– பா.சத்தியமோகன்
வானில் பறக்கும் பறவையிடம்
இரும்புப் பூட்டு ஒன்றைக் காட்டினேன்
அது சிரித்துக் கொண்டே பறந்து விட்டது.
தவழும் மழலையிடம்
கூர் கத்தி ஒன்றை நீட்டினேன்
மேலும் கலகலப்பானது.
அப்போதுதான் பனியில் துளிர்த்த
மலர்க்கொத்து ஒன்றிடம்
என் துக்கக் கம்பியை விவரித்தேன்
அதுவோ மலர்ச்சியை நிறுத்தவேயில்லை.
எனது குளியலால் சிதறப்போகும் எறும்புகளிடம்
அச்சத்தை விளக்கினேன்
அவையோ சுறுசுறுப்புடன் உள்ளன
நாளைய உலகம் நீருக்குத் தவிக்கும் எனும் மிரட்டலை
ஓடிச்சென்று தாமரை ததும்பும் குளத்திடம் சொன்னால்
அதன் அலைகள் அமைதி காக்கிறது.
குடும்ப உறவுகளின் நலிவையும் வலியையும்
விண்மீன்களிடம் கண்சிமிட்டி
என்ன ஆகப்போகிறதென்று
சும்மாயிருந்து பார்த்தேன்
ஆஹா அப்போது நெஞ்சில் ஒரு நிம்மதிப் புறா
உருவாவதை தரிசித்தேன்.
*****
- சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்
- நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்
- நிறையும் பொறையும்
- அந்தக் குயிலோசை…
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 23
- “சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”
- கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘
- செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்
- திண்ணையில் கண்ணம்மா பாட்டி
- சுஜாதா
- இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5
- முகமற்றவனின் பேச்சொலி
- ப்ளாட் துளசி – 1
- தேனும் திணை மாவும்
- பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண்மையின் உட்கரு (கவிதை -54)
- மீன் குழம்பு
- இந்தியா – ஒரு பெரிய அங்காடி தெருவாகுமா?
- பாரதிக்கு இணையதளம்
- என்னின் இரண்டாமவன்
- இரு வேறு நகரங்களின் கதை
- மார்கழிப் பணி(பனி)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 2
- சந்தனப் பூ…..
- வேறு ஒரு தளத்தில்…
- வம்பளிப்புகள்
- பச்சைக் கூடு-பேசுவதற்கு பறவைகள் இல்லை
- பெரிய அவசரம்
- அவன் இவன் அவள் அது…!
- காதல் கொடை
- அன்பின் அரவம்
- சுனாமியில்…
- பொருள்
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2
- முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்
- ஏனென்று தெரிய வில்லை
அற்புதமானடைப்பு. வாழ்த்துக்கள். யோசிக்கும் திறன் தான் மனிதனை என்ன பாடு படுத்துகிறது அப்பப்பா!