This entry is part 10 of 18 in the series 15 நவம்பர் 2015

 

 

காணாமற் போன குழந்தை

மீது

இரக்கங்கள் பொழிந்தன

 

ஆனால் அவன்

தட்டில் விழுந்த

பருக்கைகளின் மீதெல்லாம்

தேடப் படாதவன்

என்றே

எழுதியிருந்தது

 

வேறு வீடு

இன்னொரு கோவில்

பக்கத்து ஊர்

புதுத் தெரு

மாற்றி மாற்றி

எங்கு போனாலும்

அன்னத்தில் இருக்கும் பெயர்

மாறவில்லை

 

வளர்ந்து அவன்

உழைத்து’

ஒரு நிலம் வாங்கினான்

 

தானே விதைத்து

பயிரிட்டு

கண்காணித்து அறுவடை

செய்தான்

தீட்டிய அரிசியை

சோதித்தான்

அதில் பெயரில்லை

 

அது சாதமானதும்

அதில் தேடப்படாதவன்

இருந்தது

 

பிறகு ஒரு சிலர்

தட்டுக்களில் சோதித்தான்

அவர் அவர் பெயரே

இருந்தது

இளம் பெண் ஒருத்தி

எதிரிப்பட்டாள்

அவனை நேசித்தாள்

ஆனால்

அவன் அவளை

ஏற்கும் நிலையில் இல்லை

 

நிச்சயமாய் அவன்

நிராகரிக்கிறான் என்று

தெரிந்ததும் அவள்

விலகினாள்

 

மறுநாள்

அவன் அன்னத்தில்

அவன் பெயர் மட்டுமே

 

அவள் சோற்றில்

எழுதியிருந்தது

நிராகரிக்கப்பட்டவள்

 

சத்யானந்தன்

Series Navigation‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி