ரவி அல்லது
பாயோடு
பாயாக படுத்துக்கிடப்பனுக்கு
பணிவிடைகள்
செய்யும் பாட்டி
ஒரு பொழுதும்
சொன்னதே இல்லை
நான் உன்னைக்காதலிக்கிறேனென
எப்பொழுதும்.
தோல் போர்த்தி
துவண்டு
கிடக்கும்
கிழவனும்
மனதாரக் காதலிக்கிறேனென
மருகவில்லை
வாழ்வில்
ஒருபொழுதும்.
வார்த்தைகளில்
வீழாத
அவர்களின்
வயோதிகத்திலும்
நிரம்பி
வழிகிறது
காதல்
அருந்தி மகிழுமாறு
அடுத்த தலைமுறைக்கு
நேச நெகிழ்வில்.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com