Posted in

மரணத்தின் நிழல்

This entry is part 13 of 17 in the series 11 அக்டோபர் 2020

மஞ்சுளா 

உயிரின் பேராழத்தில் 

புதைந்து கொண்டிருக்கும் 

ரகசியங்களை 

வாழ்வின் எந்த ஒரு வெம்மையும் 

தீண்ட முடியாது போகிறது 

மரணம் இசை தப்பிய 

ஒரு பாடலை 

இசைக்கும் ஒரு நொடியில் 

உயிர் தனது சிறகுகளை 

விரித்து 

அதன் நிழலை 

ஒரு காதலன் காதலியை 

தழுவுவது போல் 

தழுவிக் கொள்கிறது 

தீராது… தீராது 

அதன் பேராவல் 

அதன் வெற்றிடங்கள் 

பிறப்பின் ரகசியங்களால் 

மீண்டும் மூடப் பட்டு 

வாழ்வின் போதாமைகளோடு 

மீண்டுமொரு பயணத்தில் 

தன்னை இணைத்துக்  கொள்கிறது 

அழிந்தும் அழியாத சுவடுகள் 

எஞ்சிய காலத்தின் 

பக்கங்களோடு 

இன்னும் கூட 

மரணத்தின் நிழலை 

வாசித்தறியாமல் திரிகிறது 

 -மஞ்சுளா 

Series Navigationகாலம் மாறிய போது …ஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *