உயிர்த்தெழ வில்லை !

This entry is part 3 of 8 in the series 21 ஏப்ரல் 2019


சி. ஜெயபாரதன், கனடா

சிலுவையைத் தோளில் சுமந்து

மலைமேல் ஏறி

வலுவற்ற நிலையில்

 அறையப்பட்ட தேவ தூதர்

மரித்த பிறகு,

மூன்றாம் நாளில் தோன்றி

உயிர்தெழ வில்லை !

ஆணி அடித்த கைகளில்

துளை தெரிந்தது !

ஆணி அடித்த பாதங்களில்

துளை தெரிந்தது !

சிரத்தில் வைத்த முட் கிரீடத்தில்  

இரத்தம் இருந்தது !

குருதி சிந்தி, சிந்தி,

கும்பி வெம்பி, வெம்பி,

வந்தது பசி மயக்கம் !

தேவ தூதர் மரிக்க வில்லை !

வான் இடிந்து

பேய் மழைக் கண்ணீர் வடிக்கும் !

ஆவி போனதாய்,  

ரோமர் எண்ணித் தூதர்  உடலைக்

மூடினர் குகையில்  !

மூன்றாம் நாளில் மயக்கம்

தெளிந்து,  

விழித் தெழுந்தார் !  

உயிர்த் தெழ வில்லை

புனித தூதர் !

Series Navigation20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்புமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *