மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பின்னிருந்து அது என்னை அழைக்கிறது
திரும்பி வரும்படி நான்
பிரிந்து செல்லும் தருணத்தில் !
மேகத்தின் இடை வெளி களின்
ஊடே தெரியும்
உதய வேளை ஒளிக் கற்றைகள் !
காலை மழைப் பொழிவைச்
சகிக்காமல்
ஓலமிட்டுக் கீச்சிடும் பறவை
மீளும்படி
என்னை அழைக்கும்
மரக்கிளை மறைவி லிருந்து.
ஆற்று வெள்ளம் பொங்கி
நிழல்களுக் கடியிலே
யாரைத் தேடிக் கொண்டு
வேகமாய்ப் பாய்ந்து ஓடுகிறது ?
யார் பேரை அழைக்கிறது ?
என் ஆத்மாவின் உள்ளிருந்து
யாரது துடிப்புடன்
கழிந்திடும்
காலைப் பொழுதை நிறுத்திவிட
ஆசையாய்
யாசிக்க ஆரம்பிப்பது ?
+++++++++++++++++++++++++
பாட்டு : 171 ஆகஸ்டு 8, 1923 இல் கொல்கத்தா எம்பயர் தியேட்டர் [Bisharjan] நாடகத்தில் தாகூர் 62 வயதினராய் இருந்த போது எழுதிப் பாடப் பட்டது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] January 8, 2013
http://jayabarathan.wordpress.
- கட்டாய உழைப்பு முகாம்களை சீர்திருத்த போவதாக சீனா கூறுகிறது.
- கணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்
- ‘எனது பர்மா குறிப்புகள்’ பற்றிய ஒரு வாசகனின் சில குறிப்புகள்
- சென்னை 2013ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னுடைய 4 நூல்கள்
- மெய்ப்பொருள்
- ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு
- தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -42
- இட்லிப்பாட்டி
- செவ்விலக்கியங்களில் பரத்தையர்
- முகம்
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3
- ராம்சரண் ( தெலுங்கு மொழி மாற்றப் படம் )
- மணிராமின் “ தமிழ் இனி .. “
- அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்
- பெண்ணுடலும் பாலியல் வன்முறையும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….12 க.நா.சுப்ரமண்யம் – ‘இலக்கிய விசாரம்’
- பொல்லாதவளாகவே
- வால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)
- சாதி….!
- “சேர்ப்பிறைஸ் விசிட்” – சிறுகதை
- மணலும், (வாலிகையும்) நுரையும் – 7
- தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்
- அம்மாவின் அங்கி!
- அக்னிப்பிரவேசம்-18
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -1 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி]
- இன்னொரு வால்டனைத் தேடி…..
- சாய்ந்து.. சாய்ந்து
- “சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”
- சுரேஷ்குமார இந்திரஜித் ”நானும் ஒருவன்” (புதிய சிறுகதைத் தொகுப்பு) ஒரு வாசிப்பனுபவம்
- ஐன்ஸ்டைனின் பிண்ட சக்தி சமன்பாடு (E=mc^2) வளைந்த பிரபஞ்சக் கால வெளியில் பயன்படுமா ?
- இரு கவரிமான்கள் – 5