அந்தப் பாடம்

This entry is part 35 of 47 in the series 31 ஜூலை 2011

பூவைப் பறிக்கிறோம்,
செடி
புன்னகைக்கிறது மறுநாளும்..
காயைக் கனியைக் கவர்கிறோம்,
கவலைப்படவில்லை
காய்க்கிறது மறுபடியும்..
கிளைகளை ஒடிக்கிறோம்,
தளைக்கிறது திரும்பவும்..
தாங்கிக்கொள்கிறது புள்ளினத்தை-
ஓங்கிக்கேட்கிறது பலகுரலிசை..
அட
மரத்தையே வெட்டுகிறோம்,
மறுபடியும் துளிர்க்கிறதே !

மீண்டும் வெட்டாதே ..
மனிதனே,
உனக்கு வேண்டியது
ஒரு பாடம்..
அதைநீ கற்றுக்கொள்
மரத்திடம்-
அழிவை என்றும் எதிர்க்கும்
ஆவேசம் !

-செண்பக ஜெகதீசன்..

Series Navigationபுதிய பழமைநீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *