டு:  [கூர்ந்து நோக்கி]  அப்படி நான் எண்ணிப் பார்க்க வில்லை.  குடித்தனக் களிப்புக்குப் புறம்பாக வேறொன்று இருப்பதாக அறிகிறேன்.

ஜூலியா: [கோபமாக]   எல்லாரது மதிப்புக்கும்  உரிய ஒரு கணவன் எனக்கு இருப்பதையே மற்றதை விட நான் விரும்புகிறேன்.

ரிச்செர்டு:   அதாவது வேதாளத்தின் மாணவனை விட என்று சொல்கிறாய் !  நீ சொல்வது சரிதான் !    அந்த வேதாள மாணவனையும் உன் இனிய நேச மனப்பான்மை மிக்க நல்லவனாக்கி விடும் !    அதுபோல் உன் வெறுப்புக் குணம் அவனைத் தீயோன் ஆக்கி விடும் !

ஜூலியா: [ஆத்திரமாக]   என் பதியை நீ எப்படி உன்னிலைக்கு ஒப்பிட்டுப் பேசுவாய் ?   என் கணவர் புனிதப் பணி செய்யும் ஓர் உன்னத மனிதர் !   நான் அவரை மிகவும் நேசிக்கிறேன் !     நீ அவமானம் செய்தாலும் அவர் உன்னை மன்னித்தார்.  உன்னை அன்புடன் செம்மையாக நடத்தினார்.   நீ அவரைக் கேலி செய்யாது மதிப்புடன் நடத்த வேண்டும்.

ரிச்செர்டு:  நான் என்ன கேலி செய்தேன்  ?

Fig 6 The British soldiers are here

 

ஜூலியா:   என் கண்முன் என் பதியை ஏளனப் படுத்தினாய் !   யாராவது அந்நியன் ஒருவன் வந்தால் நம்மைத் தம்பதியாய் நினைப்பான் என்று கேலி செய்தாய் !    என் கணவர் வயதானவர் என்று சொல்லாமல் சொல்கிறாய் !

[அப்போது இராணுவக் காவலர் வரும் கால்தட   அரவம் கேட்கிறது.  ஜூலியா பயந்து போய் ஜன்னல் வழியாக இராணுவப் படைகள் வீடு நோக்கி வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.  ரிச்செர்டு முகத்தில் கவலைக் குறி தெரிகிறது.]

 

[தொடரும்]

***************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1.  Penguin Plays :  The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2.  http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf   [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3.  http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple  [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple”  – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k)  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs  [You Tube : The Devil’s Disciple Drama]

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 7, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபுகழ் ​பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *