(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Song of the Open Road)
(திறந்த வெளிப் பாட்டு -3)
விண்வெளிப் புயலைச் சுவாசிக்கிறேன்.
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இந்த நேரத்தி லிருந்து உறுதி
எடுத்துள்ளேன்,
வரையறை எனக்கில்லை !
கற்பனைக் கோடுகள்
எனக்கில்லை.
தனித்த பூரணத் தளபதியாய்,
எனக்கு நானே
மாட்சிமை புரிபவன்,
குறித்தபடி
நினைத்த இடம் செல்வேன் !
பிறர் குரலுக்குச் செவி சாய்ப்பேன்;
அவர் உரைப்பதை
மதிப்பேன்.
நின்று தேடுவேன்;
ஏற்றுக் கொள்வேன்;
சிந்தித்துப் பார்ப்பேன் கேட்டதை;
என்னுடன்
ஒட்டிக் கொண்டதைப்
பரிவுடன்
வெட்டி விடுவேன்
உறுதியாக !
விண்வெளிப் புயலை
உள்ளிழுத்துக் கொள்கிறேன்;
கிழக்கும் மேற்கும்
எனக்குப் பந்தமானவை.
வடக்கும், தெற்கும் அவைபோல்
எனக்குப் பந்தமானவை.
பெருத்த உடல் எனக்கு,
என் நினைப்புக் கணிப்பை விட !
நெறிப்பாடு மிக்கவன் நானென
அறியாதவன் நான் !
எல்லாம் எழில் மயமாய்த்
தெரியுது எனக்கு;
ஆணுக்கும், பெண்ணுக்கும்
மீண்டும் சொல்வேன் :
எனக்குப் புரிந்த
உங்கள் நற்பணி உயர்ந்தது
எனது காலம் முடியும் போது,
உனக்கும், எனக்கும் செய்து வைப்பேன்.
காலம் செல்லச் செல்ல
கலந்து வாழ்வேன்
ஆடவர், மாதரிடையே !
நானொரு புதுக் களிப்பை,
புரட்சியைத்
தூண்டி விடுவேன்;
ஏற்றுக் கொள்ளாதவர் எவரேனும்
என்னைத்
துன்புறுத்த வேண்டாம் !
ஏற்றுக் கொள்வோர் யாராயினும்
ஆசீர்வ திக்கப் படுவார் !
என்னையும்
ஆசீர்வதிப்பர் நிச்சயம் !
+++++++++++++++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
- Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
- தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்
- பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.
- உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)
- பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்
- “கையறு நிலை…!”
- கடவுளும் வெங்கடேசனும்
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 21
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92
- கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014
- “மூட்டை முடிச்சுடன்….”
- நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
- வீரனுக்கு வீரன்
- எல்லை
- புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்
- எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- ‘மேதகு வேலுப்போடி’
- கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்
- பாவண்ணன் கவிதைகள்
- கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 20
- தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்
- நொண்டி வாத்தியார்