ரவி அல்லது
பாயோடு
பாயாக படுத்துக்கிடப்பனுக்கு
பணிவிடைகள்
செய்யும் பாட்டி
ஒரு பொழுதும்
சொன்னதே இல்லை
நான் உன்னைக்காதலிக்கிறேனென
எப்பொழுதும்.
தோல் போர்த்தி
துவண்டு
கிடக்கும்
கிழவனும்
மனதாரக் காதலிக்கிறேனென
மருகவில்லை
வாழ்வில்
ஒருபொழுதும்.
வார்த்தைகளில்
வீழாத
அவர்களின்
வயோதிகத்திலும்
நிரம்பி
வழிகிறது
காதல்
அருந்தி மகிழுமாறு
அடுத்த தலைமுறைக்கு
நேச நெகிழ்வில்.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
- வசந்தம் வரும்
- கவிதைகள்
- `பறவைகள்’ நூல் அறிமுகம்
- ஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்
- சூரியக் குடும்பக் கிரகங்களின் அணிவகுப்பு
- வெளியே நடந்தாள்
- என்னாச்சு கமலம் ?
- பூவண்ணம்
- அமெரிக்கா – என் பருந்துப் பார்வை !
- வாழும்டைன்ஸ் டே. அல்லது காதலாகுதல் தினம்.
- தள்ளி வைத்த தயக்கம்
- எதுவும் கடந்துபோகும்