Posted in

ஒரு கதை கவிதையாக

This entry is part 7 of 13 in the series 22 மார்ச் 2020

கம்பிக் கூண்டில்

காதல் பறவைகள்

ஆடிப் பாடிய காதல்

அடிமைக் காதலானது

அடைத்துப் போட்டவன்

அயல்நாட்டில் இருந்துவிட்டு

அறுபது நாள் தாண்டி வந்தான்

ஜோடிஜோடியாய்க் குருவிகள்

செத்துப் போயின

சாவின் வாசலில் துடித்த ஒரு

கருஞ்சிவப்புக் குருவி

கடவுளைக் கேட்டது

‘நீதியின் அரசனே

கொல்லப்பட்ட எம்

குலத்திற்கு என்ன நீதி?

கொன்றவனுக்கு

என்ன நீதி?

‘வாயில்லா உங்களை

வாய்மை ஏதுமின்றி

வன்கொலை செய்தோரை

வைரஸ் கொல்லும்’

‘கடவுள் சொன்ன

கணக்குச் சரிதான்’

என்ற கருஞ்சிவப்புக்

குருவியின் கணக்கும்

முடிந்தது.

Series Navigationசமகாலங்கள்“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *