Posted in

தாயுமானவள்

ஆர் வத்ஸலா 

தனியே நின்று மகளை வளர்த்ததால் 

என்னை தலை சிறந்த  தாய் என கூறினார்கள் 

யாவரும் 

அதை நானும் நம்பத் தொடங்குகையில்

புரிய வைத்தாள்

எனது மகள் 

என்னை விட சிறந்த தாய் உண்டு என

தன் மக்களோடு

எனக்கும் தாயாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *