செடி

This entry is part 1 of 3 in the series 4 ஆகஸ்ட் 2024

அந்தச் செடியின்

புதிய துளிர்

எனைப் பார்த்து

புன்னகைத்தது

நானோ அதைக்

கிள்ளிப் பறித்து

மகிழ்ந்தேன்

அதன்

கவலையோ

கண்ணீரோ

வலியோ

நான் அறியேன்

அடுத்தநாள்

அதே செடியின்

புதிய துளிர்

எனைப் பார்த்து

புன்னகைத்தது

அமீதாம்மாள்

Series Navigationதொட்டால்  பூ மலரும்
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *