வாழ்க்கை

This entry is part 3 of 5 in the series 21 ஜூலை 2024

தொலைந்து போன 

ஒத்தை கொலுசில்தான் 

ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது.

முந்தானை முடிச்சில் தொங்கும் 

பத்து ரூபாயில்தான் 

சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது. 

வறண்டுபோன திண்ணைகளில்தான்

தாத்தாக்களின் 

பெருமூச்சு கேட்கின்றது. 

பலூன்காரனுக்கு- எப்போதும் 

பத்துவீதிகளே போதும்.

பஞ்சு மிட்டாய்க்காரனிடம் 

எப்போதும் குழந்தைகள். 

சிவன்கோயில் அய்யருக்கு 

தட்டுகளில் ஜீவனம். 

பலாச்சுளை விற்பவனுக்கு 

பத்து ஈக்கள் சொந்தம். 

குருட்டு பிச்சைக்காரிக்கு 

கோவில் வாசலே சுவர்க்கம். 

வரும்போகும் வாழ்கைக்கு 

யாரிடம் கேட்பது முகவரி!.

                – ஜெயானந்தன். 

Series Navigationதலாத்து  ஓயா  கே. கணேஷ் (1920 – 2004 )யுகள கீதம்
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *