Posted in

பேருந்து நிறுத்தம்

This entry is part 4 of 6 in the series 2 ஜூன் 2024

பள்ளிப் பருவமாய் இனிக்கும்

அந்தப் பேருந்து நிறுத்தம்

அருகில்தான் மகள் வீடு

மகளைப் பார்த்தபின்

என் மனை செல்லும் பேருந்து

அங்குதான் நிற்கும்

அங்கு….

ஒற்றுத்தாள் விற்கும் பாட்டி

சிநேகமாய்ச் சிரிப்பார்

இரண்டுவெள்ளி தருவேன்

செவன்லெவன் கடையின்

சிப்பந்திப்பெண் என் ஊர்

ஊரின் மழைவெயில் விசாரிப்பேன்

உணவுக்கடையில்  நம் பையன்

பரோட்டாசுழற்றுவதில்

பேருந்தை மறப்பேன்

சிவப்பு மனிதன் முன்

பெருஞ்சாலை கடக்கும்

பெரிசுகள் பார்த்துத் திகைப்பேன்

என் நேரம் அங்கு

இரவு 8 மணி

‘நல்லா யிருக்கீங்களாண்ணே’

ஓட்டுநர் விசாரிப்பில் உறைவேன்

இன்று…..

அந்த இடமே அந்தியமாகி

அந்த நிறுத்தம்

அந்ந மனிதர்கள்

எல்லாமுமே

மனதுக்குள் மரணித்துக்கொண்டே…..

என் மகள் வீடு மாறிவிட்டார்.

அமீதாம்மாள்

Series Navigationபெருமைசந்தைக்குப் போனால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *