Posted in

விலாச குறிப்பு

This entry is part 2 of 9 in the series 15 டிசம்பர் 2024

இறக்கிவிட்ட ரயில் 

வெகுதூரம் சென்றுவிட்டது 

சில 

ஞாபக விலாசங்களோடு. 

“ஏதோ நினைவுகள் மலருதே…,”

பாடிய 

குருட்டு பிச்சைக்காரனை 

கைத்தடியில் 

அழைத்து செல்லும் 

சிறுமி .

கடலை பர்பி 

கைக்குட்டை 

விற்று செல்லும் 

நொண்டி அண்ணன். 

கைத்தட்டி 

உரிமையோடு 

காசு கேட்கும் 

அனார் அலி. 

டைம் பாஸ் 

கடலை விற்கும் 

பீடி கணேசன். 

“இறைவனிடம் 

கையேந்துங்கள் 

அவன் இல்லையென்று 

சொல்லுவதில்லை….”

ஹார்மோனிய வயோதிகன். 

பழம், பூ 

விற்கும்

சம்சாரிகள் 

நெற்றியில் 

பெரிய பொட்டோடு. 

கையில் 

கல்லூரி நோட்டோடு 

காதல் நினைவில் 

சில இளசுகள். 

அங்கொன்றும் 

இங்கொன்றுமாக 

சில பிக்பாக்கெட்டுகள். 

மனிதர்களை 

மட்டும் சுமந்து செல்லவில்லை 

ரயில் 

சிலரின் வாழ்க்கையும் தான். 

     -ஜெயானந்தன்

Series Navigationசுயநலம்கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *