முற்றத்தில் நிஜம்

This entry is part 1 of 2 in the series 26 மே 2024

அந்த குழந்தை

கையில் பையுடன் 

ஓடியாடி விளையாடியது.

முற்றத்து தண்ணீரில் 

நிலவை பிடித்தது

வானத்து நட்சத்திரங்களையும்தான் !

மேகத்தில் வெள்ளிமலையோ, பீமரதமோ 

எல்லாம் அந்த பைக்குகள் போட்டது.

மீண்டும் சிரித்துக்கொண்டே

முற்றத்தில் ஓடியது.

அப்பா

வாடிய முகத்துடன் 

திண்ணையில கொட்டாவிவிட்டார். 

நாளை விடியலுக்கு 

சட்டைப்பையில், 

பீடியுடன் சில்லறையை

தேடினார்!.

               ஜெயானந்தன். 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 319ஆம் இதழ்
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *