புதியமாதவி, மும்பை
ஊர்த்துவ தாண்டவத்தில்
உன்னிடம் தோற்றுப்போன
சந்திரகாந்த தேவி அல்லவே நான்.
இதோ….
நானும் காலைத் தூக்கிவிட்டேன்.
உன் பிரணவ ஒலியில்
கரைந்துவிட
உன் உமையல்ல நான்.
அண்ட சராசரங்களை
எனக்குள் அடக்கும்
யோனி பீடத்தில்
உன் நெற்றிக்கண்
தீப்பிழம்பாய் எரிந்துச்
சாம்பலாகிப் போனது.
அந்தச் சாம்பலிலிருந்து
உன் ஆட்டத்திற்குள் அடங்கும்
காத்யாயனி தேவியைக்
கண்டுபிடித்திருக்கிறாய்.
அவளோடு நீயாடும்
சிருங்கார தாண்டவம்
உனக்காக என்னை
ஏங்கித் தவிக்கவிடும்
என்ற கனவுகளில் நீ.
கங்காதேவியையும்
துணைக்கு அழைக்கிறாய்.
பித்தனே மறந்துவிடாதே
பாற்கடலில்
நீயுண்ட நஞ்சை
ஸ்கந்தமாதாவின்
கைப்பிடிக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறேன்
என்பதை.
மகாபிரளயம் சாட்சியாக
நீ ஆடப்போகும்
ஊழிக்கூத்துக்கு
ஒத்திகைப் பார்க்க
என்னை அழைக்காதே.
என் கருமுட்டையிலிருந்து
நீ கற்றுக்கொண்ட பாடம்
ஆக்கலும் அழித்தலும்.
என்னில் சரிபாதியாக
நீ கொண்ட
அர்த்தநாரீஸ்வர கோலம்
உனக்கு
நான் போட்ட
காதல் பிச்சை.
போதும்…
சிவதாண்டவ
வேடங்கள் களைந்து
வெளியில் வா.
காத்திருக்கிறேன் காதலியாக
உன் நெற்றிக்கண்ணுக்கு
மட்டுமே தெரியும்
மூன்றாவது முலையோடு.
- தாயின் அரவணைப்பு
- அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘
- புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
- 3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்
- நடுங்கும் என் கரங்கள்…
- உனக்காக ஒரு முறை
- இந்திரா
- உழவு
- ஆகஸ்ட் 15
- இராஜராஜன் கையெழுத்து.
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15
- முக்கோணக் கிளிகள் ! [நெடுங்கதை] மீள் பதிப்பு
- சிவதாண்டவம்
- கொம்புத்தேன்
- வசை பாடல்
- மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு
- பாரம்பரிய இரகசியம்
- பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1
- வேர் மறந்த தளிர்கள் – 29
- விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !
- கருத்தரங்க அழைப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30
- விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்
- சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…
- அசடு
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33
- மங்கோலியன் – II
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23