Posted in

மானும் கொம்பும்

This entry is part 38 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மண்ணுக்கு மேலே
ஒரு மான் கொம்பு தெரிய
மண்ணை தன்
கூரியக் கொம்பால்
தோண்டித் தோண்டி
எறிந்தது இளமான்.

தோண்டித் தோண்டி
மண்ணுள் புதைந்த
மானைக் காப்பாற்றும்
முயற்சியில்
மானின் கொம்புகளே
ஒடிந்து போக
உள்ளே வாடி
இலை உதிர்ந்த
ஒரு சிறு மரத்தின்
வேர்களேத் தெரிந்தன.

தன் இழந்த
கொம்புகளுக்காய்
வருந்தாத மான்
புதைந்த மானுக்காய்
வருந்திச் சென்றது.

சூர்யா நீலகண்டன்

Series Navigationஜ்வெல்லோன்திரும்பிப் பார்க்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *