This entry is part 29 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தோற்ற மயக்கம்
தொற்றாகி
மொட்டை மாடியில்
மல்லாந்து கிடந்த
கல்லூரிக் காலங்களில்

அவளை
வருணிக்க வாய்த்திருந்த
நிலா காய்ந்திருக்கும்

நிலா நுகர்ந்த முல்லையெனவும்
என்
நெஞ்சுக்குள்
அடைபட்ட காலங்களே
அகிலத்தாருக்கு
அமாவாசை யெனவும்

ஒளிந்தும்
ஒளிர்ந்தும்
நிலா
நிலவியதை
அவளோடு
ஊடல் கூடல்
என் ஒப்பிட்டும்
கசிந்துருகிய காலங்களிலும்
நிலா காய்ந்திருக்கும்

கலைந்திறாத
கூந்த லொதிக்கிய
கையினூடே கழட்டியனுப்பிய
கடைக்கண் பார்வை குறித்து
கிறுக்கித் தள்ளிய
கவிதைகளிலும்
நிலா இருக்கும்

மேலேப் பார்த்தபோது
நிலா
உதிர்ந்துகொண்டிருக்கும்
பெள்ர்னமி!

கீழே பார்த்தபோது
நிலா
அதிர்ந்துகொண்டிருக்கும்
ஊருணி!

உற்று நோக்கினால் மட்டுமே
மேகத்தை நிலைநிறுத்தி
நிலா
நகர்ந்துகொண்டிருக்கும்…
தோற்ற மயக்கம்!

Series Navigationசென்னை ஓவியங்கள்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)