Posted in

உதிரும் சிறகு

This entry is part 36 of 44 in the series 22 ஏப்ரல் 2012

நீலவானம்
இலக்கு இருக்கிறதா
செல்லும் மேகத்திற்கு
பழுத்த இலை உதிர்கிறது
இனி அவை எங்கெங்கு
பயணப்பட வேண்டியிருக்குமோ
அலை மெல்ல
கிசுகிசுத்தது
கரையோ மறுதலித்தது
காற்று வேகமெடுத்தது
பூக்கள்
ராஜபாட்டை விரித்தது
பறவைகள் கூட்டம்
மேற்கு நோக்கி பறந்தது
வானம் சூரியனுக்கு
விடை கொடுத்தது
விருட்சத்தின் நிழலில்
விழுந்த விதை
முளைவிடுமா
மணி காட்டும் கடிகாரத்தில்
நொடி முள்ளுக்கு
ஓய்வு இல்லை
மனிதன் மனிதனாக இருந்தால்
கடவுளின் இருப்பு
கேள்விக்குறியாகாதா
மரணப் புதிருக்கு
விடை சொல்லுபவர்கள் யார்?

Series Navigationநிகழ்வுசூல் கொண்டேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *