அன்பின் தீக்கொடி

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 24 of 41 in the series 10 ஜூன் 2012

மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்

விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ
அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய்
வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி
ஓயாமல் அலைகின்றேன்-நீயோ
மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை  சிபாரிசு செய்கிறாய்
இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய்
வெம்மையில்  நசுங்கி வழிகிறது இரவு
புயல் தின்ற  முதிர்ந்த நெற்கதிரென
உன்  வயலெங்கும் உதிரும் எனது இருப்பு
செ.சுஜாதா,
பெங்களூர்.
Series Navigationஜுமானா ஜுனைட் கவிதைகள்நெஞ்சு பொறுக்குதில்லையே
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *