நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை – தமிழகம் அழிவுத்திசையில் செல்கிறதா?

This entry is part 2 of 22 in the series 1 ஏப்ரல் 2018

சின்னக்கருப்பன்

முதலில் ஸ்டெர்லைட் பற்றி மட்டும் எழுதலாம் என்று இருந்தேன். ஆனால், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கக்கூடாது வைகோவின் கட்சி தொண்டர் ஒருவர் தீக்குளித்த பின்னால் அது பற்றி எழுதுவதே முக்கியம் என்று கருதி அதனை முதலில் எழுதுகிறேன்.

பிபிஸி செய்தி இவ்வாறு கூறுகிறது.

//இதற்குப் பிறகு நியூட்ரினோ எதிர்ப்புக்கூட்டம் ஒன்று மதுரை பழங்காநத்ததில் நடைபெற்றது. இதில் வைகோ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

அதற்குப் பிறகு, மற்ற தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரணி இணை அமைப்பாளர் ரவி என்பவர், பொதுக்கூட்ட மேடையிலிருந்து 25 அடி தூரத்தில் நின்றபடி, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். //

நியூட்ரினோ பற்றி மிகவும் அறிந்த நோபல் பரிசு பெறப்போகும் விஞ்ஞானி வைகோ அவர்கள் சிறந்த நாவன்மை கொண்டவர், சீமான் போலவே உணர்ச்சி வசப்படும்படி பேசக்கூடியவர் என்பதை இதை படித்துத்தான் அறிந்தேன்.

தமிழர்கள் மட்டுமல்ல, யாருக்குமே புதிய வார்த்தைகளை கண்டால் பயமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு நியூட்ரான் என்பதற்கும் நியூட்ரினோ என்பதற்கும் வித்தியாசம் தெரிந்திருந்தால், ஏன் வைகோவின் பேச்சுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படப்போகிறார்கள்?

தமிழ்நாட்டில் இருந்த லட்சத்துக்கும் மேலான குளங்கள் ஏரிகள் இன்று வீடுகளாகிவிட்டன. ஆறுகள் தடுக்கப்பட்டு அடுக்குமாடி வீடுகளாக்கி விட்டார்கள். மழைபெய்தால் சேர குளம் ஏரிகள் இல்லாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி சென்னை போன்ற நகரங்களில் வெள்ளமாக பாய்ந்து அழிக்கிறது. சிலவருடங்களில் தீவிர தண்ணீர் பஞ்சம், திடீரென்று வெள்ளம் என்று இந்த பிரச்னைகள் நம் கண் முன்னே உருவாகியிருக்கின்றன. இந்த அவலத்தை உருவாக்கிய அதிமுக திமுக அரசியல்வாதிகளும் அதன் உப கிளைகளான வைகோ, திருமா, சீமான் போன்ற குஞ்சுகளும் உணர்ச்சிவசமாக பேசுவதையும், இல்லாத பொய்களை சொல்லுவதையும், தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றுவதையுமே ஒரே பிழைப்பாக வைத்திருக்கிறார்கள்.

நியுட்ரினோ பற்றி பேசிகொண்டிருக்கும்போதே வைகோவின் உடலுக்குள் பல கோடி கோடி நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து கிளம்பி அவருக்குள் புகுந்து உலகத்துக்குள் புகுந்து அந்த பக்கம் புறப்பட்டு எங்கோ போயிருக்கும். வைகோவுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் வைகோ வாயிலிருந்து புறப்பட்ட உளறல், ஒரு மாங்கா மடையரை தாக்கி அவர் செத்தார் என்று தெரிய வருகிறது.

நியூட்ரினோ ஆய்வு மையம் என்றதுமே அது ஒரு அணு மின் உலை, அதிலிருந்து அணு குண்டு மாதிரி அடிக்கடி வெடித்து அங்கே இருக்கும் தண்ணீர் எல்லாம் ஆவியாகிவிடும், மனிதர்கள் கொத்து கொத்தாக செத்து விழுவார்கள்.. தமிழா பார், உன்னை அழிக்க மோடி வர்ரார் என்று உசுப்பேத்தி விட்டு இவர் நடைப்பயணம் போவார். வழியெல்லாம் தீக்குளித்து கொத்து கொத்தாக செத்து விழுவார்கள்… இவர் அடுத்து ஸ்டாலின் கூட சேர்ந்து ரெண்டு எம் எல் ஏ சீட்டு கேட்க போய்விடுவார். இறந்தவர்களின் குடும்பங்களை “இயற்கைத்தாய்” காப்பாற்றும்..

இதே மாதிரி முழு தமிழகமே அறிவியலுக்கும் தொழில்மயமாதலுக்கும் எதிராக திரும்பிகொண்டிருக்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது. இதில் பல்வேறு இழைகள் இருக்கின்றன.

ஒன்று தமிழர்கள் ஒன்றுக்கும் லாயக்கில்லை. தமிழர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்னால் காட்டிமிராண்டிகளாக படிப்பறிவற்றவர்களாக இருந்தார்கள் என்ற பெரியாரிய பிரச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. இது உண்மையில் காலனியாதிக்கத்தின் பிரச்சாரம் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள்தான் வந்து உங்களுக்கு நாகரிகத்தை கற்றுகொடுத்தோம் என்று எல்லா காலனியாதிக்கத்தினரும் அடிமைப்பட்டவர்களிடம் சொல்லுவது. அதனை எதிர்த்து நிற்பது ஒரு காலத்தில் நின்றது. அப்படி நின்றிருக்கவில்லை என்றால், மௌமௌ மக்களுக்கு நடந்தது போல கூண்டோடு படுகொலை செய்து மெல்லக்குறுநகை செய்து பிரிட்டிஷ் காலனியாதிக்கம் நகர்ந்திருக்கும். இந்திய மக்கள் படிப்பறிவற்றவர்களாக இருந்திருந்தால், ஆஸ்திரேலிய பழங்குடிகளையும் ஆப்பிரிக்க பழங்குடிகளையும், அமெரிக்க பழங்குடிகளையும் அழித்தொழித்தது போல இந்தியர்களையும் அழித்து ஒழித்து இங்கே வெள்ளையர்களே பெரும்பான்மையாகவும், ஆஸ்திரேலிய பழங்குடிகளும், அமெரிக்க பழங்குடிகளும் திறந்தவெளி சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது போல இந்தியர்களும் அடைக்கப்பட்டிருப்பார்கள்.

இந்தியர்களும் படிப்பறிவுள்ளவர்களாக இருந்ததால்தான் அவர்கள் வெள்ளையர்கள் படித்த அதே பாரிஸ்டர் தேர்வுகளை படித்து அவர்களுக்கே சவாலாக இருக்க முடிந்தது.

ஆனால், பெரியாரிஸம் காலனியாதிக்கத்தின் அனைத்து கருதுகோள்களையும் (அதாவது வெள்ளையர்கள் வந்துதான் தமிழர்களுக்கு நாகரிகம் கற்றுகொடுத்தார்கள், படிப்பறிவு கொடுத்தார்கள், அது இல்லையென்றால், நாம் காட்டுமிராண்டிகளாக காட்டில் திரிந்து கொண்டிருந்திருப்போம். நாம் தமிழை விட்டுவிட்டு ஆங்கிலம் பேச வேண்டும். நவீனத்துவம் என்பதே ஆங்கிலேயர்களை காப்பியடிப்பது மட்டுமே இன்ன பிற) அப்படியே சுவீகரித்துகொண்டதன் விளைவு, இன்று பல்வேறு தொழில் செய்யும் அனைத்து தமிழர்களும் அரைகுறை ஆங்கிலத்தில் தமிழ் இலக்கணத்தை போட்டுபேசுவதிலிருந்து, இன்னும் பல்வேறு பரிமாணங்களில் அரைகுறை அறிவுஜீவிகள் பேசுவதுவரை பரவிக்கிடக்கிறது.

என் ஆசிரியர் “பரிணாமவியல் என்பது பொய். ஆனால் இது தேர்வில் கேட்பார்கள். ஆகவே படித்துகொள்ளுங்கள்:” என்று தன்னுடைய கிறிஸ்துவ மதச்சார்பை வைத்து பள்ளிக்கூடத்தில் பேசியபோதும், ஆதாம் ஏவாள் என்று 6000 வருடங்களுக்கு முன்னால், இரண்டு பேர் இருந்தார்கள் என்று என்னுடைய இஸ்லாமிய பேராசிரியர் (இயற்பியல்) பேசிய போதும், இது தனிப்பட்ட அவர்கள் கருத்து என்று நினைத்து உதாசீனம் செய்துவிட்டு போய்விட்டேன். ஆனால், இன்று இணையம் முழுவதும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களையும், தொழில்மயத்துக்கு எதிரான கருத்துக்களையும் பரப்புபவர்கள் கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள், திமுகவினர், பாஜகவினர் என்று கட்சி சார்பற்று செய்கிறார்கள். ஒரு பக்கம் சனீஸ்வரன் கோவிலுக்கு மேலே செயற்கை துணை கோள் போகாது என்று உளறும் பாஜக பக்தகோடிகள், மறுபக்கம் வெள்ளைக்காரன் வந்ததால்தான் தமிழர்கள் நாகரிகம் பெற்றோம் என்று பேசும் திமுக பக்த கோடிகள், நடுவே ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டி விற்கும் காரியத்தில் கண்ணான அதிமுக கவுன்ஸிலர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த அதே திமுகவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஊர்வலம் போகிறார்கள். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த சிதம்பரத்தின் காங்கிரஸ் கட்சி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறது. ஸ்டெர்லை நிறுவனத்தின் குழும தலைமையான வேதாந்தா நிறுவனத்துக்கு சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வழக்குறைஞர். இவர்கள் பற்றிய ஒரு செய்தியும் இல்லாமல் மோடி ஒழிக என்றே தமிழக ஊடகங்கள் தினந்தோறும் முழங்குகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 60 வருடங்களில் மாறி மாறி ஆட்சி செய்த திமுகவும் அதிமுகவும் அவை உருவாக்கிய போற்றி பாதுகாத்த ஊழல்மிகு அதிகார வர்க்கமுமே சட்ட திட்டங்களை வளைத்து ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் சட்டங்களை மதிக்காமலும் தேவையான நெறிமுறைகளை பின்பற்றாமலும் தொழில் நடத்த உதவுகின்றன. இவ்வாறு மாநில அரசான தமிழக அரசு கொடுத்த அனுமதிக்கு “மோடி ஒழிக” கோஷம் போட்டு ஊர்வலமும் நடத்துகின்றன.

தொழில்நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வேண்டும். ஏறத்தாழ 15000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்கப்படும்போதும் விஸ்தரிக்கப்படும்போதும், ஏராளமான தொழிலாளர்களும் மக்களும் பயன்பெறுவார்கள். ஆனால், அதில் ஒரு சில தேவையான சுற்றுச்சூழல் சம்பந்தமான வேலைகளை செய்யாமல் இன்னும் இரண்டு கோடி லாபம் பார்க்கலாம் என்று தொழில்முனைவர்கள் முனையும்போதும், அதற்காக சில லட்சங்களை அதிகாரிகள் லஞ்சமாக பெற்றுகொள்ளும்போதுதான் விளைவு மக்களை பாதிக்கிறது. தேவையானது ஊழலற்ற அதிகார வர்க்கமும், ஊழலற்ற அதிகாரிகளை முன்னிருத்தும் மாநில அரசாங்கமுமே தவிர, தொழிற்சாலைகளை மூடுவதல்ல.


உதாரணத்துக்கு சில சொல்லவேண்டுமென்றால், ஆம்பூர் போன்ற இடங்களில் நடக்கும் தோல் பதனிடுதல் தொழில் மூலமாக தண்ணீர் விஷமாகியிருக்கிறது. சில குளங்களே சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. அமெரிக்கா ஐரோப்பா போன்ற இடங்களில் தோல்பதனிடுதலே நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த தோல்களை இந்தியா போன்ற “வளரும்” நாடுகளுக்கு அனுப்பி தோல்பதனிட்டு பெற்றுகொண்டு, பிராண்டு பெயரை அடித்து, பல மடங்கு விலை கூட்டி நமக்கே விற்கிறார்கள். (இது நவீன காலனியம்). இதுவும் சரியான ஊழலற்ற அதிகாரிகள், ஊழலற்ற அரசாங்கத்தின் மூலமாக கடுமையாக சட்டதிட்டங்களை கொண்டு வந்து நடைமுறை படுத்தி சீர் செய்யவேண்டிய விஷயமே. இந்த தொழில் எப்படி செய்தாலும் சுற்றுச்சூழல் அழிவுதான் என்றால் அதனை தடைசெய்யவும் துணிவு வேண்டும்.

ஸ்டெர்லைட் போன்ற செம்பு ஆலைகள் இந்தியாவெங்கும் இருக்கின்றன. எந்த இடத்திலும் கான்ஸர் என்பதோ அல்லது விசவாயு கசிவு என்பதோ கிடையாது. முட்டையை அழுகினால் வரும் நாற்றமே சல்பர் டை ஆக்ஸைடு. அது கெடுதி அல்ல. ஆனால் அந்த நாற்றம் சுற்றுப்புறத்தில் இருக்கக்கூடாது என்பது உண்மைதான். அதில்தான் ஊழலற்ற அதிகாரிகளின் தேவை வருகிறது. ஊழலற்ற மாநில அரசாங்கத்தின் தேவை வருகிறது. இதே போல அதிமுக திமுக அரசியல்வாதிகளில் சாராய ஆலைகள் தமிழகமெங்கும் இருக்கின்றன. அந்த ஆலைகளுக்கு 20 மைல் விஸ்தீரத்தில் அந்த சாராய ஆலைகளிலிருந்து வரும் நாற்றத்தை சகித்துகொண்டுதான் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏனெனில் எந்த அதிமுக அரசியல்வாதிகளோ திமுக அரசியல்வாதிகளோ சீமான் வைகோ போன்ற அரசியல்வியாதிகளோ போராட வரமாட்டார்கள்.

ஆனால், தமிழகத்தில் பலவிதமான அந்நிய இடையூறுகள் இருக்கின்றன என்று கருத நிச்சயம் இடமிருக்கிறது. கல்பாக்கத்தில் நடக்காத அணு உலை எதிர்ப்பு கூடங்குளத்தில் நடக்கிறது. சென்னை செங்கல்பட்டு மாநிலங்களில் இல்லாத தொழிற்சாலைகள் எதிர்ப்பு தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நடக்கிறது. எத்தனையோ மலைகளை திருடி கிரானைட் பண்ணும் அரசியல்வாதிகளின் அட்டூழியத்துக்கு எதிர்ப்பு வராத தமிழ்நாட்டில் தேனிமாவட்டத்தில் இருக்கும் ஒரு மலைக்குள் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க எதிர்ப்பு உருவாக்கப்படுகிறது.

இவை எல்லாமே துனிசியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட “மக்கள் போராட்டம்” மாதிரியை ஒப்பிட்டே அமைந்திருப்பது ஆச்சரியமானதல்ல என்றே கருதுகிறேன். இந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கெஜ்ரிவால் போராட்டமும், அதன் பின்னால், தமிழ்நாட்டிலும் மெரீனா கடற்கரையில் உருவாக்கப்பட்ட போராட்டமும், பாரதிய ஜனதா கட்சியையே குறி வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் “பொதுமக்கள் போராட்டம்” இந்திய எதிர்ப்பை அடிநாதமாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும். இதற்கு முஸ்லீம் இயக்கங்களும் சர்ச்சுகளும் ஆட்களை கொடுத்து உதவுவதும் நான் கவனித்தே வருகிறேன். இதில் ஆரம்ப குரல் கொடுத்தவர்கள் பொதுநலம் சார்ந்து குரல் கொடுத்தாலும் பின்னால் அதில் தமிழ் தேசிய கும்பல் புகுந்து கடத்துவதையும் பார்த்தே வருகிறேன்.

இணையத்தில் ஒருவர் கேட்டார்.

கூடங்குளம் – 20 வருடமாக
நெடுவாசல் – 15 வருடமாக
கதிராமங்கலம் – 25 வருடமாக
நியூட்ரினோ – 10 வருடமாக
ஸ்டெர்லைட் – 30 வருடமாக
காவிரி – 50 வருடமாக
உள்ள சிக்கல்.
இதில் எந்த வாழ்வாதாரத்தை #மோடி கெடுத்ததாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என தெளிவுபடுத்தினால் நலம்

கெஜ்ரிவால் டெல்லியில் சாதித்ததை போல, தமிழ்நாட்டு ஒட்டுமொத்த பரப்பையும் இந்த தொடர்ந்து உருவாக்கப்படும் போராட்டங்கள் தொடுமா? தமிழ் அரசியலை வேறு திசை கொண்டு செல்லுமா? என்பதையும் நாம் அவதானித்துகொண்டே இருக்க வேண்டும்.

இங்கே நியூட்ரினோ பற்றி உளறும் வைகோபால்சாமி நாயுடு போன்ற அதிமேதாவிகள், அவர்களுக்கு உண்மை ஒரு பொருட்டல்ல என்பதையும், உணர்ச்சிகரமான பேச்சின் மூலம், தமிழ்நாட்டை அழிவுத்திசையில் கொண்டு செல்வதே அவர்கள் நோக்கம் என்பதையும் நாம் உணர வேண்டும். இது போன்றே உணர்ச்சிகர பேச்சின் மூலம் மூன்று தலைமுறைகள் மூளை இழந்து, வேர்ச்சொல் ஆராய்ச்சியிலும், தமிழர் பெருமையை வெட்டி பேச்சிலும் கண்டு பிடிப்பதில் காலத்தை இழந்து அறிவியலும், தொழில்நுட்பத்திலும் பின் தங்கியது. இன்று ஐடி தொழில்நுட்பம் ஓரளவுக்கு தமிழர்களை விடுதலை செய்திருக்கிறது. ஆனால், நவீன அண்ணாதுரைகளும், நவீன பெரியார்களும், மீண்டும் ஒரு அடிமை எண்ணத்தையும் அறிவியல் வெறுப்பையும் விதைத்து அழிப்பார்களோ என்று அஞ்சுகிறது என் மனம்.

கான்பூரில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால், கங்கையே கழிவுநீராக ஓடும் நிலை.

Kanpur, India stands as a prime example of how tannery chemicals and wastewater can negatively affect health and ecosystems. In 2013, the city became the largest exporter of leather. About 80% of the wastewater is untreated and dumped straight into Kanpur’s main water source, the River Ganges. Farmland is swamped with blue-tinted water, poisoned with chromium III, lead, and arsenic. Decades of contamination in the air, water, and soil have caused a variety of diseases in the people who live in the area. Health problems include asthma, eyesight problems, and skin problems include: contact dermatitis, urticaria, hand eczema, fungal infection and atopic eczema.[16]

ஸ்டெர்லைட் பற்றிய அந்த கம்பெனியின் வைஸ் பிரசிடண்ட் அ. சுமதி அவர்கள் அளித்த பேட்டி
Chidambaram’s 2007 flip-flop let Anil Agarwal’s Vedanta take over Sesa Goa

Series Navigationவிளக்கு விருது – 21 வருடங்கள்புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | ச.தமிழ்ச்செல்வன் உரை
author

சின்னக்கருப்பன்

Similar Posts

8 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    பாராட்டுகள் நண்பர் சின்னக்கருப்பன்

    சி. ஜெயபாரதன், கனடா

    https://wordpress.com/post/jayabarathan.wordpress.com/20267

    What Are Neutrinos ?

    அற்பச் சிறு நியூடிரினோ அகிலத்தின்
    சிற்பச் செங்கல் !
    அண்டத்தைத் துளைத்திடும்
    நுண்ணணு !
    அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த
    கோடான கோடி
    அக்கினிப் பூக்கள் !
    சுயவொளிப் பரிதிகளின்
    வயிற்றில் உதித்தவை !
    வலை போட்டுப் பிடிக்க முடியாத
    வையகக் குஞ்சுகள் !
    ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் !
    கண்ணுக்கும் தெரியா !
    கருவிக்கும் புரியா !
    எதனுடனும் இணையாத் துகள்கள் !
    முன்னூறுக்கு மேற்பட்ட
    நுண்ணணுக்கள்
    விண்வெளியில் விளையாடும் !
    பிரபஞ்சத்தின்
    சீரமைப்பு முரணுக்குக்
    காரணம்
    நியூட்டிரி னோவா ?
    பிரபஞ்சச் சிசு நிறை அறிந்து
    பரிதியின் பிணைவு சக்தி அளப்பார் !

    ++++++++++++++++++

    நியூடிரினோ துகள் பௌதிகத்தில் நான் செய்த ஆய்வுகள் பரிதியை இயக்கிவரும் அணுப்பிணைவு [Nuclear Fusion Reactions that Power the Sun] இயக்கங்களை அளக்க உதவும். சூரியனின் இயக்க அளப்பாடுகளைத் துல்லியமாக அறிய முடிவது, பூமியில் செய்யப்படும் ஆய்வுகளைப் புரிந்து கொள்ளப் பேரளவு உதவுகிறது. கதிரியக்கமுள்ள அணுப்பிளவு சக்திக்கு மாறாக, அணுப்பிணைவு சக்தி மலிவானது, மிகையானது, எளிதாய்க் கிடைப்பது. பாதுகாப்பானது. இந்த அரிய நிகழ்ச்சி கனடாவின் ஸட்பரி நியூடிரினோ ஆய்வகத்தில் [SNOLAB] நேர்ந்தது, மாணவருக்கு ஓர் மெய்யான சாதனைத் தருணமாகும்.

    ஆர்தர் மெக்டானல்டு [பேராசிரியர், குயின் பல்கலைக் கழகம், கிங்ஸ்டன், அண்டாரியோ, கனடா]

    வட துருவச் சூழ்வெளியில் தோன்றிய நியூட்டிரினோக்கள் பொதுவாக முவான் நியூட்டிரினோக்கள் [Muon Neutrinos]. அவை பூமி விட்டத்தைக் [13,000 கி.மீ / 8000 மைல்] கடந்து தென் துருவத்தை நெருங்கும் போது, குவாண்டம் துடிப்புகளில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ [Tau] நியூட்டிரினோக்களாக மாறிப் பனிப்பேழைக் கருவியால் பதிவு செய்யப் படுகின்றன. இவ்விதம் ஆழ்ந்து உளவு செய்ய பனிப்பேழைத் திட்டம் எங்களுக்கு உதவி செய்கிறது.

    ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம்]

    நியூடிரினோ புது ஆய்வு நிகழ்ச்சி அணுப்பிணைவு சக்தி ஆக்கத்திற்குப் பாதை வகுக்கும்.

    2015 பௌதிக நோபெல் பரிசை ஜப்பான் விஞ்ஞானி தகாக்கி கஜிதாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா விஞ்ஞானி ஆர்தர் மக்டொனால்டு, தன் புதிய நியூடிரினோ ஆய்வு நிகழ்ச்சி பாதுகாப்பான அணுப்பிணைவு சக்திக்குப் பாதை வகுக்கும் என்று அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் வரப் போகும் அணுப்பிணைவு சக்தியில் கதிரியக்கம் எழுவதில்லை. மேலும் அணுப் பிணைவு சக்தியை எளிதாக, மலிவாக, மிகுதியாக மின்சக்தி உற்பத்தி செய்யப் பெற முடியும். இன்னும் 20 -25 ஆண்டுகளில் கதிரியக்கமுள்ள தற்போதைய அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் மெதுவாக நிறுத்த மடையும். இப்போது செய்து காட்டிய நியூடிரினோ ஆய்வு நிகழ்ச்சி அணுப்பிணைவு சக்தியைத் துல்லியமாக அளப்பாடு செய்யப் பயன்படும் என்று தெளிவாகத் தெரிகிறது. அதுபோல் சூரியனின் அணுப்பிணைவு சக்தியைத் துல்லியமாக அளக்க உதவும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

    [தொடரும்]

    +++++++++++++++

    https://wordpress.com/post/jayabarathan.wordpress.com/20267

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ‘Proposed neutrino project will affect groundwater resources in Western Ghats’

    Updated: Feb 26, 2015,

    Vijay Asokan and G Sundarrajan

    In “Tunnel Vision blocks neutrino lab progress” (Feb 23), T Jayaraman, a physicist by training and professor at the school of habitat studies, Tata Institute of Social Sciences, said opposition to the proposed Indian Neutrino Observatory (INO) in Theni has no scientific basis. He denied that the project that will be located deep underground in a cave will deplete groundwater, affect dams nearby or have radiation hazards.

    Neutrinos are a fundamental particle and the research is a frontier area in basic physics. Jayaraman argued that opposition to the project has put the clock back on Indian science when China has raced ahead in the same area.

    Reacting to the article Vijay Asokan and G Sundarrajan say Jayaraman has belittled the concerns of the poor and vulnerable sections living in the vicinity of the neutrino project.

    By putting scientific temper on a pedestal, the author, T Jayaraman, seeks to belittle the concerns of the poor and vulnerable sections living in the vicinity of the neutrino project who will bear the brunt of its impact. What is needed is a sensitive and humane approach that the author sadly seems to be lacking. There is a tone of arrogance that pervades the article.

    Which scientific community is insulted by our claims, as the author says? The same that takes miniature models of satellites and orbiters to Tirupathi to invoke the blessings of the almighty for success? The scientific community, at least in India, has been anything but rational.

    The author says there is no basis for groundwater resources being endangered. The entire Western Ghats are aquifers and birthplace of peninsular rivers. We maintain that groundwater resources will be badly affected if the project is implemented. Also, the Western Ghats where Pottipuram lies has been declared by UNESCO as an ecologically sensitive area. Has the ‘scientific community’ taken cognizance of this fact before embarking on the project? Or the fact that Pottipuram is an aquifer zone?

    The ‘scientific community’ claims that there will be no negative impact on the aquifers and nearby dams due to the vibrations caused by blasting the rocks. But the water in nearby streams or other surface-water bodies is connected hydraulically with the bedrock fracture system. Leaching of chemicals from blasting material will likely interact with rock-water interfaces which will impact the groundwater chemical composition. The change in composition could easily spread to nearby water streams and surface-water bodies.

    We would like to know if there is any report that has studied the effect of remaining nitrates or other chemicals on the groundwater or wells nearby. We demand that modeling studies related to possible man-made seismic events and possibility of tectonic fracturing during blasting be done and the local people be given access to the documents. Also is there any environmental monitoring group appointed to do simulation studies considering the possible and future environmental effects?

    Will the scientific community accept that shockwaves produced as result of a blast form are not preventable? The waves, whatever may be their strength, will certainly impact adjoining areas. At sub-surface, any disturbed geological structure can be highly unstable and no one can predict their time of destruction.

    The environmental assessment report developed by the project proponent (available on its website) says: “The experts are hopeful that during its normal operation phase, the laboratory is not expected to cause any damage to the environment. However, there is no detailed study regarding the impact of blasting of a large quantity of rock on the aquifer, the rivers and the reservoirs in the Environment Impact Assessment”.

    There have been flip-flops over the nature of the experiment. In some places, INO spokespersons say the neutrino detectors will only detect atmospheric neutrinos. Detecting high-energy, high-intensity neutrino beams – artificial or “factory” neutrinos – is only a theoretical possibility, they say. Yet at the same time the spokespersons have said foreign collaborations are not wrong. But such collaborations involve experiments with factory neutrinos, which have radiation hazards, unlike atmospheric neutrinos.

    INO is not an isolated, national project. It is a part of a series planned in various countries involving factory neutrinos. India has signed on to collaborating with various neutrino experiments including with the US’ particle physics lab and accelerator, Fermilab, besides the neutrino factory planned at Chicago.

  3. Avatar
    சுப. சோமசுந்தரம் says:

    நியூட்ரினோ திட்டத்தால் பெரிய ஆபத்து இல்லை என நாம் இன்று நம்ப போதிய முகாந்திரம் உள்ளது. எனினும் இப்போது தமிழகத்திற்கு வேண்டாம் என்னும் நிலைப்பாட்டினை எடுக்க சில காரணங்கள் உண்டு. அவை :

    1. அழிவுத் திட்டங்கள் அனைத்தும் தமிழனுக்கு என்று முடிவாகி விட்டது. இத்திட்டம் குறித்து மட்டும் தமிழனுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும் ? உண்மையில் இது மனித சமூகத்திற்கு பயனுள்ள திட்டம் என்றே வைத்துக் கொள்வோம். அதை தேசியக் கட்சிகளுக்கு ஒத்து வருகிற வேற்று மாநிலத்திற்குக் கொண்டு செல்லட்டுமே ! தமிழ்நாடுதான் உகந்த இடம் என்கிற பம்மாத்தை எல்லாம் தமிழன் நம்பித்தான் ஆக வேண்டுமா ? 

    2. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று இத்துறை சார்ந்த அறிஞரே சொல்லும்போது அதைப் பரீட்சித்துப் பார்க்க தமிழன்தான் கிடைத்தானா ? ஆம். அழிவென்றால் தமிழனுக்குத்தானே ? ஆரிய இன மேன்மையையும், தேவபாடையின் மேன்மையையும் தூக்கிப் பிடிக்கும் வடபுலத்தாரையும் இங்குள்ள புல்லுருவிகளையும் கேள்விக்குள்ளாக்கும் இனம் தமிழினம்தானே ! (கீழடி, ஆதிச்சநல்லூர் ஆய்வுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதை வேறு என்னென்று சொல்வது ? ) 

    3. நன்மை என்று நம்பித்தான் ‘பசுமைப் புரட்சி’க்கு பச்சைக்கொடி காட்டினோம். அன்றைய பஞ்சத்தின் தேவையாயிருந்திருக்கலாம். உடனே மரபுவழி விவசாயத்தை மீட்டிருக்க வேண்டும். ருசி கண்ட பூனை விடவில்லை. என்டோ சல்ஃபானுக்கு அடிமையாகி மண் மலடானது. No point of return. நச்சுணவிலிருந்து யாருக்கும் மீட்சியில்லை. சமூகத்தில் புற்றுநோய்க்கு இனி பஞ்சமில்லை. நியூட்ரினோவும் நன்றெனச் சென்று நம்மைக் கொன்று குவிக்க லாம்.

    4.எல்லாவற்றுக்கும் மேலாக சனநாயகத்தில் மக்கள் வேண்டாம் என்றால் வேண்டாம்தான். No means No என்பதற்குப் பொருளை ‘ Pink’ அமிதாப் பச்சனிடம் கேளுங்கள்.

    நிறையப் பேசலாம்.

  4. Avatar
    சுப. சோமசுந்தரம் says:

    எனது பின்னூட்டத்தில் முதலில் ஒரு சிறிய திருத்தம். It’s “Point of no return” in point 3. அடுத்து இரண்டாவதாக நான் வரிசைப்படுத்தியதில் சொல்லப்பட்ட துறை சார்ந்த அறிஞர் INO Director Vivek Datar. “நியூட்ரினோவைக் கொண்டு அணு ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கலாம். அதை வெடிக்கச் செய்யவும் செயலிழக்கச் செய்யவும் முடியும்” என்ற Alfred Tang ன் கருத்துக்கு Vivek Datarன் பதில் “இன்று வரை அது ஒரு ஆய்வுக் கட்டுரையாகத்தான் உள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்”.
    இறுதியாக ஒன்று. கட்டுரையாளர் தேவையின்றி கோபால்சாமி நாயுடு என வன்மத்தோடு குறிப்பிட்டதும், அண்ணாவையும் ஜபெரியாரையும் வம்புக்கு இழுத்ததும் அவரை இனம் காட்டுகிறது. அறிவுலகிற்கான முதிர்ச்சி இதில் வெளிப்படவில்லை

Leave a Reply to சி. ஜெயபாரதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *