Posted in

சுயநலம்

This entry is part 1 of 9 in the series 15 டிசம்பர் 2024

ஆர் வத்ஸலா

உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள 

ஒரு நல்ல தோழியாக என்னை‌ தேர்ந்தெடுத்தாய் 

நீ

உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும் 

அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன்

உனக்கு

நான்  

வெகு காலத்திற்கு பிறகு தான் தெரிந்தது –

அன்பில் தோய்ந்த

எனது அனுதாபம்

உனக்கு அமிர்தமாய் இனிக்க

உனது மகிழ்ச்சித் தருணங்களை

என்னிடமிருந்து ஒளித்து வைத்திருந்தாய் 

நீயென

அன்றறுந்தது வேரோடு

எனது பாசம் 

Series Navigationவிலாச குறிப்பு

One thought on “சுயநலம்

  1. நட்பின் ஆழத்தில் மறந்து போகின்ற அன்பின் வடுக்கள், தாங்க முடியாத துயரத்தை தருகின்ற உணர்ச்சி கொந்தளிப்பு, உங்கள் கவிதையில் வழிகின்றது.
    நிறைய எழுதுங்கள்.

    ஜெயானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *