Posted in

மனவழிச் சாலை

This entry is part 7 of 33 in the series 12 ஜூன் 2011

கவலைகள்

அவ்வப்போது கடுகாகவும்

கடுஞ்சீற்றத்துடனும் வரும்…

 

அதன் வருகையின்

அடையாளமாய் மனதில்

சிறு குழிகளும்

பெருங்குண்டுகளுமாய்

இருக்கும்…

 

எதிரே வருபவர்களெல்லாம்

அதில் தடுக்கி விழலாம்.

குழிகளையும் சாலையையும்

பொறுத்து காயங்களும்

ஏற்படலாம்.

 

மிகச் சிலரே அதில்

தண்ணீர் ஊற்றி

குழிகளை நிரப்பி

செடி வளர்த்து

அதில் ஒரு பூ

பூப்பது வரை கூடவே

இருந்து பராமரிப்பர்…

 

ஆனாலும் அவனுக்கு

அவன் மனதானது

எப்போதும்

அர்ப்ப ஆயுளுடன்

சீர் செய்யப் படுகிற

தார் சாலையாய்

குண்டும் குழியுமாய்.

 

குமரி எஸ். நீலகண்டன்

 

Series Navigationசதுரங்கம்ஒரிகமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *